ஞாயிறு, 11 அக்டோபர், 2020

அக்டோபர் 11, வரலாற்றில் இன்று.புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், மறுமலர்ச்சி கவிஞருமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம் இன்று (1826).

அக்டோபர் 11, வரலாற்றில் இன்று.

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், மறுமலர்ச்சி கவிஞருமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம் இன்று (1826).

மாயூரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணி புரிந்ததால், மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்கு கருத்துகள் ஆகியவை இவரது கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன.

தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் சொத்துகள் அனைத்தையும் தானமாக வழங்கினார். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கடுமையாக எதிர்த்தார்.

தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சி கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை 63ஆவது வயதில் (1889) காலமானார்.

அக்டோபர் 11,வரலாற்றில் இன்று.சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று.

அக்டோபர் 11,
வரலாற்றில் இன்று.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று.

கடந்த 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மூலம், அக்டோபர் மாதம் 11ஆம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக உருவாக்கப்பட்டது. 

பெண் குழந்தைகள் இன்னமும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை முன்னிலைப்படுத்த உருவாக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளால் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

குழந்தை முதல் கிழவி வரை கற்பழிக்கப்பட்டு வரும் அவலத்தை நாம் தினமும் காண்கிறோம். கல்வி, வேலை, திருமணம் என அனைத்திலும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் அளவில்லாதவை. வளர்ந்த நாடுகள் முதல் வளராத நாடுகள் வரை அனைத்திற்கும் இது பொருந்தும். எனவே, பெண் குழந்தைகளை கொண்டாடுவதற்காகவே இந்த தினம் உள்ளது.


இதை நாமும் கொண்டாடும் வகையில், தலைசிறந்த பெண்ணியவாதிகளின் கூற்றுகளை இங்கே பார்க்கலாம்,

“பெண்கள் தங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்று ஆண்கள் பயப்படுகிறார்கள். ஆண்கள் தங்களை கொல்கிறார்கள் என்று பெண்கள் பயப்படுகிறார்கள்.” – Margaret Atwood

“பெண்கள் சக்திபடைத்தவர்கள், பயங்கரமானவர்கள்.” – Audre Lorde

“பெரும்பாலான வரலாற்றில், அடையாளம் இல்லாத பெண் ஒருவள் இருக்கிறாள்.” – Virginia Woolf

“பெண்ணியம் என்பது பெண்களை வலிமையாக்குவதற்கு இல்லை. பெண்கள் ஏற்கனவே வலிமையானவர்கள் தான். உலகம் அந்த வலிமையை உணர்ந்துகொள்ளும் விதத்தை இது மாற்றியது.” – G.D. Anderson

“பெண்ணியத்தால், எந்தவொரு பெண்ணுக்கும் வேலை கிடைத்துவிடப்போவதில்லை. எல்லா இடங்களிலும் வாழும் பெண்களின் வாழ்க்கையை மேலும் அழகாக்கவே.” – Gloria Steinem

“மறைந்து போவதிலும், அழிந்து போவதிலும் நான் எப்போதும் ஆர்வம் காட்டுவதில்லை.” – Laverne Cox

“பெரியவர்களுக்கு தான், சிறு பெண் பிள்ளைகள் அழகாக தோன்றுகிறார்கள். சக பிள்ளைகளிடையே அவர்கள் அழகானவர்களாக பார்க்கப்படுவதில்லை. அவர்கள் வாழ்க்கை அளவிலானவை.” – Margaret Atwood

“நான் எதையாவது சாதிக்க முடியும் என்ற உண்மையை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் நானே என்னை கட்டுப்படுத்த போவதில்லை.” – Dolly Parton

“வழிநடத்தும் பெண்கள், படிக்கவேண்டும்.” – Laura Bates

“தங்களை தாங்களே வெறுக்காத சிலர், பெண்ணைச் சுற்றி இருக்கும் போது, உண்மையில் அசௌகரியமாக உணருகிறார்கள். இதனால், நீங்கள் சற்று தைரியமானவராக இருக்க வேண்டும்.” – Mindy Kaling

“தைரியம், தியாகம், தீர்மானம், அர்ப்பணிப்பு, கடினத்தன்மை, இதயம், திறமை, தைரியம். சிறிய பெண் பிள்ளைகள் இவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனர்.” – Bethany Hamilton

“ஒரு ஆணால் எல்லாவற்றையும் அழிக்க முடிகிறது எனில், ஏன் ஒரு பெண்ணால் அதை மாற்ற முடியாது?” – Malala Yousafzai

சனி, 10 அக்டோபர், 2020

அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்..

அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்..

💥தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றம். பள்ளிக்கல்வி துறை ஆணையர் திருமதி. சிஜி தாமஸ் வைத்தியநாதன் தொழில் முதலீட்டு கழகத்திற்கு மாற்றம். புதிய பள்ளிக்கல்வி ஆணையராக திரு.வெங்கடேஷ். இ.ஆ.ப.நியமனம்.


தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றம்.  பள்ளிக்கல்வி துறை ஆணையர் திருமதி.  சிஜி தாமஸ் வைத்தியநாதன் தொழில் முதலீட்டு கழகத்திற்கு மாற்றம். புதிய  பள்ளிக்கல்வி  ஆணையராக திரு.வெங்கடேஷ். இ.ஆ.ப.நியமனம்.

அக்டோபர் 10, வரலாற்றில் இன்று.உலக மனநல தினம் இன்று.

அக்டோபர் 10, வரலாற்றில் இன்று.

உலக மனநல தினம் இன்று.

உலக மனநல மையம்  சார்பில் 1992 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் 15 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய மனநல மருத்துவக்கழகம் தெரிவிக்கிறது. மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணத்திற்காகவே உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது.

அக்டோபர் 10,வரலாற்றில் இன்று.தேசிய தபால் தினம் இன்று.

அக்டோபர் 10,
வரலாற்றில் இன்று.

தேசிய தபால் தினம் இன்று.

இந்தியாவில் அக்டோபர் 10 முதல் 15ஆம் தேதி வரை தேசிய தபால் வாரமாக கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் இந்திய அஞ்சல் துறையின் நோக்கத்தையும், குறிக்கோளையும் மக்களிடையே பிரபலப்படுத்தி, பொதுமக்களுக்கான தபால் சேவையினை மேம்படுத்தி, பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்வதே ஆகும்.

வெள்ளி, 9 அக்டோபர், 2020

FLASH NEWS- ஆசிரியர் நியமனம் யார் செய்வது... ஆசிரியர் நியமனத்திற்க்கான வயது வரம்பு ,கல்வி தகுதி ,ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் இட மாறுதல், Deployment குறித்து- அரசிதழ் வெளியீடு*

*📘FLASH NEWS- ஆசிரியர் நியமனம் யார் செய்வது... ஆசிரியர் நியமனத்திற்க்கான வயது வரம்பு ,கல்வி தகுதி ,ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் இட மாறுதல், Deployment குறித்து- அரசிதழ் வெளியீடு*

இதுவரை தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றிவந்த.(Tamilnadu elementary education subordinate service) வட்டார கல்வி அலுவலர்கள் ,நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கைத்தொழில் ஆசிரியர்கள் அனைவரும்

 இனி வரும் காலங்களில் பள்ளி கல்வித்துறை பணியாளர்கள் என (Tamilnadu school education subordinate services)  மாற்றம் செய்து அரசாணை பிறப்பிப்பு .

அந்தந்த பதவிகளுக்கு உண்டான கல்வித்தகுதி மற்றும்  தேர்ந்தெடுக்கும் முறை குறித்தான  வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு மேலும்  ஆசிரியர் பணிக்கு நேரடி நியமனத்திற்கு 40 வயதினை வயது வரம்பாக நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

தொடக்க கல்வித்துறையின் கீழ் எந்த ஒரு பதவியும் வரவில்லை

அரசிதழைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.
click here.

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பித்து.. உதவித்தொகை பெற்றுள்ளோர் பட்டியல்.(2019-2020)

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பித்து.. உதவித்தொகை பெற்றுள்ளோர் பட்டியல்.
(2019-2020)
பட்டியலைப் பார்க்க கீழே கிளிக் செய்யவும்.

தொல்லியல் படிப்பில் செம்மொழியான தமிழ் மொழி சேர்ப்பு- மத்திய அரசு அறிவிப்பு

தொல்லியல் படிப்பில் செம்மொழியான தமிழ் மொழி சேர்ப்பு- மத்திய அரசு அறிவிப்பு

அக்டோபர் 9,வரலாற்றில் இன்று.விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த நிர்வாகி எனப் போற்றப்பட்டவருமான தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் (M.Bhaktavatsalam) பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 9,
வரலாற்றில் இன்று.


விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த நிர்வாகி எனப் போற்றப்பட்டவருமான தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் (M.Bhaktavatsalam) பிறந்த தினம் இன்று.

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நசரத்பேட்டையில் செல்வந்தர் குடும்பத்தில் (1897) பிறந்தார். இவருக்கு 5 வயதாக இருந்தபோது தந்தை காலமானார். தாய்மாமன்களின் ஆதரவில் வளர்ந்தார். சென்னையில் ஆரம்பக் கல்வி பயின்றார்.

சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். படித்து முடித்ததும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். அது, இந்திய விடுதலைப் போராட்டங்கள் விறுவிறுப்பாக நடந்துவந்த நேரம். மகாத்மா காந்தி, அன்னிபெசன்ட், திலகர், விபின் சந்திரபால் ஆகிய தலைவர்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

வக்கீல் தொழிலை விட்டு, விடுதலைப் போராட்டத்தில் குதித்தார். 1936இல் சென்னை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எழுத்தாற்றல் கொண்டிருந்த இவர், ‘இந்தியா’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ‘தேசபக்தன்’ உட்பட பல பத்திரிகைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.

ஒத்துழையாமை இயக்கம், தனிநபர் சத்தியாக்கிரகம், ஆகஸ்ட் புரட்சி உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார். சிறையில் ராஜாஜி நிகழ்த்திய பகவத்கீதை, கம்பராமாயண உரைகளைக் கேட்டார். அமராவதி சிறையில் இருந்தபோது பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார்.

தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத் துணைத் தலைவராக இருந்தார். சென்னை மகாஜன சபா செயலாளராக 4 ஆண்டுகள் செயல்பட்டார். மது ஒழிப்பு இயக்கத்தில் பங்கேற்றார். சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது, போலீஸ் தடியடியில் காயமடைந்தார்.

நாடு விடுதலை பெற்றதும், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1946 முதல் 1962 வரை பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1963-ல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தனது ஆட்சிக்காலத்தில், ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டுவந்தார்.

திருக்கோயில்கள் நிதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள், மாணவர் விடுதிகள் உள்ளிட்ட சமுதாய நலத் திட்டங்களைத் தொடங்கலாம் என சட்டத் திருத்தம் கொண்டுவந்தவர். ரூ.5 லட்சம் நிதியுதவி செய்பவர் களின் பெயரிலேயே கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்து, பணக்காரர்கள் பலரையும் கல்வி வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தார்.

தமிழ், ஆங்கிலத்தில் நல்ல புலமையும், தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர். சிறந்த பக்தர். ‘எனது தமிழாசிரியர் உ.வே.சாமிநாத ஐயர், ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்’ என்று கூறுவாராம். சிறந்த ஆற்றலும், அறிவுக்கூர்மையும் நிறைந்தவர்.

‘இவரோடு பழகுவது பல்கலைக்கழகத்தில் படிப்பதற்குச் சமமானது’ என்று இவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மனிதநேய உணர்வோடு வாழ்ந்தவர். பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மை, தூய்மையைக் கடைபிடித்தவர். சட்டப்பேரவையில் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். எதிராளிகளின் மனம் புண்படாமல் தனது கருத்தைச் சொல்வதில் வல்லவர்.

மிக எளிமையானவர், எதிர்க்கட்சியினரும் விரும்பும் தலைவராக விளங்கியவர், தலைசிறந்த தேசியவாதி, மக்கள் நலனையே பெரிதாக நினைப்பவர், சிறந்த நிர்வாகி என்றெல்லாம் போற்றப்பட்ட எம்.பக்தவத்சலம் 90ஆவது வயதில் (1987) காலமானார். சென்னையில் இவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.