வியாழன், 5 மார்ச், 2020

தமிழக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியருக்கு தேசிய விருது ~ விவரம் அனுப்ப சிஇஓக்களுக்கு சுற்றறிக்கை...

தமிழக அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு சார்பில் தேசிய விருது வழங்கப்படுகிறது. தகுதியுள்ள ஆசிரியர்களின் விவரம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை ஐசிடி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த 2018 மற்றும் 2019க்கான தேசிய விருதுகள் வழங்க, தகுதியான சிறந்த ஆசிரியர்களின் கருத்துருக்களை அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆர்வத்துடன் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசின், ஐசிடி திட்டத்தின் கீழ் தேசிய விருது வழங்கப்படுகிறது. 

அதன்படி, கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டிற்கு, தகுதியுடைய அனைத்து வகை ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை, சிஇஓக்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 

அத்துடன், ஆதார் இணைப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்துருக்களை 2பிரதிகளில் பரிந்துரைத்து, கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கு தனித்தனியாக, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநருக்கு (தொழிற்கல்வி) வரும் ஜூலை 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இத்திட்டம் ஆசிரியர்களுக்கு மிகுந்த பயனுள்ளது என்பதால், சிஇஓக்கள் தனி கவனம் செலுத்தி செயல்பட வேண்டும். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின், www.ciet.nic.in, www.ncert.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து அறிந்துகொண்டு, அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். 

அதேசமயம், கருத்துரு அனுப்பப்படும் ஆசிரியர்கள் எந்தவிதமான புகார்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் உட்படாதவராக இருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் நீதிமன்ற வழக்குகள், குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படாதவர் என முதன்மை கல்வி அலுவலர்கள் சான்றளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதன், 4 மார்ச், 2020

பெண் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ள ஊராட்சியில் அவர்களது கணவர்கள் அல்லது உறவினர்கள் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடவோ, இருக்கையில் அமரவோ கூடாது- உதவி இயக்குநர்


ஏப்ரல் 2020_எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு- முதன்மை கண்காணிப்பாளர் வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள், துறை அலுவலர்கள் நியமனம் செய்ய ஆணை வேண்டுதல் சார்ந்து அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் செயல்முறை நாள்:03.03.2020


பள்ளிகளின் நிலையான பராமரிப்பு விதிமுறைகள்

DSE Proceedings_ பள்ளிக்கல்வி_மத்திய அரசின் உதவித்தொகை-NMMS தேர்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை கிடைக்காத மாணவர்கள் விவரங்கள் கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை



நாமகிரிப்பேட்டை வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் (03-03-2020) ~நாளிதழ் செய்திகளில்...



தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்- கடனுதவி தொகை வழங்குதல் சார்ந்த தகவல்

மாவட்ட அளவில் 4,5 வகுப்புகளுக்கு கற்றல் அடைவுகள் அடிப்படையில் தேசிய அடைவுத்தேர்வு(NAS)வினா மாதிரிகளை தயாரித்தல் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2 நாள் பணிமனைப்பயிற்சி



நாமகிரிப்பேட்டையில் சிறுவிடுப்பு உள்ளிட்ட அனைத்து வகை விடுப்புகளுக்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியப்பெருமக்களை மட்டும் குறிவைத்து அலைக்கழிப்பதை,பழிவாங்குவதை கண்டித்திடுக!தடுத்து நிறுத்திடுக!

ஒரு அரசாணை வெளியாகிறது.
இவ்வரசாணைக்கு துறைத்தலைவர் செயல்முறை இடவில்லை.
நாமக்கல் மாவட்ட 
முதன்மை அலுவலர்  துறைத் தலைவரின் செயல்முறையை மேல் நடவடிக்கைக்கு பகிரவில்லை.
நாமகிரிப்பேட்டை வட்டார அலுவலரும்  தனக்குள்ள வானாளவிய செல்வாக்கில் சுற்றறிக்கை வெளியிடவில்லை.

விடுப்பு விண்ணப்பம் தனது பரிந்துரைக்கு வேண்டும் எனும் 
புத்தம் புதிய அவதார புருசர்களும் 
கடித எண் இட்டு கடிதமோ...
சுற்றறிக்கையோ தனது தொகுப்பு பள்ளிகளுக்கு அனுப்பி வைத்திட வில்லை.

ஆனாலும் ,
வெற்று மிரட்டலில்...
அதிகார தோரணையில்.... அத்துமீறலில் ...
பழிவாங்கும் எண்ணத்தில்...
அலைக்கழிக்கும் உள்நோக்கில் ...
மோதலை உருவாக்கி குளிர் காயும் பேராசையில்...
வட்டாரஅலுவலர்களின் ஓரவஞ்சனைச்
செயல்பாடுகள் நீள்கிறது.

இக்
கொடுமையை - 
கொடிய அராசகத்தைக் கண்டித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்
நாமகிரிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்.