செவ்வாய், 26 டிசம்பர், 2017

விடுமுறைக் கால கணினிப்பயிற்சிக்கு கட்டாயப்படுத்தப்பட மாட்டாது...

அன்பானவர்களே!வணக்கம்.

1)விடுமுறைக் கால
கணினிப்பயிற்சிக்கு   கட்டாயப்படுத்தப்பட மாட்டாது.

2)துறைத்/பல்கலைக் கழகத்தேர்வு எழுதுவோர் /வெளிநாடு சென்றோர் விடுமுறையைப்பயன்படுத்திக்கொள்ளலாம்.

3)கணினிப்பயிற்சியில் விரும்பின் பங்கேற்போர் பங்கேற்புச்(வருகை)சான்றிதழ் பெற்று உரியமாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்களிடம்  வேலைநாளாக பாவித்திடுவதற்கு 
விண்ணப்பம் செய்திட வேண்டும்.

4)கணினிப்பயிற்சியில் பங்கேற்காதோர் 
வரும் ஏப்ரல் 30க்குள் எந்தெந்த சனிக்கிழமைகளில் பள்ளிகளில்  ஈடுசெய்வர் எனும் விபரத்தை மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உரிய.மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலரிடம் அளிப்பர்.இதனடிப்படையில் கணினிப்பயிற்சியில் பங்கேற்காதோர் பள்ளியில் வேலைநாளை ஈடுசெய்ய வழிவகை செய்யப்படும்.

5)மேற்கண்ட விபரத்தை மாநில ஜாக்டோ-ஜியோ சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக தெரிவிப்பர்.

தகவல்:
மதிப்புமிகு.பாவலர்.க.மீ.அவர்கள்.,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக