செவ்வாய், 26 டிசம்பர், 2017
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் அவர்கள், தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் இரண்டாம்பருவ விடுமுறைக்கால கணினிபயிற்சியை முழுமையாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார்...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ,இனமானக்காவலர் ,மேனாள் மேலவை உறுப்பினர்.
பாவலர்.மதிப்புமிகு.க.மீஅவர்கள் ,
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் இரண்டாம்பருவ விடுமுறைக்கால கணினிபயிற்சியை முழுமையாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார்.
விடுமுறைக்காலப்
பயிற்சி என்பது பழிவாங்கும் நடவடிக்கையாகி விடக்கூடாது என்றும்,பழிவாங்கும் நடவடிக்கைகள் கூடாது என்று நீதிமன்றம் வழிகாட்டுதல் செய்துள்ளது என்றும்,
பள்ளிப்பணி நாளில் ஏற்பட்ட வேலைநாள் இழப்பை பள்ளியில் வேலைசெய்து ஈடுசெய்வதற்கு வேலைநாட்கள் குறிப்பிட்டு செயல்முறைகள் பிறப்பிக்கவேண்டும் என்றும் மதிப்புமிகு.க.மீ.அவர்கள் வலியுறுத்திஉள்ளார்.இப்பொருள் சார்ந்து
ஜாக்டோ-ஜியோவின் மாநில அமைப்புஇன்று(26.12.17)அன்று தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரை சந்தித்து வலியுறுத்துகிறது.
#நாம்வெல்வோம்
-முருகசெல்வராசன்.
விடுமுறைக் கால கணினிப்பயிற்சிக்கு கட்டாயப்படுத்தப்பட மாட்டாது...
அன்பானவர்களே!வணக்கம்.
1)விடுமுறைக் கால
கணினிப்பயிற்சிக்கு கட்டாயப்படுத்தப்பட மாட்டாது.
2)துறைத்/பல்கலைக் கழகத்தேர்வு எழுதுவோர் /வெளிநாடு சென்றோர் விடுமுறையைப்பயன்படுத்திக்கொள்ளலாம்.
3)கணினிப்பயிற்சியில் விரும்பின் பங்கேற்போர் பங்கேற்புச்(வருகை)சான்றிதழ் பெற்று உரியமாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் வேலைநாளாக பாவித்திடுவதற்கு
விண்ணப்பம் செய்திட வேண்டும்.
4)கணினிப்பயிற்சியில் பங்கேற்காதோர்
வரும் ஏப்ரல் 30க்குள் எந்தெந்த சனிக்கிழமைகளில் பள்ளிகளில் ஈடுசெய்வர் எனும் விபரத்தை மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உரிய.மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலரிடம் அளிப்பர்.இதனடிப்படையில் கணினிப்பயிற்சியில் பங்கேற்காதோர் பள்ளியில் வேலைநாளை ஈடுசெய்ய வழிவகை செய்யப்படும்.
5)மேற்கண்ட விபரத்தை மாநில ஜாக்டோ-ஜியோ சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக தெரிவிப்பர்.
தகவல்:
மதிப்புமிகு.பாவலர்.க.மீ.அவர்கள்.,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
திங்கள், 25 டிசம்பர், 2017
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












