வியாழன், 22 நவம்பர், 2018

அரசாணை (நிலை) எண். 222 பள்ளிக் கல்வி (அகஇ1) துறை Dt: October 24, 2018 -பள்ளிக் கல்வி - சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு - மாவட்டத்திற்கு ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாதிரி பள்ளிகள் உருவாக்குதல் - நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

புள்ளியல் ஆய்வாளர் தேர்வு ஒத்திவைப்பு - TNPSC



சென்னை: கஜா புயல் பாதிப்பு காரணமாக வரும் 24 ஆம் தேதி நடக்க இருந்த புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கஜா புயல் பாதிப்பு காரணமாக வரும் 24 ஆம் தேதி நடக்க இருந்த புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வரும் 28 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து  டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று வரும் நவம்பர் 25 முதல் 30 வரை நடக்கவிருந்த வனவர், வனக்காவலர், ஓட்டுநர் உரிம வனக்காவலர் பணியிடங்களுக்கான தேர்வு, கஜா புயல் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், கஜா புயல் பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட ஆன்லைன் தேர்வுகளுக்கான புதிய தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


சேலம் மாவட்டத்தில் 5 மையங்களில் வனவர், வனக்காப்பாளர் பணிக்கு ஆன்லைன் தேர்வு 25ம் தேதி தொடங்குகிறது...

PAN எண் விண்ணப்பத்தில் இனி தந்தை பெயர் கட்டாயம் இல்லை~விதிமுறையில் மாற்றம்…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயலாளர் முருகசெல்வராசன் அவர்களின் நன்றி தெரிவித்தலும், மத்திய,மாநில அரசுகளுக்கு விடுத்துள்ள வேண்டுகோளும். நல்லோரே!பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவீர்!

அன்பானவர்களே!வணக்கம்

 " வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் 
 வாடினேன் பசியினால் இளைத்தே 
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த 
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் 
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் 
 நேர்உறக் கண்டுளந் துடித்தேன் 
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன் "

எனும் வடலூர் வள்ளலார் அவர்களின் வரிகளிள் உள்ளார்ந்த அர்த்தம் மேலும் ஒருமுறை  ஓங்கி அடித்து என் உள்ளத்தில்  அழுத்தமாக  பதித்துவிட்டது 21.11.18 ஆம் நாளைய
 நாகை -வேதாரண்யம் -தலைஞாயிறு பயணம் என்றால் ,இது வெறும் மிகையல்ல -உண்மை.

 ஆசிரியர் சங்கப் பொது வாழ்வில் எல்லாவிதமான தாக்குதல்களையும்  தாங்கிக்கொண்டு கால்நூற்றாண்டு காலத்திற்கும் அதிகமாக   பணியாற்றி வருகிறேன்.
எவ்வளவோ பணிகளுக்கு 
உடலை,மனதை, வருத்திக்கொண்டுள்ளேன்.
பொருளை,
நிதியை  இழந்துள்ளேன்.

இவைகளோடு ஒப்பீடு செய்கையில் கடந்த இரண்டு் நாள்களாக 
கசா புயலின் கோரத்தாண்டவத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவிகள் செய்வது என்று  ஏற்படுத்திக்கொண்ட சிரமங்கள் தான் மிகப் பெரிய விளைவை, பயனை,பலனைத்  தந்துள்ளது என்பேன்.

கடந்த 19.11.18 நண்பகல் முடிவாற்றி 20.11.18 
பிற்பகலுக்குள் நிறைவேற்றி சரக்குந்தில் நிரப்பிவைத்து 21.11.18 பயணவழியெங்கும் நன்கொடை  செலவழித்து பொருள்கள் வாங்கிக் கொண்டு  பயண வழியில் பல்வேறு இடர்கள், தடைகள் தாண்டி  அந்திவேளையில் தலைஞாயிறுக்குள் நுழைந்து  ஏற்றுக்கொண்ட மக்கள்பணியை முடித்தது என்பது புல்லின் நுனி அமர்ந்த பனி ஆதவன் ஒளியில் நீங்கியது போன்று எளிதாய் எல்லா சிரமங்களையும் கரைத்து விட்டது;நீக்கி போக்கி விட்டது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட,
ஒன்றியப் பொறுப்பாளர்கள்,
மன்ற  முன்னோடிகள், 
 இரக்ககுணமும்,ஈகைப் பண்பும் நிறைந்த 
ஆசிரியப்பெருமக்கள்,நல்லுள்ளம் கொண்டோர் என எல்லோரும் ஒரே புள்ளியில் நின்று உதவியதால்  தான் 
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் மன்றம் சார்பில் தலைஞாயிறு ,
வேதாரண்யம் பகுதி மக்களுக்கு மூன்று இலட்சத்துக்கும் மேலான நிவாரணப்பொருள்கள் சாத்தியமாயிற்று.
நல்லோரின் உதவியினாலேயே நிவாரணப்பொருள்கள் 
வழங்க முடிந்தது; 
வழங்கப்பட்டுள்ளது.

காலத்திற்கேற்ற பொருத்தமான உதவியை 
செய்து முடிப்பதற்கு உதவியுள்ள ஒவ்வொருவருக்கும் ஆசிரியர்மன்றம் மனம் நிறைந்த  நன்றி தெரிவித்து இருகரம் குவித்து சிரம் தாழ்த்தி  வணங்குகிறது.

திருவாளர்கள் வெ.பாலமுரளி, இர.செகநாதன்,
 கா.செல்வம்,
அ.செயக்குமார்,
கா.முருகேசன்,
மெ.சங்கர்,
முருகசெல்வராசன் ஆகியோர் கொண்ட பொறுப்பாளர் குழு
ஒருபகலும்,
ஓர்இரவும் கஜாவாலும்,
வேறு வகையாலும் பாதிக்கப்பட்டுள்ளப்
பகுதிகளில் பயணித்துள்ளது.

 "தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று கற்றுத்தரப்பட்டுள்ள  தஞ்தைத் தரணியின்" மக்களுக்காக
நாமக்கல் மாவட்ட ஆசிரியர்மன்றத்தின் சார்பில் மத்திய,மாநில அரசுகளிடத்தில் நான் வேண்டுவது 
"ஏழைகள்வயிறு எரியச் செய்யாதே" என்பதேயாகும்.

"சோழநாடு சோறுடைத்து" என்றும் "சோறளிக்கும் சோணாடு" என்றும்"
போற்றப்பட்டுள்ள தேசத்தின் மக்களை
 "ஒருவேளை உணவிற்கு கையேந்த விடாதே" என்பதேயாகும்.

நல்லோர்
அனைவருக்கும் 
என் நன்றி.
-முருகசெல்வராசன்

புதன், 21 நவம்பர், 2018

GENERAL ELECTION TO LOK SABHA 2019~Form...

மனிதர்களுக்கு ஆதார் எண் போன்று நிலங்களுக்கு பூதார் எண்...

ஆசிரியர்கள்-மாணவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலை கண்டறிந்தால் தபால் அனுப்பலாம் - கலெக்டர் அன்பழகன்


கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சமூக பாதுகாப்புத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், குழந்தைகள் துன்புறுத்தப்படுவதை தடுத்து அவர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார்.


அப்போது அவர் பேசுகையில், “குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமை, குழந்தை திருமணம், கல்வி இடைநிற்றல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஆகியவற்றை கண்டறிந்தால் ஆசிரியர்கள், மாணவர்கள் அது பற்றிய தகவல் குறித்து கடிதம் எழுதி, தாந்தோன்றிமலை கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரேயுள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தபால் அனுப்பலாம்“ என்றார்.

தொடர்ந்து பெண் கல்வியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், இடஒதுக்கீடு விவரம் ஆகியன குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியின் போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் முகவரி அச்சிடப்பட்ட தபால் கடிதம் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சு.கவிதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நன்னடத்தை அதிகாரி தேவகி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி, மாவட்ட கல்வி அதிகாரி கனகராஜ், இலவச சட்டப்பணிகள் ஆணைகள் குழு உறுப்பினர் சொக்கலிங்கம் உள்பட மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

குழந்தைகள் சேமிப்பு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் சட்ட பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் வேண்டுகோள்


கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புதிட்ட சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் அலகு மற்றும் குளித்தலை தொண்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு உறுப்பினர், சொக்கலிங்கம் கலந்துகொண்டு பேசுகையில், “குழந்தைகள் வீட்டில் இருந்து பள்ளி மற்றும் வெளி இடங்களுக்கு பாதுகாப்பாக சென்று வரவேண்டும். குழந்தைகள் செல்போன் பேசுவதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும்.
குழந்தைகள் சேமிப்பு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அனைவருடன் அன்பாக பழக வேண்டும்” என்றார்.

உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் புகைப்பட கண்காட்சி


மாமல்லபுரம், 
இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு அரசு கலை மற்றும் கலாசார துறையால் மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் நேற்று முதல் 25-ந்தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது.


இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் புராதன சின்னங்களின் முக்கியத்துவம் மற்றும் புராதன நினைவிடங் களை போற்றி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது

இதையொட்டி நேற்று மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம் ஆகிய புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கட்டணம் இன்றி இலவசமாக கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டனர். திரளான பயணிகள் தங்கள் குடும்பத்துடன் மாமல்லபுரம் வருகை தந்து புராதன சின்னங்களை இலவசமாக கண்டுகளித்தனர். இதனால் கடற்கரை கோவில் அருகில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
முதல் நாளான நேற்று கடற்கரை கோவில் அருகில் புராதன சின்னங்கள் பற்றிய புகைப்பட கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சென்னை வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.
இதில் ஜெர்மனி தூதர் கரின்ஸ்டோல், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட பொதுமக்களும் புகைப்பட கண்காட்சியை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
இதில் தொல்லியல் உதவி அலுவலர் காயத்ரி, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் பரணிதரன், மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டல் மேலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.