திங்கள், 8 மார்ச், 2021

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் இன்று 08.03.2021 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பம்.

வணக்கம் ! 

இன்று (08.03.2021- திங்கள்) பிற்பகல் 04.30  மணியளவில்
 நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக அலுவலர் (பொது) அவர்களை ஆசிரியர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்களின் தலைமையில் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் மாவட்ட துணைச் செயலாளர் திரு.வெ.வடிவேல், மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி , எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் திரு.க.ஆனந்தன், பள்ளிபாளையம் ஒன்றியத் தலைவர் திரு.பி.கண்ணன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

-மெ.சங்கர்.
மாவட்டச் செயலாளர்,
ஆசிரியர் மன்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக