செவ்வாய், 11 ஜூன், 2019
திங்கள், 10 ஜூன், 2019
புதியக் கல்விக்கொள்கை வரைவு அறிக்கை கலந்தாய்வுக்கூட்டம் ...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்(கிளை).
----------------------------------------
புதியக் கல்விக்கொள்கை வரைவு அறிக்கை கலந்தாய்வுக்கூட்டம்
----------------------------------------
இடம்:
எசு.பி.எம்.,மேல்நிலைப்பள்ளி,
நாமக்கல்.
நாள்:
15.06.19(சனி).
நேரம்:பிற்பகல் 02.30மணி.
அன்பானவர்களே!வணக்கம்.
மத்தியரசு வெளியிட்டுள்ள
புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள். தங்களது ஒன்றிய ஆசிரியப் பெருமக்களின் மேலான பார்வைக்கும், கவனத்திற்கும் வரைவு அறிக்கையை கொண்டுச் செல்லுங்கள்.
ஒன்றிய ஆசிரியப் பெருமக்களின் கருத்துக்களை கேட்டுப்பெறுங்கள் . ஒன்றியளவிலான ஆசிரியர்களின் கருத்துக்கள் கொண்ட அறிக்கையை இறுதிசெய்துக்கொள்ளுங்கள்.
இத்தகு ஒன்றிய அளவிலான அறிக்கைகளை இக்கூட்டத்தில் கலந்தாய்வு செய்வதற்கு திட்டமிடுங்கள்.
வழிவகை காணுங்கள்.
மாவட்ட அளவிலான
அறிக்கையை மாநில அமைப்பிற்கு பரிந்துரை செய்திடுவதற்கு உதவிடுங்கள்.
தேசத்தின் கல்வியை வடிவமைப்பதில், கட்டமைப்பதில் முழுக்கவனம் கொண்டு செயல்பட வேண்டிய மிக முக்கியமான காலக்கட்டம் இது. எனவே,இக்கூட்டத்தின் தீவிரத்தன்மை, முக்கியத்துவம்,தேவை ஆகியனவற்றை மனதில் நிறுத்தி விரைந்து செயல்படுங் கள்!
ஆசிரியர் மன்றத்தினர் அனைவரும்
இக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பங்களிப்புச் செய்யுங் கள்! கலந்தாய்வுக்கூட்டத்தை வெற்றிகரமாக்குங்கள்! நன்றி.
-முருகசெல்வராசன்.
07.06.19 ஆம் நாளைய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது...
அன்பானவர்களே!வணக்கம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட இணைப்பதிவாளர் மற்றும் நாமக்கல் சரக துணைப்பதிவாளர் ஆகியோரிடம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்
சங்க முறைகேடுகள் குறித்து புகார் தெரிவித்தது.
ஆசிரியர் மன்றத்தின் புகார்களை ஏற்றுக்கொண்டு நாமக்கல் சரக கூட்டுறவு துணைப்பதிவாளர் கூட்டுறவு விதிகளின் படி விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என்று கடிதம் அளித்துள்ளார். நாமக்கல் சரக கூட்டுறவு துணைப்பதிவாளரின் நடவடிக்கைகளை பெரிதும் வரவேற்றும்,
விசாரணை நடவடிக்கைகளில் நம்பிக்கைக் கொண்டும் 07.06.19 ஆம் நாளைய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவு துணைப் பதிவாளருக்கு ஆசிரியர் மன்றம் தெரிவித்துள்ளது.
இப்பெரும் பணியில் பங்கேற்றோருக்கும்,
பங்களிப்புச் செய்வோருக்கும் ஆசிரியர்மன்றம் நன்றி பாராட்டுகிறது.
-முருகசெல்வராசன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)