செவ்வாய், 9 மார்ச், 2021

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் ~ மாணவர்களுக்கு சிஇஓ பாராட்டு ...

ரப்பரின் கதை...

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களுக்கு 2021 பெப்ரவரி மாதம் ஊதியம் 08.03.2021வரையிலும் கிடைக்கப் பெறவில்லை!எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் விரைந்துக்கிடைத்திட நேரடித் தலையீடு செய்க!நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முறையீடு!

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களுக்கு 
2021 பெப்ரவரி மாதம் ஊதியம்  08.03.2021
வரையிலும் கிடைக்கப் பெறவில்லை!

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களுக்கு 
மாத ஊதியம் விரைந்துக்கிடைத்திட நேரடித் தலையீடு செய்க!

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முறையீடு!

*📮ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறை - அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை...*

*📮ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறை - அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை...*

 *ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தபால் அலுவலக சேமிப்புகளில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.*


*இந்திய தபால் நிலையங்களில் உள்ள அடிப்படை சேமிப்பு கணக்கில் இனி மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே இலவசமாகப் பணம் எடுக்க முடியும். அதன் பிறகு எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் விதிக்கப்படும். இந்தக் கட்டணமானது 25 ரூபாய் அல்லது எவ்வளவு பணம் எடுக்கிறீர்களோ அதில் 0.5 சதவீதமாக இருக்கும். இருந்தாலும் டெபாசிட்டுகளுக்கு எந்த கட்டணமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.*


*நடப்பு கணக்கு:*

*சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கில் மாதத்துக்கு ரூ.25,000 வரையில் பணம் எடுக்க எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. அதைத் தாண்டி எடுக்கப்படும் பணத்திற்கு கட்டணம் விதிக்கப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 25 ரூபாய் அல்லது எவ்வளவு பணம் எடுக்கிறீர்களோ அதில் 0.5 சதவீதம் கட்டணம் இருக்கும். இந்தக் கணக்குகளில் 10,000 ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. அதன் பிறகு  ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்; அல்லது டெபாசிட் தொகையில் 0.50 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும்.*


*AePS கணக்கு:*

*இந்திய அஞ்சல் கணக்கின் மூலம் ஆதார மூலமான பரிவர்த்தனைகளை (AePS) மேற்கொள்ளலாம். இதில் எந்தவொரு வங்கி வாடிக்கையாளரும் தங்களது ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெறுதல், பிற வங்கிக் கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்தல், இருப்பு விசாரணை, மினி ஸ்டேட்மெண்ட் போன்ற இலவச சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் AePS கணக்கில் இதுவரையில் இலவச சேவைகளாக இருந்த நிலையில், இனி இதற்கும் கட்டணம் விதிக்கப்படுகிறது. IPPB நெட்வொர்க்குகளுக்கு இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம் என்றாலும், IPPB அல்லாத பரிவர்த்தனைகளில் மூன்று பரிவர்த்தனைகளுக்கு மட்டும் இலவசம்.*

முதல்முறை இளம் வாக்காளர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?

முதல்முறை இளம் வாக்காளர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?



 18 வயது நிரம்பிய, முதல் முறை இளம் வாக்காளர்கள்  சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் முறை வாக்காளர்களுக்கு, ‘இ-எபிக்’ எனப்படும் மின்னணு வாக்காளர் அட்டையை வழங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.இந்த ‘இ-எபிக்’ மின்னணு வாக்காளர் அட்டை முதல் முறை இளம் வாக்காளர்களுக்கு மட்டுமே முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த கட்டங்களில், அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.’இ-எபிக்’ தேவைப்படும் முதல் முறை இளம் வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தின் www.voterportal.eci.gov.inஇணையதளத்தில், பதிவு செய்து மொபைல் போன் எண் அல்லது இ-மெயில் ஐடி கொடுத்து உள்நுழைந்து, ‘இ-எபிக்’ டவுன்லோடு செய்து கொள்ளலாம்.மேலும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு மார்ச் 13, 14 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்வதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் சிறப்புச் சுருக்க முறை திருத்தம் 2021-ல் பதிவு செய்து கொண்ட இளம் வாக்காளர்கள் சிறப்பு முகாம்களில் தங்களது பதிவு பெற்ற மொபைல் போன் எண்ணைத் தெரிவித்து மின்னணு வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

*🎫சளி, காய்ச்சல் போன்ற எளிய நோய்களுக்கும் NHIS 2016 - இல் சிகிச்சை கிடைக்குமா? - CM Cell Petition Reply...*

*🎫சளி, காய்ச்சல் போன்ற எளிய நோய்களுக்கும் NHIS 2016 - இல் சிகிச்சை கிடைக்குமா? - CM Cell Petition Reply...*

CLICK HERE TN -EMIS NEW UPDATE AVAILABLE NOW - DIRECT LINK.

CLICK HERE TN -EMIS NEW UPDATE AVAILABLE NOW - DIRECT LINK

திங்கள், 8 மார்ச், 2021

நாமக்கல் மாவட்டம் - எருமப்பட்டி ஒன்றியம் - ஒன்றிய ஆசிரியர்களுக்கு 2021 பிப்ரவரி மாத ஊதியம் உடனடியாக வழங்க வலியுறுத்தி மாவட்ட அமைப்பின் சார்பில் நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடம் விண்ணப்பம் இன்று (08/03/2021) அளிக்கப்பட்ட நிகழ்வு.

நாமக்கல் மாவட்டம் - எருமப்பட்டி ஒன்றியம் - ஒன்றிய ஆசிரியர்களுக்கு 2021 பிப்ரவரி மாத ஊதியம் உடனடியாக வழங்க வலியுறுத்தி மாவட்ட அமைப்பின் சார்பில் நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடம் விண்ணப்பம் இன்று (08/03/2021) அளிக்கப்பட்டது.

பரமத்தி ஒன்றியம் 12 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு 15 மாதக்கால தூய்மைப்பணியாளர் ஊதியம் மற்றும் பராமரிப்பு மானியம் உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்ட அமைப்பு இன்று 08.03.2021 நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் ( கணக்கு) அவர்களை ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் சந்தித்த நிகழ்வு.

வணக்கம் ! 

இன்று (08.03.2021- திங்கள்) பிற்பகல் 04.00  மணியளவில்
 நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் ( கணக்கு)   அவர்களை ஆசிரியர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்களின் தலைமையில் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.

பரமத்தி ஒன்றியம் 12 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு 15 மாதக்கால  தூய்மைப்பணியாளர் ஊதியம் மற்றும் பராமரிப்பு மானியம் உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட்டது. 
பரமத்தி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பொது நிதியில் இருந்து ஊதியம் மற்றும் பராமரிப்பு தொகையை விடுவிக்க அறிவுறுத்தல் வழங்கியதாக கண்காணிப்பாளர் தெரிவித்தார். பரமத்தி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கணக்கு) இது குறித்து தகவல் நமக்கு அளிப்பார் என   கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மாவட்ட துணைச் செயலாளர் திரு.வெ.வடிவேல், மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி , எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் திரு.க.ஆனந்தன், பள்ளிபாளையம் ஒன்றியத் தலைவர் திரு.பி.கண்ணன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

-மெ.சங்கர்.
மாவட்டச் செயலாளர்,
ஆசிரியர் மன்றம்.

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் இன்று 08.03.2021 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பம்.

வணக்கம் ! 

இன்று (08.03.2021- திங்கள்) பிற்பகல் 04.30  மணியளவில்
 நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக அலுவலர் (பொது) அவர்களை ஆசிரியர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்களின் தலைமையில் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் மாவட்ட துணைச் செயலாளர் திரு.வெ.வடிவேல், மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி , எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் திரு.க.ஆனந்தன், பள்ளிபாளையம் ஒன்றியத் தலைவர் திரு.பி.கண்ணன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

-மெ.சங்கர்.
மாவட்டச் செயலாளர்,
ஆசிரியர் மன்றம்.