வியாழன், 24 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 24, வரலாற்றில் இன்று.*
------------------------------------------------
*🌷உலக போலியோ ஒழிப்பு தினம் இன்று.*

*போலியோ நோயை பூமியிலிருந்து வேறோடு ஒழிக்க சபதம் ஏற்போம்!*
*போலியோ நோய்க்கிருமிகள் மிக வேகமாக தொற்றும் தன்மையுடையவை.*

*இது நரம்புமண்டலத்தை பாதித்த சில மணி நேரத்தில், பக்கவாதத்தை ஏற்படுத்தும். பொதுவாக இந்த நுண்கிருமி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே பாதிக்கும்.*

*போலியோ நுண்கிருமிகள் மலம் கலந்த தண்ணீர் மற்றும் உணவு பொருட்கள் மூலமாக பரவுகின்றன. இந்த கிருமியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கை கால்கள் அல்லது உடலின் பிற பகுதிகளில் நிரந்தர ஊனத்தை ஏற்படுத்துகிறது. இதை தடுப்பதற்கு ஒரே வழி வருமுன் காப்பதே ஆகும்.*

*இந்நோய் வந்தால் அதனை குணப்படுத்த எந்த ஒரு சிகிச்சையும் கிடையாது. இதற்கு ஒரே வழி குறிப்பிட்ட இடைவெளி காலத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே சமயத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதேயாகும். அவ்வாறு கொடுக்கும்போது போலியோ நோய் எதிர்ப்பு திறன் அனைத்து குழந்தைகளுக்கும் உருவாக்கப்படுகிறது.*
*🌷அக்டோபர் 24, வரலாற்றில் இன்று.*
------------------------------------------------
*🌷உலக தகவல் வளர்ச்சி தினம் இன்று.*

*உலகளவில் முன்னேற்றம் மற்றும் பிரச்சினைகளை கண்டறிந்து அதனை உலக தகவல் வளர்ச்சியில் தீர்க்க வேண்டும் என ஐ.நா.சபை முடிவு செய்தது. எனவே 1972ஆம் ஆண்டில் உலக தகவல் வளர்ச்சி தினமாக அக்டோபர் 24ஆம் தேதியை ஐ.நா.சபை அறிவித்தது.*
*🌷அக்டோபர் 24, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
 *🌷ஐக்கிய நாடுகள் தினம் இன்று.*

*ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ஆம்தேதி ஐக்கிய நாடுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு 1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம்  தேதி தோற்றுவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1948ஆம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படுகிறது.*

*ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா.வில் உலகில் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.*

*2ஆம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலக தலைவர்கள் ஒன்றுகூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும்.*

*1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அஸ்திவாரமிட்ட பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாகும்.*

*ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும்.*

புதன், 23 அக்டோபர், 2019

EMIS இணையத்தில் வருகை பதிவு தினந்தோறும் காலை 11மணிக்குள் முடிக்க வேண்டும் -நாமக்கல் CEO


22.08.2017 அன்று ஜாக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு நாள் ஊதியத்தை மீண்டும் DEO வழங்க ஆணை - திருவாரூர் மாவட்ட ஆசிரியர் மன்றம்


தீபாவளி 2019 - தீ விபத்து ஏற்படாமல் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள்:22.10.2019




*🌷அக்டோபர் 23, வரலாற்றில் இன்று.*
------------------------------------------------
*🌷மோல் நாள் இன்று.*

*மோல் நாள் (Mole Day) என்பது வேதியியலாளர்களும், வேதியியல் மாணவர்களும் ஆண்டு தோறும் அக்டோபர் 23 ஆம் நாளன்று காலை 06:02 மணிக்கும் மாலை 06:02 மணிக்கும் இடையில் அதிகாரபூர்வமற்ற நிலையில் எடுத்துக் கொள்ளும் ஒரு விடுமுறை நாள் ஆகும். இந்நாளை அவர்கள் அமெரிக்க முறையில் 6:02 10/23 எனக் குறிக்கிறார்கள். நேரம், நாள் ஆகியன அவகாதரோ மாறிலியைக் (6.02×1023) கொண்டு குறிக்கப்பட்டது. அவகாதரோ மாறிலி என்பது ஒரு மோல் வேதிப் பொருளில் காணப்படும் துணிக்கைகளின் (அணுக்கள் அல்லது மூலக்கூறுகள்) எண்ணிக்கை ஆகும்.*
*🌷அக்டோபர் 23 வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------
*🌷1911ஆம் ஆண்டு முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த விமானத்தை இத்தாலியின் போர் வீரர் லிபியாவில் இருந்து துருக்கிய ராணுவ நிலைகளுக்கு ஓட்டிச் சென்றார்.*
*🌷அக்டோபர் 23, வரலாற்றில் இன்று.*
------------------------------------------------
 *🌷லெனின் அக்டோபர் புரட்சிக்கு அறைகூவல் விடுத்த தினம் இன்று (1917).*

*போல்ஷெவிக் புரட்சி {Bolshevik revolution)* *எனவும் அறியப்படும் அக்டோபர் புரட்சி (October revolution), 1917ஆம்* *ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் பெட்றோகிராட்டில்* *(தற்போது லெனின்கிராட்) ஏற்பட்ட ரஷ்ய பொதுவுடைமைக் கொள்கைப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும். இது கார்ல்* *மார்க்ஸின்கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது* *பொதுவுடைமைப்புரட்சியாகும்.1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின்* *அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் பொதுவுடைமை* *புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது.*
*அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் ஆரோக்கியம், பட்டினி என்ற கொடுமையை முற்றிலும் சோவியத் மண்ணிலிருந்து விரட்டியது உள்ளிட்ட பெரும் சாதனைகளை சோசலிச திட்டங்கள் சாதித்தன. சோவியத் ஒன்றியத்தின் இந்த சாதனைகள், மேலை நாடுகளிலும் பிரதிபலித்தது. அங்கு உழைப்பாளி மக்களுக்கு குறைந்த பட்ச உரிமைகளையும் சலுகைகளையும் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியை ஆளும் வர்க்கங்களுக்கு சோவியத் சாதனைகள் ஏற்படுத்தின.*