வியாழன், 25 ஜூன், 2020
அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள் : 10/03/2020 ஆசிரியர்களுக்கு பொருந்துமா என விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும் அரசின் விளக்கத்திற்காக காத்திருப்பதாகவும் திருவண்ணாமலை மாவட்டக் கருவூல அலுவலர் அம்மாவட்ட அனைத்து சார்நிலைக் கருவூல அலுவலர்களுக்கும் கடிதம்.
*அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள் : 10/03/2020 ஆசிரியர்களுக்கு பொருந்துமா என விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும் அரசின் விளக்கத்திற்காக காத்திருப்பதாகவும் திருவண்ணாமலை* *மாவட்டக் கருவூல அலுவலர் அம்மாவட்ட அனைத்து சார்நிலைக் கருவூல அலுவலர்களுக்கும் கடிதம்*
*🖥️ஜூன் 25,* *வரலாற்றில் இன்று:விண்டோஸ் 98 இயங்குதளம் ( operating system) மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்ட தினம் இன்று (1998).*
ஜூன் 25,
வரலாற்றில் இன்று.
விண்டோஸ் 98 இயங்குதளம் ( operating system) மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்ட தினம் இன்று (1998).
இந்த இயங்குதளம் விண்டோஸ் 95 இன் மேம்படுத்தப் பட்ட ஓர் பதிப்பாகும். இவ்வியங்தளத்தில் புதியதாக USB அறிமுகம் செய்யப் பட்டது. FAT32 கோப்புமுறையை ஆதரித்தால் வன்வட்டின் (ஹாட்டிஸ்க் - Harddisk) பிரிவு (Partition) ஒன்றில் 2 GB இடப்பிரச்சினை இருக்கவிலையெனினும் அதிகூடிய பிரிவுன் அளவானது 32 GB ஆகும். இண்டநெட் எக்ஸ்புளேளர் உலாவியானது இவ்வியங்குதளத்திலும் கூட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வசதியானது ஆக்டிவ் டெஸ்டாப் (en:Active Desktop) என்றழைக்கப் படுகின்றது.
ஏப்ரல் 1998 இல் கொம்டெக்ஸ்ஸில் (en:Comdex) இவ்வியங்குதளத்தின் இணைத்தவுடன் இயங்கும் (Plug and Play) வசதி இதில் ஓர் முக்கிய அம்சமென பில்கேட்ஸ் குறிப்பிட்டு கூறினார்.
விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பானது 5 மே 1999 இல் வெளியிடப்பட்டது. இதில் மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளர் 4 ் பதிலாக இதிலும் வேகமான இண்டநெட் எக்ஸ்புளோளர் 5 இணைக்கப்பட்டது. அத்துடன் இணைய இணைப்பைப் பகிரும் வசதிகளூடாக ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகள் வலையமைப்பில் ஒரே இணைய இணைப்பைப் பாவிக்கக்கூடியாத உள்ளது.
வரலாற்றில் இன்று.
விண்டோஸ் 98 இயங்குதளம் ( operating system) மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்ட தினம் இன்று (1998).
இந்த இயங்குதளம் விண்டோஸ் 95 இன் மேம்படுத்தப் பட்ட ஓர் பதிப்பாகும். இவ்வியங்தளத்தில் புதியதாக USB அறிமுகம் செய்யப் பட்டது. FAT32 கோப்புமுறையை ஆதரித்தால் வன்வட்டின் (ஹாட்டிஸ்க் - Harddisk) பிரிவு (Partition) ஒன்றில் 2 GB இடப்பிரச்சினை இருக்கவிலையெனினும் அதிகூடிய பிரிவுன் அளவானது 32 GB ஆகும். இண்டநெட் எக்ஸ்புளேளர் உலாவியானது இவ்வியங்குதளத்திலும் கூட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வசதியானது ஆக்டிவ் டெஸ்டாப் (en:Active Desktop) என்றழைக்கப் படுகின்றது.
ஏப்ரல் 1998 இல் கொம்டெக்ஸ்ஸில் (en:Comdex) இவ்வியங்குதளத்தின் இணைத்தவுடன் இயங்கும் (Plug and Play) வசதி இதில் ஓர் முக்கிய அம்சமென பில்கேட்ஸ் குறிப்பிட்டு கூறினார்.
விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பானது 5 மே 1999 இல் வெளியிடப்பட்டது. இதில் மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளர் 4 ் பதிலாக இதிலும் வேகமான இண்டநெட் எக்ஸ்புளோளர் 5 இணைக்கப்பட்டது. அத்துடன் இணைய இணைப்பைப் பகிரும் வசதிகளூடாக ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகள் வலையமைப்பில் ஒரே இணைய இணைப்பைப் பாவிக்கக்கூடியாத உள்ளது.
*🌸ஜூன் 25, வரலாற்றில் இன்று:மவுண்ட்பேட்டன் பிரபு பிறந்த தினம் இன்று.*
ஜூன் 25, வரலாற்றில் இன்று.
மவுண்ட்பேட்டன் பிரபு பிறந்த தினம் இன்று.
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் 1900ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இங்கிலாந்தில் வின்ட்ஸர் என்ற இடத்தில் பிறந்தார்.
ஆரம்பக்காலத்தில் 10 வருடங்கள் வீட்டிலேயே கல்வி பயின்றார். 1916இல் கப்பற்படையில் சேர்ந்தார். துணைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றார். 1920இல் கடற்படைத் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார். அதற்கு அடுத்த வருடம் இளவரசர் எட்வர்டுடன் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பயணம் சென்றார்.
கப்பற்படையில் படிப்படியாக உயர்ந்த இவர், கேப்டன் பதவியை பெற்றார். 1939இல் கெல்லி போர்க்கப்பலின் பொறுப்பு வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹெச்.எம்.எஸ். கெல்லியின் கமாண்டராக பல துணிச்சலான வியூகங்களை வகுத்து செயல்படுத்தினார்.
1947இல் இந்தியாவின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.
சுதந்திரத்துக்குப் பிறகு பெரும்பாலான பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியாவைவிட்டு வெளியேறி விட்டனர். ஆனால் மவுண்ட்பேட்டன் 1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றினார்.
1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி விடுமுறைக்காக அயர்லாந்து சென்றிருந்த போது ஐரிஷ் குடியரசின் ராணுவத்தினர் இவர் பயணம் செய்த படகில் குண்டு வைத்துக் கொன்றனர்.
மவுண்ட்பேட்டன் பிரபு பிறந்த தினம் இன்று.
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் 1900ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இங்கிலாந்தில் வின்ட்ஸர் என்ற இடத்தில் பிறந்தார்.
ஆரம்பக்காலத்தில் 10 வருடங்கள் வீட்டிலேயே கல்வி பயின்றார். 1916இல் கப்பற்படையில் சேர்ந்தார். துணைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றார். 1920இல் கடற்படைத் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார். அதற்கு அடுத்த வருடம் இளவரசர் எட்வர்டுடன் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பயணம் சென்றார்.
கப்பற்படையில் படிப்படியாக உயர்ந்த இவர், கேப்டன் பதவியை பெற்றார். 1939இல் கெல்லி போர்க்கப்பலின் பொறுப்பு வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹெச்.எம்.எஸ். கெல்லியின் கமாண்டராக பல துணிச்சலான வியூகங்களை வகுத்து செயல்படுத்தினார்.
1947இல் இந்தியாவின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.
சுதந்திரத்துக்குப் பிறகு பெரும்பாலான பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியாவைவிட்டு வெளியேறி விட்டனர். ஆனால் மவுண்ட்பேட்டன் 1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றினார்.
1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி விடுமுறைக்காக அயர்லாந்து சென்றிருந்த போது ஐரிஷ் குடியரசின் ராணுவத்தினர் இவர் பயணம் செய்த படகில் குண்டு வைத்துக் கொன்றனர்.
*🏆ஜூன் 25, வரலாற்றில் இன்று:கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்ற தினம் இன்று (1983).*
ஜூன் 25, வரலாற்றில் இன்று.
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்ற தினம் இன்று (1983).
முதல் இரண்டு உலகக் கோப்பையை வென்ற அதே மகிழ்ச்சியில் ஹாட்ரிக் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்போடு களமிறங்கி இருந்தது மேற்கிந்திய தீவுகள் அணி. இந்த உலகக் கோப்பை போட்டிக்குமுன் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட இந்தியா விஸ்வரூபமெடுத்து இறுதிபோட்டிக்கு முன்னேறி இருந்தது. இந்த முறை கட்டாயம் உலககோப்பையை வென்று மேற்கிந்திய தீவுகள் தான் கோப்பையை வெல்லும் என எல்லோராலும் கணிக்கப்பட்டது.
1983 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானம் ஹாட்ரிக் வெற்றி பெரும் முனைப்பில் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சிற்கு பெயர் போன ராபர்ட்ஸ், ஹோல்டிங், கார்னர், மார்ஷல் என மிரட்டலாக களமிறங்கியது. இரண்டு ரன்களை சேர்ப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது. 183 ரன்களுக்கு சுருண்டது. இதில் அதிகபட்சமாக தமிழக வீரர் ஸ்ரீகாந்த் 38 ரன்கள் குவித்தார்.
அவ்வளவு தான். கத்துக்குட்டி இந்திய அணி வீட்டுக்கு செல்ல வேன்டியது தான் பேட்டிங் ஜாம்பவான்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், க்ளைவ் லாயிட் என வரிசை கட்டி நிற்க இந்திய அணி பந்துவீச்சை தொடங்கியது. 76 ரன்னுக்குள் முன்னணி பேட்ஸ்மேன்களை சுருட்டியது. 140 ரன்களில் ஆல் அவுட் அனைவரது எதிர்பார்ப்பையும் தாண்டி லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்றது.
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்ற தினம் இன்று (1983).
முதல் இரண்டு உலகக் கோப்பையை வென்ற அதே மகிழ்ச்சியில் ஹாட்ரிக் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்போடு களமிறங்கி இருந்தது மேற்கிந்திய தீவுகள் அணி. இந்த உலகக் கோப்பை போட்டிக்குமுன் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட இந்தியா விஸ்வரூபமெடுத்து இறுதிபோட்டிக்கு முன்னேறி இருந்தது. இந்த முறை கட்டாயம் உலககோப்பையை வென்று மேற்கிந்திய தீவுகள் தான் கோப்பையை வெல்லும் என எல்லோராலும் கணிக்கப்பட்டது.
1983 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானம் ஹாட்ரிக் வெற்றி பெரும் முனைப்பில் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சிற்கு பெயர் போன ராபர்ட்ஸ், ஹோல்டிங், கார்னர், மார்ஷல் என மிரட்டலாக களமிறங்கியது. இரண்டு ரன்களை சேர்ப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது. 183 ரன்களுக்கு சுருண்டது. இதில் அதிகபட்சமாக தமிழக வீரர் ஸ்ரீகாந்த் 38 ரன்கள் குவித்தார்.
அவ்வளவு தான். கத்துக்குட்டி இந்திய அணி வீட்டுக்கு செல்ல வேன்டியது தான் பேட்டிங் ஜாம்பவான்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், க்ளைவ் லாயிட் என வரிசை கட்டி நிற்க இந்திய அணி பந்துவீச்சை தொடங்கியது. 76 ரன்னுக்குள் முன்னணி பேட்ஸ்மேன்களை சுருட்டியது. 140 ரன்களில் ஆல் அவுட் அனைவரது எதிர்பார்ப்பையும் தாண்டி லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்றது.
*🌐ஜூன் 25, வரலாற்றில் இன்று:இந்திரா காந்தி அவர்களால் நெருக்கடி நிலை (emergency) அறிவிக்கப்பட்ட தினம் இன்று (1975).*
ஜூன் 25, வரலாற்றில் இன்று.
இந்திரா காந்தி அவர்களால் நெருக்கடி நிலை (emergency) அறிவிக்கப்பட்ட தினம் இன்று (1975).
இந்திரா காந்தி, தனது தேர்தல் வெற்றியை, அலகாபாத் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என்பதால் நெருக்கடி நிலையை அறிவித்தார்.
பல கட்சிகளையும். அமைப்புகளையும் தடை செய்தார். பல ஆயிரக்கணக்கில் தொழிற்சங்கத் தலைவர்களையும் சிறைக்கு அனுப்பினார்.
மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீதான வெறுப்பு கூடுகிறது. தேர்தல் வருகிறது. ஆட்சி மாறுகிறது.
1970இன் தொடக்கத்திலேயே நாட்டில் லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன. ஒடுக்குமுறை அதிகரித்துவிட்டது. ஏழைகளது வாழ்க்கை சங்கடமாகிவிட்டது. இளைஞர்களும் அதை உணரத் தொடங்கிவிட்டனர். அப்போதுதான் ஜெயப்பிரகாஷ் நாராயணன், லட்சக்கணக்கான மாணவர்களைப் போராட வாருங்கள் என அழைக்கிறார். நாடெங்கும் என்றாலும், குறிப்பாக பிகாரிலும் குஜராத்திலும் மாணவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அறைகூவலை ஏற்று, கல்விச் சாலைகளைப் புறக்கணித்துவிட்டு வெளியே வந்தனர். லட்சக்கணக்கில் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கினர். அரசு ஊழியர்களையும் அலுவலகங்களை விட்டு வெளியே வந்து போராடுங்கள் என ஜெயப்பிரகாஷ் நாராயணன் அறைகூவல் விடுத்தார். அரசுப் பணியாளர்களும்,அப்படியே செய்தனர். ஏற்கெனவே, ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில், இந்தியா முழுக்க, ரயில்வே தொழிலாளர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். ‘சக்கரங்கள் ஓடாது’ என அது புகழ்பெற்றது. கடைசியாக, ஜெயப்பிரகாஷின் அறைகூவல், ராணுவத்தில் பணியாற்றுபவர்களே, போராட வெளியே வாருங்கள் என்பதாக இருந்தது.
இனியும் பொறுக்குமா அரசு? அந்த நேரத்தில்தான் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாக அதுவே காரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்திய ஆளும் வர்க்கம், தனது தொடர் அடக்குமுறைகளால் மக்களைக் கொடுமைப்படுத்தும்போது, மக்கள் மத்தியிலிருந்து, ஆயுதப் போராட்ட வடிவத்திலும், அரசியல் போராட்ட வடிவத்திலும் எழுந்துவந்த மாபெரும் மக்கள் எழுச்சியை அடக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டது என்ற உண்மையை நாம் கற்றுக்கொள்ளலாம்.
ஆள்வோர் தங்களது தவறான கொள்கைகளால், லாபம் ஈட்டும் திட்டங்களால், மக்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்போது, அது எதிர்ப்பாக உருவாவதை யாரும் தடுத்திட முடியாது என்ற படிப்பினையைக் கற்றுக்கொள்ளலாம். ஆள்வோர் நெருக்கடி நிலை போன்ற அடக்குமுறைகளால் தற்காலிகமாக வெல்லலாமே ஒழிய, தொடர்ந்து வெற்றி பெற முடியாது என்ற படிப்பினையையும் கற்றுக்கொள்ளலாம்.
இந்திரா காந்தி அவர்களால் நெருக்கடி நிலை (emergency) அறிவிக்கப்பட்ட தினம் இன்று (1975).
இந்திரா காந்தி, தனது தேர்தல் வெற்றியை, அலகாபாத் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என்பதால் நெருக்கடி நிலையை அறிவித்தார்.
பல கட்சிகளையும். அமைப்புகளையும் தடை செய்தார். பல ஆயிரக்கணக்கில் தொழிற்சங்கத் தலைவர்களையும் சிறைக்கு அனுப்பினார்.
மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீதான வெறுப்பு கூடுகிறது. தேர்தல் வருகிறது. ஆட்சி மாறுகிறது.
1970இன் தொடக்கத்திலேயே நாட்டில் லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன. ஒடுக்குமுறை அதிகரித்துவிட்டது. ஏழைகளது வாழ்க்கை சங்கடமாகிவிட்டது. இளைஞர்களும் அதை உணரத் தொடங்கிவிட்டனர். அப்போதுதான் ஜெயப்பிரகாஷ் நாராயணன், லட்சக்கணக்கான மாணவர்களைப் போராட வாருங்கள் என அழைக்கிறார். நாடெங்கும் என்றாலும், குறிப்பாக பிகாரிலும் குஜராத்திலும் மாணவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அறைகூவலை ஏற்று, கல்விச் சாலைகளைப் புறக்கணித்துவிட்டு வெளியே வந்தனர். லட்சக்கணக்கில் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கினர். அரசு ஊழியர்களையும் அலுவலகங்களை விட்டு வெளியே வந்து போராடுங்கள் என ஜெயப்பிரகாஷ் நாராயணன் அறைகூவல் விடுத்தார். அரசுப் பணியாளர்களும்,அப்படியே செய்தனர். ஏற்கெனவே, ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில், இந்தியா முழுக்க, ரயில்வே தொழிலாளர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். ‘சக்கரங்கள் ஓடாது’ என அது புகழ்பெற்றது. கடைசியாக, ஜெயப்பிரகாஷின் அறைகூவல், ராணுவத்தில் பணியாற்றுபவர்களே, போராட வெளியே வாருங்கள் என்பதாக இருந்தது.
இனியும் பொறுக்குமா அரசு? அந்த நேரத்தில்தான் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாக அதுவே காரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்திய ஆளும் வர்க்கம், தனது தொடர் அடக்குமுறைகளால் மக்களைக் கொடுமைப்படுத்தும்போது, மக்கள் மத்தியிலிருந்து, ஆயுதப் போராட்ட வடிவத்திலும், அரசியல் போராட்ட வடிவத்திலும் எழுந்துவந்த மாபெரும் மக்கள் எழுச்சியை அடக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டது என்ற உண்மையை நாம் கற்றுக்கொள்ளலாம்.
ஆள்வோர் தங்களது தவறான கொள்கைகளால், லாபம் ஈட்டும் திட்டங்களால், மக்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்போது, அது எதிர்ப்பாக உருவாவதை யாரும் தடுத்திட முடியாது என்ற படிப்பினையைக் கற்றுக்கொள்ளலாம். ஆள்வோர் நெருக்கடி நிலை போன்ற அடக்குமுறைகளால் தற்காலிகமாக வெல்லலாமே ஒழிய, தொடர்ந்து வெற்றி பெற முடியாது என்ற படிப்பினையையும் கற்றுக்கொள்ளலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)














