புதன், 25 ஏப்ரல், 2018

PF _ GPF __ Rate of interest of the financial year 2018-19...

வேண்டுகோள்~ நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் அன்பான மறவர்களே!மறத்தியரே!! மே 8இல் சென்னையில் ஒன்று கூடுக!!!


மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படல் வேண்டும்  என்று வலியுறுத்தி நம்முன்னோடிகள் போராட்டம் தொடங்கியப்பொழுது தமிழகத்தின்  முதலமைச்சர்.மாண்புமிகு. டாக்டர்  எம்.ஜி.ஆர் அவர்கள்.

 ஒன்றுபட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெற்றப்
பொழுது தமிழகத்தின்  முதலமைச்சர் மாண்புமிகு .ஜானகி இராமச்சந்திரன் அவர்கள்.

 போராட்டம்உச்சபட்ச கொதிநிலையை எட்டியப்பொழுது தமிழகத்தில் மேதகு குடியரசுத்தலைவர்ஆட்சி.தமிழகத்தின் ஆளுநர் டாக்டர்.பி.சி.அலெக்சாண்டர்அவர்கள்.

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இல்லாதநிலையிலும் தமிழக ஆளுநரும்,தலைமைச்செயலாளரும் ஏவிய  எல்லாவிதமான அச்சுறுத்தல்களையும் துச்சமென மதித்து ஒன்றுபட்டு போராடி தமிழகத்தின் ஆளுநர் அரசை பணியச்செய்து  போராட்டத்தை அச்சுறுத்திய  தமிழகத்தின்தலைமைச்செயலாளருடன் உடன்பாடு கண்டனர் நம்முன்னோர்.

ஒன்றுபட்டு 1988இல் போராடியதால்  மத்தியஊதியம்,ஒருமாத போனஸ்ஆகியகோரிக்கைகளைதேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பரிசீலிக்கும் என உடன்பாடு 22.07.1988அன்று  கையெழுத்தானது.

தமிழக
மக்களால்தேர்ந்தெடுக்கபட்ட அரசு நம் கோரிக்கைகளுக்கு ஆதரவுநல்கிய மாண்புமிகு. டாக்டர்.கலைஞர் தலைமையில் அமைந்தது.

தமிழக முதல்வர்.டாக்டர்.
கலைஞர்அவர்கள் தனது  தேர்தல் வாக்குறுதியின்படி மத்திய ஊதியம் வழங்கினார்கள்.

இன்றையநாள் வரையிலும் மத்திய ஊதியத்தினை தமிழகத்தின்  ஆசிரியர்களும்,அரசு ஊழியர்களும் பெறுகின்றனர் என்றால் அதற்கு அடிப்படையான காரணம் நம்முன்னோர்களின் தியாகம்நிறைந்த போராட்டங்களும்,நம்முன்னோர்களின் போராட்டங்களை ஆதரித்து ஆதரவு போராட்டங்கள்
நடத்தியும், ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு மத்தியஊதியம் வழங்கிய டாக்டர்.கலைஞர் அவர்களின் நற்ச் செய்கையுமே  ஆகும். 

இத்தகு போராட்டப்பாரம்பரியமும்,வரலாற்றுப்பெருமையும் கொண்ட நாம் நம் முன்னோர்களை நினைவில்கொண்டு, பொதுச்செயலாளர்.பாவலர்.அய்யா அவர்களின் வழிகாட்டுதலில்  எதிர்வரும் 08.05.18இல்  ஒன்றுகூடுவோம்;
சென்னையை
முற்றுகையிடுவோம்;
வென்றுகாட்டுவோம்.
                   நன்றி.
           ~முருகசெல்வராசன்.

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

அரசிடம் ஓய்வூதிய விபரம் இல்லை - ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி...

BE Admission க்கு மே 3 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்...


பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு மே 3 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 30 ம் தேதி வரை ஆன் லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 567 கல்லூரிகள் பங்கேற்றுள்ளன...

DSE PROCEEDINGS-DEC 2017 -NMMS EXAM -RESULT REG...

திங்கள், 23 ஏப்ரல், 2018

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலை மற்றும் திருச்செங்கோடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மனிதசங்கிலி போராட்டம் (23.04.18-திங்கள்)...

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி
நாமக்கல் பூங்கா சாலை மற்றும் திருச்செங்கோடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மனிதசங்கிலி போராட்டம் (23.04.18-திங்கள்) மாலை 05.00 மணிக்கு நடைபெற்றது. 

இதில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் தலைமையில் மன்றப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ். மூர்த்தி அவர்களுடன் மன்றத்தின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.ரவிக்குமார் மற்றும் பள்ளிபாளையம் ஒன்றியத் தலைவர் திரு.கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்...

இரண்டு மாவட்டங்களுக்கு பணியிடை பயிற்சி ஒத்தி வைப்பு~ஜுன் மாதம் நடைபெறும் என அறிவிப்பு…

எல்கேஜி முதல் 10ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் ~கூடுதலாக வசூலித்தால் புகார் அளிக்கலாம்…

போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மொபைல் ஆப்~பள்ளிக்கல்வித்துறை வெளியீடு…

எப்ரல்~23 :உலக புத்தக நாள்…


ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம் என்கிறது யுனெஸ்கோ.

 ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவுகின்றன என்றும், மனித குலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில் சேர்ந்திசை போல ஒலிக்கும் குரல்களை கொண்டாடுகிறது என்றும் கூறப்படுகிறது.