வெள்ளி, 3 ஜூலை, 2020

சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உலர் உணவுப்பொருட்களை பள்ளித் தலைமையாசிரியர் /தலைமையாசிரியைகளின் மேற்பார்வையில் வழங்குமாறு தமிழக அரசு உத்தரவு!

சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உலர் உணவுப்பொருட்களை பள்ளித் தலைமையாசிரியர் /தலைமையாசிரியைகளின்  மேற்பார்வையில்  வழங்குமாறு  தமிழக அரசு உத்தரவு!


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பரமத்தி ஒன்றிய அமைப்பின் சார்பில் பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் மூன்று அம்சக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்திடும் வகையில் இன்று (03.07.2020-வெள்ளி) முற்பகல் 11.45 மணியளவில் வேலூரில் (கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்மன்ற அலுவலகம்) செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டச்செயலாளர் மெ.சங்கர், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி, பரமத்தி ஒன்றியத்தலைவர் நா.ரங்கசாமி, ஒன்றியச்செயலாளர் க.சேகர், ஒன்றியம் பொருளாளர் கு.பத்மாவதி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மா.மலர்விழி உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மாநிலச்செயலாளர் திரு. முருகசெல்வராசன் செய்தியாளர்களை சந்தித்தார். ஊடகத்துறையினருக்கு பேட்டி அளித்தார். அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகம் ஆகியவற்றின் சார்பில் செய்தியாளர்கள் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர். மெ.சங்கர், மாவட்டச்செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  பரமத்தி ஒன்றிய அமைப்பின் சார்பில் பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் மூன்று அம்சக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்திடும் வகையில்
 இன்று (03.07.2020-வெள்ளி)
முற்பகல் 11.45 மணியளவில் வேலூரில்
(கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்மன்ற  அலுவலகம்) செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 
மாவட்டச்செயலாளர் மெ.சங்கர்,
மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி, பரமத்தி ஒன்றியத்தலைவர் நா.ரங்கசாமி, ஒன்றியச்செயலாளர் க.சேகர்,
ஒன்றியம் பொருளாளர் கு.பத்மாவதி,
ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மா.மலர்விழி உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

மாநிலச்செயலாளர் திரு. முருகசெல்வராசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஊடகத்துறையினருக்கு பேட்டி அளித்தார்.

அச்சு ஊடகம் மற்றும்
மின்னணு ஊடகம் ஆகியவற்றின் சார்பில் செய்தியாளர்கள்  இச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.

மெ.சங்கர்,
மாவட்டச்செயலாளர்.

பரமத்தி ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 07.07.2020 -ல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆர்பாட்டம்

முன்  ஊதிய உயர்வு  வேறு!
ஆசிரியர் பெருமக்களின்
உயர்கல்விக்கான ஊக்க ஊதியஉயர்வு வேறு!

இரண்டையும் ஒன்றாக்கி ஆசிரியர்களை வாட்டி வதைக்கும் பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலருக்கு வன்மையான கண்டனம்!

தூய்மைப்பாரதம் !தூய்மைப்பள்ளி!என்பதெல்லாம் ஏட்டளவிலா?!
பேச்சளவிலா?! முழு சுகாதாரத் தமிழகத்தில்
12 தொடக்கப்பள்ளிகளின் சுகாதாரம் கணக்கில்லையா ?!

2019-2020 நிதியாண்டும்,
கல்வியாண்டும்  கடந்து போனது தெரியலையா?!
கொரோனாவின் கோரத்தாண்டவக்காலத்தில் தொகுப்பூதியம் வழங்கத் தோணலையா?!
பசிப்பிணியின் தாக்கம் உரைக்கலையா?!

வியாழன், 2 ஜூலை, 2020

*Inspire Awards 2020 - மாணவர்களுக்கு அழைப்பு ! (www.inspireawards-dst.gov.in )* *மத்திய அரசின், நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருது பெற விண்ணப்பிக்குமாறு, பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.*

Inspire Awards 2020 - மாணவர்களுக்கு அழைப்பு ! (www.inspireawards-dst.gov.in )
மத்திய அரசின், நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருது பெற விண்ணப்பிக்குமாறு, பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், 'இன்ஸ்பையர்' என்ற பெயரில், நவீன கண்டுபிடிப்புக்கான விருதுகள் வழங்கப்படும். இதற்கு, பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படும்.இந்த ஆண்டு, கொரோனா பிரச்னை உள்ளதால், இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனவே, நேரடியாக அறிவியல் கண்காட்சி நடத்தமுடியாத நிலை உள்ளது.இந்நிலையில், அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருதுக்கு,மாணவர்களின் எண்ணங்களை, 'ஆன்லைனில்' பெற்று விருது வழங்க, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இந்த போட்டியில் பங்கேற்கலாம். புதிய கண்டுபிடிப்புகள் குறித்த, தங்கள் எண்ணங்களை, www.inspireawards-dst.gov.in என்ற, இணையதளத்தில், செப்., 30க்குள் பதிவு செய்ய வேண்டும்.

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி உட்பட, 22 மொழிகளில், ஏதாவது ஒன்றில், கண்டுபிடிப்பு குறித்த கட்டுரையை அனுப்பலாம். ஒரு லட்சம் சிறந்த கண்டுபிடிப்பு கட்டுரைகளுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



மத்திய அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், 'இன்ஸ்பையர்' என்ற பெயரில், நவீன கண்டுபிடிப்புக்கான விருதுகள் வழங்கப்படும். இதற்கு, பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படும்.இந்த ஆண்டு, கொரோனா பிரச்னை உள்ளதால், இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனவே, நேரடியாக அறிவியல் கண்காட்சி நடத்தமுடியாத நிலை உள்ளது.இந்நிலையில், அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருதுக்கு,மாணவர்களின் எண்ணங்களை, 'ஆன்லைனில்' பெற்று விருது வழங்க, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இந்த போட்டியில் பங்கேற்கலாம். புதிய கண்டுபிடிப்புகள் குறித்த, தங்கள் எண்ணங்களை, www.inspireawards-dst.gov.in என்ற, இணையதளத்தில், செப்., 30க்குள் பதிவு செய்ய வேண்டும்.

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி உட்பட, 22 மொழிகளில், ஏதாவது ஒன்றில், கண்டுபிடிப்பு குறித்த கட்டுரையை அனுப்பலாம். ஒரு லட்சம் சிறந்த கண்டுபிடிப்பு கட்டுரைகளுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

IFHRMS மூலம் ஜூலை மாத ஊதியப் பட்டியல் - கருவூலகங்களில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு 👆👆👆

IFHRMS மூலம் ஜூலை மாத ஊதியப் பட்டியல் - கருவூலகங்களில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை: ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் அதிரடி

ஜார்க்கண்ட் மாநிலக் கல்வி அமைப்பைச் சீரமைக்கும் பணிகளில் அம்மாநில பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஜார்க்கண்ட மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ நேற்று பேசினார்.

*🌐ஜூலை 2, வரலாற்றில் இன்று:கணினிக்கு பயன்படுத்தும் மௌஸை கண்டுபிடித்த டக்லஸ் எங்கேல்பர்ட் நினைவு தினம் இன்று.*

ஜூலை 2, வரலாற்றில் இன்று.

கணினிக்கு பயன்படுத்தும் மௌஸை கண்டுபிடித்த டக்லஸ் எங்கேல்பர்ட் நினைவு தினம் இன்று.

மனிதனுக்கும் கணினிக்கும் தொடர்பு ஏற்படுத்தும் மௌஸ் 1968இல் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபார்ட் பல்கலைககழகத்தில்  டக்லஸ் எங்கெல்பர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது.

மனிதனுக்கும் கணினிக்கும் இடையே நடக்கும் சம்பாஷணையை சுலபமாக்குவதற்காகத்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது.முதல் மௌஸ் மரத்தால் ஆனது. ஒரு பெரிய செவ்வகத்தைப் போல இருக்கும்! டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி ஒரு டெமோ மூலம் தன் மௌஸை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் டக்லஸ். 'டெமோக்களின் அன்னை', அதாவது 'Mother of All Demos' என்று அனைவராலும் பாராட்டப்பட்டது. ஏ.ஆர்.சி என்று அழைக்கப்படும் Augmentation Research Centerல் வேலை பார்த்தவர்களின் கூட்டு முயற்சியாக இருந்தாலும், அதிக பெயரும் புகழும் பெற்றது என்னவோ டக்லஸ்தான். இன்று ரிச்சி ஸ்ட்ரீட்டில் கிடைக்கும் மௌஸ்களைப் போல் வண்ண வண்ண பட்டன்கள் எல்லாம் அதில் கிடையாது. ஒரேயொரு பட்டன்தான். நிறைய சக்கரங்கள் பொருத்திய மரப்பெட்டி! ஆனால், அன்று அது ஏற்படுத்திய பரபரப்பு அளவில்லாதது.

      அது சரி, அது என்ன பெயர் "மௌஸ்"? டக்லஸ் ஒரு பேட்டியில் சொல்கிறார். "முதல் மாநாட்டின் சமயம், எங்கள் கையில் அந்த புது கேட்ஜெட் இருந்தது. நாங்கள் அந்த சமயத்தில் அதற்கு என்ன பெயர் வைப்பது என்பதைப் பற்றி எல்லாம் யோசிக்கவே இல்லை. ஒரு சிறிய மரக்கட்டை போல் இருக்கும். அதன் நுனியிலிருந்து ஒரு கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. மாநாட்டில் இருந்த யாரோ ஒருவர் அதைப் பார்த்து பயந்துவிட்டு 'எலி.. எலி' என்று கத்தினார் கயிற்றை வால் என்று நினைத்துக் கொண்டு! அப்பொழுது வந்த பெயர்தான் மௌஸ்! அன்றிலிருந்து நாங்களும் மௌஸ் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டோம்." சில வருடங்களுக்குப் பிறகு, பில் இங்கிலிஷ் 'Computer Aided Display control' என்ற அவர்தம் புத்தகத்தில் மௌஸ் என்று பெயர் சூட்டுகின்றார்.

     அந்த மரப்பெட்டி மெல்ல மெல்ல அழகாக மாறியது. முதல் மாற்றம் வந்தது மௌஸின் சக்கரத்தில்தான்.அனைத்து சக்கரங்களையும் அகற்றி விட்டு, எல்லா திசைகளிலும் நகரக் கூடிய ஒரு பந்தை பொருத்தினார்கள். அதன் பிறகு ஆப்டிகல் மௌஸ் வர ஆரம்பித்தது. முதலில், டையோடுகளை பயன்படுத்தினார்கள். தொழில்நுட்பம் வளர வளர சென்சர்களை உபயோகப்படுத்த ஆரம்பித்தார்கள். தற்பொழுது இன்ஃப்ரா ரெட் கதிர்வீச்சுகளும், லேசர் கதிர்களும் உபயோகத்தில் இருக்கின்றன.இன்று மௌஸ் எவ்வளவு தேர்ச்சி அடைந்துவிட்டது என்பதைத்தான் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோமே. ஒரே ஒரு பட்டனில் ஆரம்பித்தது, இன்று நான்கைந்து பட்டன்கள் வரை வளர்ந்து நிற்கின்றது! இதற்கெல்லாம் நடுவில் 'ஆப்பிள்' கம்பெனி, 'நானும் புதிதாக செய்கிறேன்' என்ற பெயரில் 'மைட்டி மௌஸ்' என்றொன்றை விற்கிறது. மற்ற மௌஸ்களைப் போல, வயர்லெஸ் வடிவத்தில் இதுவும் கிடைக்கின்றது.

*🌐ஜூலை 2, வரலாற்றில் இன்று: 'சந்திராயன்' மயில்சாமி அண்ணாதுரை பிறந்த தினம் இன்று.*

ஜூலை 2, வரலாற்றில் இன்று.

 'சந்திராயன்' மயில்சாமி அண்ணாதுரை பிறந்த தினம் இன்று.

 பொள்ளாச்சி அருகில் உள்ள கோதவாடி கிராமத்தில் ஜூலை 2, 1958-ல் பிறந்தார். தந்தை, மயில்சாமி, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். மாலையில் தையல் வேலையும் செய்வார். அறிஞர் அண்ணாவின் மீதான ஈடுபாட்டால், தன் பிள்ளைக்கு ‘அண்ணாதுரை’ எனப் பெயர் சூட்டினார்.
மயில்சாமி அண்ணாதுரையின் பள்ளிப் பருவம், அரசுப் பள்ளியிலே அமைந்தது. ஒழுங்கான வகுப்பு அறைகள்கூட கிடையாது. ‘மாட்டுக் கொட்டகையில் ஒரு வருஷம், கோயில் திண்ணையில் மறு வருஷம், கோணிப் பையே குடையாக, செருப்பே இல்லா நடைப் பயணம்’ எனக் கவிதை மூலம் குறிப்பிட்டு இருக்கிறார். ஆறாம் வகுப்பு படிக்க, 5 கிலோ மீட்டர் நடந்து செல்வார்.
தினமும் ‘பகவத் கீதை’ படிப்பதை வழக்கமாகக்கொண்டு இருக்கிறார். திருக்குறளின் மீது எல்லையற்ற பற்றுதல் உண்டு. பள்ளிக் காலத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட குறள்களை வெகுவேகமாகச் சொல்வார். ‘அரசாங்கத்தின் பிற்படுத்தப்பட்டோர் ஊக்கத் தொகையைப் பெறக் கூடாது’ என்ற அப்பாவின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து கொண்டாலும், 11-ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக, அரசாங்கம் தங்கப் பதக்கம் வழங்கி, படிப்புச் செலவையும் முழுமையாக ஏற்றுக்கொண்டது.

‘நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம்’ கல்லூரியில் எம்.ஏ. மின்னணுவியல் பயின்றார். தமிழ் வழியில் இருந்து, ஆங்கில வழிக் கல்விக்கு மாறியதால் முதலில் சிரமப்பட்டார். பிறகு, தமிழ் ஆசிரியர் சிற்பி அய்யாவின் ஊக்குவிப்பால், முதன்மையான மாணவனாக ஜொலித்தார். தான் எழுதிய ‘கையருகே நிலா’ என்கிற கட்டுரைத் தொகுப்புக்கு, முன்னுரையை சிற்பியிடம் இருந்தே பெற்றார்.
இளநிலைக் கல்வி படிக்கும்போது, மற்ற மாணவர்கள் ஒரு புராஜெக்ட் செய்யவே திணறியபோது, நான்கு புராஜெக்ட்கள் மற்றும் முதுநிலைக் கல்வியில் மூன்று புராஜெக்ட்கள் செய்தவர் மயில்சாமி அண்ணாதுரை. ‘இதற்குக் காரணம், அன்னைத் தமிழ் வழி கற்ற கல்வியே’ எனப் பெருமிதத்தோடு குறிப்பிடுவார்.
‘ஆரோலேக்’ என்கிற ஃப்ரெஞ்ச் கம்பெனியில் வேலை கிடைத்தபோதும், அதைவிடக் குறைந்த ஊதியம் கிடைக்கும் இஸ்ரோவில் பணியாற்றினார். பிறகு, நாசாவில் வேலை வாய்ப்பு வந்தது. அன்னை நாட்டுக்குப் பணியாற்றுவதே நிறைவு’ என்று அதை மறுத்துவிட்டார்.

இஸ்ரோவில் பணியாற்ற நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது, நுண்செயலியைப் (Microprocessor) பற்றிய இவரின் அறிவு, அங்கே இருந்தவர்களைப் பிரமிக்கவைத்தது. வேலைக்குச் சேர்ந்த ஆறாவது மாதத்திலேயே, செயற்கைக்கோள்களின் இயக்கத்துக்கான மென்பொருள் முன்மாதிரியை உருவாக்கலாம் எனச் சொன்னார். அதை, வெற்றிகரமாகவும் செய்து முடித்தார். இதன் மூலம், சென்ஸார் செயல் இழந்தாலும் செயற்கைக்கோள் செயலாற்ற முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
விஞ்ஞானிகள் கூட்டத்தில்… பிறரின் கருத்துக்களில் தவறு இருந்தால், உடனே சுட்டிக்காட்டிவிடுவார். ‘இது சரியான அணுகுமுறை அல்ல. தனியே அந்த அறிஞரிடம் சென்று விளக்க வேண்டும்’ என்ற முனைவர் நாகபூஷணம் அவர்களின் அறிவுரை, தன் வாழ்வைத் திருப்பியது என்பார். இவரின் புதிய அணுகுமுறை, சந்திராயனின் இயக்குனராக இவரை உயர்த்தியது.

சந்திராயன் மூலம் நிலவில் தண்ணீர் உருவான இடத்தைக் கண்டறிந்து, உலகைத் திரும்பிப் பார்க்கவைத்தார். அந்த செயற்கைக்கோள் எடுத்த படங்களின் துல்லியம், உலக நாடுகளைப் பிரமிக்கவைத்தது. ‘இது கூட்டு முயற்சியின் வெற்றி’ என்று அடக்கத்துடன் குறிப்பிட்டார். மேலும், ‘சாதாரணக் கிராமங்களில் இருந்து கிளம்பிய நாம், இந்த வெற்றியை… நாம் புறப்பட்ட மண்ணில் உள்ள இளம் பிள்ளைகளுக்குச் சொல்லி உத்வேகப்படுத்த வேண்டும்” என்று தன் குழுவினருக்குச் சொன்னார்.
விடுமுறை நாட்களில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களோடு உரையாற்றி உத்வேகப்படுத்துகிறார் மயில்சாமி அண்ணாதுரை. அன்னைத் தமிழில் பயிலும் மாணவர்களுக்கு வளமான எதிர்காலம் உண்டு என்பார். இதையே…

‘அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்’

எனத் தன் கவிதை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

*🌐ஜூலை 2, வரலாற்றில் இன்று:சிம்லா ஒப்பந்தம் (Simla Agreement) ஏற்பட்ட தினம் இன்று.*

ஜூலை 2, வரலாற்றில் இன்று.

சிம்லா ஒப்பந்தம் (Simla Agreement) ஏற்பட்ட தினம் இன்று.

வங்காளதேச விடுதலைப்  போரினைத் தொடர்ந்து  இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே ராஜதந்திர  நல்லுறவைகளை  மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத்  தலைநகரான  சிம்லாவில்  இந்திய  அரசுக்கும்  பாகிஸ்தான் அரசுக்கும் இடையே  ஒரு ஒப்பந்தம் ஜூலை 2, 1972 இல்  கையெழுத்தானது. இந்திய பிரதமர் இந்திரா காந்தியும், பாகிஸ்தான் பிரதமர் ஜுல்பிகர் அலி பூட்டொவும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

*🌐ஜூலை 2, வரலாற்றில் இன்று:வால்மார்ட் கடை முதன்முதலில் திறக்கப்பட்ட தினம் இன்று.*

ஜூலை 2, வரலாற்றில் இன்று.

வால்மார்ட் கடை முதன்முதலில் திறக்கப்பட்ட தினம் இன்று.

 ஜூலை 2, 1962. உலக சில்லறை வர்த்தக வரலாற்றில் முக்கிய மான நாள். சாம் வால்டன் அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாகா ணத்தின் ரோஜர்ஸ் நகரில், தன் முதல் வால்மார்ட் கடையைத் திறந்தார். 4,000 சதுர அடியில் சிறிய இடம், மக்கள் தொகை அதிகமில்லாத ஊர் என்பதால் வாடகை கம்மி. இந்த அனுகூலங்களால், குறைவான முதலீடுதான்.

ஆனால், இத்தனை பணம்கூட வால்டனிடம் இருக்கவில்லை. வங்கியில் இருந்த மொத்தச் சேமிப்பையும் எடுத்தார், வீடு, சொத்துகள் அத்தனையையும் அடகு வைத்துக் கடன் வாங்கினார். அப்புறமும் துண்டு விழுந்தது. அவர் தம்பி ஜேம்ஸ் வால்டன், மேனேஜராக வேலைக்குச் சேர்ந்த டான் விட்டேகர் இருவரும் பணம் போட்டு உதவினார்கள்.

இன்று, வால்மார்ட்டுக்கு 27 நாடுகளில் 11,000 கடைகள், 22 லட்சம் ஊழியர்கள். ஆண்டு விற்பனை 486 பில்லியன் டாலர்கள் (சுமார் 30 லட்சம் கோடி ரூபாய்).