சனி, 4 ஜூலை, 2020

*🌐ஜூலை 4, வரலாற்றில் இன்று:இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவரான பிங்கலி வெங்கைய்யா (ஆகஸ்டு 2, 1876 - சூலை 4, 1963) நினைவு தினம் இன்று.*

ஜூலை 4, வரலாற்றில் இன்று.

 இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவரான பிங்கலி வெங்கைய்யா (ஆகஸ்டு 2, 1876 - சூலை 4, 1963) நினைவு தினம் இன்று.

வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மசிலிபட்டி என்னும் ஒர் ஊரில் பிறந்தார். மசிலிபட்டியில் தனது மேனிலைப் பள்ளிப் படிப்பை முடித்து, உயர் கேம்பிரிட்ஜ் (சீனியர் கேம்பிரிட்ஜ்) பட்டத்தை முடிக்க கொழும்பிற்குச் சென்றார்.

பின் இந்தியா திரும்பியதுடன், அவர் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்தார். அதன்பின், லாகூரில் உள்ள ஆங்கிலேய-வேத உயர்நிலைப் பள்ளியில் உருது மற்றும் ஜப்பானியம் படிக்கச் சேர்ந்தார்.

நிலவியலில் பட்டம் பெற்று, ஆந்திரப் பிரதேசத்தில் வைரச் சுரங்கம் தோண்டுதலில் சாதனை படைத்தார். அதனால் இவர் 'வைரம் வெங்கய்யா' என்று அழைக்கப்பட்டார்.

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போரில் இவர் இந்திய-பிரித்தானிய படையில் சேர்ந்து பணியாற்றினார். அப்பொழுது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

காக்கி நாடாவில் இந்திய தேசிய காங்கிரசின் சந்திப்பின்பொழுது, தனிபட்ட ஓர் கொடியை உருவாக்க அறிவுறுத்தினார் மகாத்மா காந்தி வெங்கைய்யாவை கொடியின் அடவை உருவாக்க வேண்டினார். விஜயவாடாவின் தேசிய மாநாட்டின்போது தேசியக் கொடியை அறிமுகப் படுத்தினார்.

முதலில் கொடியின் நடுவில் ஓர் ராட்டை இருந்தது, பின் அவ்விடத்தில் அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது. இந்திய தேசியக்கொடியை பருத்தி துணியில் மட்டுமே கையால் தைக்கவேண்டும் என்று அப்போது பரிந்துரைக்கப்பட்டது. வேறு துணிகளை உபயோகிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

*🌐ஜூலை 4, வரலாற்றில் இன்று:சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று(1902).*

ஜூலை 4,  வரலாற்றில் இன்று.

சுவாமி விவேகானந்தர்  நினைவு தினம் இன்று(1902).


19ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர். இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடைய செய்வதாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும், மேலை நாடுகளிலும் பல்வேறு சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

1893ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற
உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள் உலகப் புகழ் பெற்றவையாகும். இவர் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலரே! ஆசிரியர்களின் வேதனைக்குரல் கேட்கலையா?! உந்தன் மனம் இரங்கலையா?! ஊக்க ஊதிய உரிமையை மறுப்பதும், பெற்றுவரும் ஊதியத்தை குறைப்பதும் பெரும் அநீதி இல்லையா?!

பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலரே!

ஆசிரியர்களின் வேதனைக்குரல் கேட்கலையா?!
உந்தன் மனம் இரங்கலையா?!

ஊக்க ஊதிய உரிமையை மறுப்பதும்,
பெற்றுவரும்  ஊதியத்தை குறைப்பதும் பெரும் அநீதி இல்லையா?!

சொந்த(சுய) கெளரவத்திற்கும்,
சொந்த நலனுக்கும்,
பழிவாங்கலுக்கும், தான்பிடித்த முயலுக்கு  மூன்று கால்கள்
என்று சாதிப்பதற்கும்
கல்வித்துறை விதிகளை  சாகடிக்கலாமா?!
ஊக்க ஊதிய விதிகளை காற்றினில்
பறக்க விடலாமா?!
நடைமுறை மரபுகளை புறந்தள்ளலாமா!?

வெள்ளி, 3 ஜூலை, 2020

சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உலர் உணவுப்பொருட்களை பள்ளித் தலைமையாசிரியர் /தலைமையாசிரியைகளின் மேற்பார்வையில் வழங்குமாறு தமிழக அரசு உத்தரவு!

சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உலர் உணவுப்பொருட்களை பள்ளித் தலைமையாசிரியர் /தலைமையாசிரியைகளின்  மேற்பார்வையில்  வழங்குமாறு  தமிழக அரசு உத்தரவு!


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பரமத்தி ஒன்றிய அமைப்பின் சார்பில் பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் மூன்று அம்சக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்திடும் வகையில் இன்று (03.07.2020-வெள்ளி) முற்பகல் 11.45 மணியளவில் வேலூரில் (கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்மன்ற அலுவலகம்) செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டச்செயலாளர் மெ.சங்கர், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி, பரமத்தி ஒன்றியத்தலைவர் நா.ரங்கசாமி, ஒன்றியச்செயலாளர் க.சேகர், ஒன்றியம் பொருளாளர் கு.பத்மாவதி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மா.மலர்விழி உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மாநிலச்செயலாளர் திரு. முருகசெல்வராசன் செய்தியாளர்களை சந்தித்தார். ஊடகத்துறையினருக்கு பேட்டி அளித்தார். அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகம் ஆகியவற்றின் சார்பில் செய்தியாளர்கள் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர். மெ.சங்கர், மாவட்டச்செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  பரமத்தி ஒன்றிய அமைப்பின் சார்பில் பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் மூன்று அம்சக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்திடும் வகையில்
 இன்று (03.07.2020-வெள்ளி)
முற்பகல் 11.45 மணியளவில் வேலூரில்
(கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்மன்ற  அலுவலகம்) செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 
மாவட்டச்செயலாளர் மெ.சங்கர்,
மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி, பரமத்தி ஒன்றியத்தலைவர் நா.ரங்கசாமி, ஒன்றியச்செயலாளர் க.சேகர்,
ஒன்றியம் பொருளாளர் கு.பத்மாவதி,
ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மா.மலர்விழி உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

மாநிலச்செயலாளர் திரு. முருகசெல்வராசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஊடகத்துறையினருக்கு பேட்டி அளித்தார்.

அச்சு ஊடகம் மற்றும்
மின்னணு ஊடகம் ஆகியவற்றின் சார்பில் செய்தியாளர்கள்  இச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.

மெ.சங்கர்,
மாவட்டச்செயலாளர்.

பரமத்தி ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 07.07.2020 -ல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆர்பாட்டம்

முன்  ஊதிய உயர்வு  வேறு!
ஆசிரியர் பெருமக்களின்
உயர்கல்விக்கான ஊக்க ஊதியஉயர்வு வேறு!

இரண்டையும் ஒன்றாக்கி ஆசிரியர்களை வாட்டி வதைக்கும் பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலருக்கு வன்மையான கண்டனம்!

தூய்மைப்பாரதம் !தூய்மைப்பள்ளி!என்பதெல்லாம் ஏட்டளவிலா?!
பேச்சளவிலா?! முழு சுகாதாரத் தமிழகத்தில்
12 தொடக்கப்பள்ளிகளின் சுகாதாரம் கணக்கில்லையா ?!

2019-2020 நிதியாண்டும்,
கல்வியாண்டும்  கடந்து போனது தெரியலையா?!
கொரோனாவின் கோரத்தாண்டவக்காலத்தில் தொகுப்பூதியம் வழங்கத் தோணலையா?!
பசிப்பிணியின் தாக்கம் உரைக்கலையா?!

வியாழன், 2 ஜூலை, 2020

*Inspire Awards 2020 - மாணவர்களுக்கு அழைப்பு ! (www.inspireawards-dst.gov.in )* *மத்திய அரசின், நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருது பெற விண்ணப்பிக்குமாறு, பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.*

Inspire Awards 2020 - மாணவர்களுக்கு அழைப்பு ! (www.inspireawards-dst.gov.in )
மத்திய அரசின், நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருது பெற விண்ணப்பிக்குமாறு, பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், 'இன்ஸ்பையர்' என்ற பெயரில், நவீன கண்டுபிடிப்புக்கான விருதுகள் வழங்கப்படும். இதற்கு, பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படும்.இந்த ஆண்டு, கொரோனா பிரச்னை உள்ளதால், இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனவே, நேரடியாக அறிவியல் கண்காட்சி நடத்தமுடியாத நிலை உள்ளது.இந்நிலையில், அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருதுக்கு,மாணவர்களின் எண்ணங்களை, 'ஆன்லைனில்' பெற்று விருது வழங்க, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இந்த போட்டியில் பங்கேற்கலாம். புதிய கண்டுபிடிப்புகள் குறித்த, தங்கள் எண்ணங்களை, www.inspireawards-dst.gov.in என்ற, இணையதளத்தில், செப்., 30க்குள் பதிவு செய்ய வேண்டும்.

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி உட்பட, 22 மொழிகளில், ஏதாவது ஒன்றில், கண்டுபிடிப்பு குறித்த கட்டுரையை அனுப்பலாம். ஒரு லட்சம் சிறந்த கண்டுபிடிப்பு கட்டுரைகளுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



மத்திய அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், 'இன்ஸ்பையர்' என்ற பெயரில், நவீன கண்டுபிடிப்புக்கான விருதுகள் வழங்கப்படும். இதற்கு, பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படும்.இந்த ஆண்டு, கொரோனா பிரச்னை உள்ளதால், இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனவே, நேரடியாக அறிவியல் கண்காட்சி நடத்தமுடியாத நிலை உள்ளது.இந்நிலையில், அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருதுக்கு,மாணவர்களின் எண்ணங்களை, 'ஆன்லைனில்' பெற்று விருது வழங்க, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இந்த போட்டியில் பங்கேற்கலாம். புதிய கண்டுபிடிப்புகள் குறித்த, தங்கள் எண்ணங்களை, www.inspireawards-dst.gov.in என்ற, இணையதளத்தில், செப்., 30க்குள் பதிவு செய்ய வேண்டும்.

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி உட்பட, 22 மொழிகளில், ஏதாவது ஒன்றில், கண்டுபிடிப்பு குறித்த கட்டுரையை அனுப்பலாம். ஒரு லட்சம் சிறந்த கண்டுபிடிப்பு கட்டுரைகளுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

IFHRMS மூலம் ஜூலை மாத ஊதியப் பட்டியல் - கருவூலகங்களில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு 👆👆👆

IFHRMS மூலம் ஜூலை மாத ஊதியப் பட்டியல் - கருவூலகங்களில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை: ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் அதிரடி

ஜார்க்கண்ட் மாநிலக் கல்வி அமைப்பைச் சீரமைக்கும் பணிகளில் அம்மாநில பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஜார்க்கண்ட மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ நேற்று பேசினார்.

*🌐ஜூலை 2, வரலாற்றில் இன்று:கணினிக்கு பயன்படுத்தும் மௌஸை கண்டுபிடித்த டக்லஸ் எங்கேல்பர்ட் நினைவு தினம் இன்று.*

ஜூலை 2, வரலாற்றில் இன்று.

கணினிக்கு பயன்படுத்தும் மௌஸை கண்டுபிடித்த டக்லஸ் எங்கேல்பர்ட் நினைவு தினம் இன்று.

மனிதனுக்கும் கணினிக்கும் தொடர்பு ஏற்படுத்தும் மௌஸ் 1968இல் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபார்ட் பல்கலைககழகத்தில்  டக்லஸ் எங்கெல்பர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது.

மனிதனுக்கும் கணினிக்கும் இடையே நடக்கும் சம்பாஷணையை சுலபமாக்குவதற்காகத்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது.முதல் மௌஸ் மரத்தால் ஆனது. ஒரு பெரிய செவ்வகத்தைப் போல இருக்கும்! டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி ஒரு டெமோ மூலம் தன் மௌஸை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் டக்லஸ். 'டெமோக்களின் அன்னை', அதாவது 'Mother of All Demos' என்று அனைவராலும் பாராட்டப்பட்டது. ஏ.ஆர்.சி என்று அழைக்கப்படும் Augmentation Research Centerல் வேலை பார்த்தவர்களின் கூட்டு முயற்சியாக இருந்தாலும், அதிக பெயரும் புகழும் பெற்றது என்னவோ டக்லஸ்தான். இன்று ரிச்சி ஸ்ட்ரீட்டில் கிடைக்கும் மௌஸ்களைப் போல் வண்ண வண்ண பட்டன்கள் எல்லாம் அதில் கிடையாது. ஒரேயொரு பட்டன்தான். நிறைய சக்கரங்கள் பொருத்திய மரப்பெட்டி! ஆனால், அன்று அது ஏற்படுத்திய பரபரப்பு அளவில்லாதது.

      அது சரி, அது என்ன பெயர் "மௌஸ்"? டக்லஸ் ஒரு பேட்டியில் சொல்கிறார். "முதல் மாநாட்டின் சமயம், எங்கள் கையில் அந்த புது கேட்ஜெட் இருந்தது. நாங்கள் அந்த சமயத்தில் அதற்கு என்ன பெயர் வைப்பது என்பதைப் பற்றி எல்லாம் யோசிக்கவே இல்லை. ஒரு சிறிய மரக்கட்டை போல் இருக்கும். அதன் நுனியிலிருந்து ஒரு கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. மாநாட்டில் இருந்த யாரோ ஒருவர் அதைப் பார்த்து பயந்துவிட்டு 'எலி.. எலி' என்று கத்தினார் கயிற்றை வால் என்று நினைத்துக் கொண்டு! அப்பொழுது வந்த பெயர்தான் மௌஸ்! அன்றிலிருந்து நாங்களும் மௌஸ் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டோம்." சில வருடங்களுக்குப் பிறகு, பில் இங்கிலிஷ் 'Computer Aided Display control' என்ற அவர்தம் புத்தகத்தில் மௌஸ் என்று பெயர் சூட்டுகின்றார்.

     அந்த மரப்பெட்டி மெல்ல மெல்ல அழகாக மாறியது. முதல் மாற்றம் வந்தது மௌஸின் சக்கரத்தில்தான்.அனைத்து சக்கரங்களையும் அகற்றி விட்டு, எல்லா திசைகளிலும் நகரக் கூடிய ஒரு பந்தை பொருத்தினார்கள். அதன் பிறகு ஆப்டிகல் மௌஸ் வர ஆரம்பித்தது. முதலில், டையோடுகளை பயன்படுத்தினார்கள். தொழில்நுட்பம் வளர வளர சென்சர்களை உபயோகப்படுத்த ஆரம்பித்தார்கள். தற்பொழுது இன்ஃப்ரா ரெட் கதிர்வீச்சுகளும், லேசர் கதிர்களும் உபயோகத்தில் இருக்கின்றன.இன்று மௌஸ் எவ்வளவு தேர்ச்சி அடைந்துவிட்டது என்பதைத்தான் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோமே. ஒரே ஒரு பட்டனில் ஆரம்பித்தது, இன்று நான்கைந்து பட்டன்கள் வரை வளர்ந்து நிற்கின்றது! இதற்கெல்லாம் நடுவில் 'ஆப்பிள்' கம்பெனி, 'நானும் புதிதாக செய்கிறேன்' என்ற பெயரில் 'மைட்டி மௌஸ்' என்றொன்றை விற்கிறது. மற்ற மௌஸ்களைப் போல, வயர்லெஸ் வடிவத்தில் இதுவும் கிடைக்கின்றது.