சனி, 25 நவம்பர், 2017

தொடக்க வகுப்பு மாணவர்களுக்கான பொது அறிவு தேர்வுத் தாள் 2017

English for slow learners.pdf

https://drive.google.com/file/d/12thN3jC_LrapZq2FemxJ5N5E8KfsJS2q/view?usp=drivesdk

G.O Ms : 335 - New Prayer Timings For Tamil Nadu govt Schools

ஜாக்டோ-ஜியோ இராசிபுரம் வட்ட ஆர்ப்பாட்டத்திற்கு மன்றத்தின் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் வெ.பாலமுரளி தலைமைதாங்கினார்...

24.11.17ஆம்தேதிய
இராசிபுரம் வட்ட ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டத்திற்கு  மன்றத்தின் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் வெ.பாலமுரளி தலைமைதாங்கினார்.மன்றத்தின் தலைமைநிலையச்செயலாளர் பெ.பழனிசாமி,மாவட்டத்துணைச்செயலாளர் கு.பாரதி ,வட்டாரச்செயலாளர்கள்இர.ஜெகநாதன்(வெண்ணந்தூர்),எஸ்.அமல்ராஜ்(இராசிபுரம்),சி.மோகன்குமார்(நாமகிரிப்பேட்டை),மன்றத்தின் மாவட்டநிர்வாகிகள்த.அருள்குமார்,சு.சிதம்பம்,வெ.இராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் மன்றத்தின் ஆசிரியப்பெருமக்கள் பெருந்திரளாய் பங்கேற்று கோரிக்கை முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கினர்.

ஜாக்டோ-ஜியோ பரமத்தி-வேலூர் வட்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாநில ப்பொதுக்குழு உறுப்பினர் கே.இரவிக்குமார் கோரிக்கை விளக்க உரை ஆற்றினர்...

24.11.17ஆம்தேதிய ஜாக்டோ-ஜியோ 
பரமத்தி-வேலூர்
வட்ட 
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாநில ப்பொதுக்குழு உறுப்பினர் கே.இரவிக்குமார்,
கபிலர்மலை ஒன்றியத்தலைவர் மணிவண்ணன்,ஒன்றியச்செயலாளர் மெ.சங்கர் ஆகியோர் கோரிக்கை  விளக்க உரை ஆற்றினர்.
மன்ற ஆசிரியப் பெருமக்கள் கலந்துகொண்டனர்...

ஜாக்டோ-ஜியோ திருச்செங்கோடு வட்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாவட்டப்பொருளாளர் ப.ஹரிஹரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்...


24.11.17ஆம்தேதிய ஜாக்டோ-ஜியோ திருச்செங்கோடு
வட்ட
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாவட்டப்பொருளாளர் ப.ஹரிஹரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
மன்றத்தின் மாவட்ட கொள்கை விளக்க அணிச்செயலாளர் பொன்.முருகையன்
தலைமையில் பள்ளிப்பாளையம்,திருச்செங்கோடு,மல்லசமுத்திரம்,எலச்சிப்பாளையம் ஒன்றிய மன்றப்பொறுப்பாளர்களும்,மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். 

ஜாக்டோ-ஜியோ நாமக்கல் வட்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாவட்டச்செயலாளர் முருகசெல்வராசன் கோரிக்கைவிளக்க உரை ஆற்றினார்...


24.11.17ஆம்தேதிய ஜாக்டோ-ஜியோ
நாமக்கல் வட்ட
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாவட்டச்செயலாளர் முருகசெல்வராசன்
கோரிக்கைவிளக்க உரை ஆற்றினார்.
மாவட்டத்துணைத்தலைவர் பொன்.திலகம்,மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் க.இராசேசுவரி,
மன்றத்தின்
வட்டாரச்செயலாளர்கள்
கொ.கதிரேசன்(புதுச்சத்திரம்),நா.அருள்குமார்(எருமப்பட்டி),அ.செயக்குமார்(நாமக்கல்),ஜாக்டோ-ஜியோ எருமப்பட்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நீ.கனகலிங்கம் ஆகியோர் தலைமையில்
ஆர்ப்பாட்டத்தில்
பங்கேற்று கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.

ஜாக்டோ-ஜியோ கொல்லிமலை வட்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு மன்றத்தின் மாவட்டத்துணைத்தலைவர் க.பழனிசாமி தலைமைதாங்கினார்....


24.11.17ஆம்தேதிய ஜாக்டோ-ஜியோ
கொல்லிமலை வட்ட
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு  மன்றத்தின் மாவட்டத்துணைத்தலைவர் க.பழனிசாமி தலைமைதாங்கினார்.மன்றத்தின் மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் மணிகண்டன்,
வட்டாரச்செயலாளர் பி.சுதாகர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில்
பங்கேற்று கோரிக்கை விளக்க உரைஆற்றினார்.

அஞ்சலக கணக்கு; ஆதார் கட்டாயம்

அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள், டிச., 31க்குள் தங்களின் ஆதார், மொபைல் போன் எண் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இது குறித்த அஞ்சல்துறை அறிவிப்பு:
 மத்திய அரசு உத்தரவுப்படி, டிச., 31க்குள், அஞ்சலக கணக்குகளுடன் ஆதார், மொபைல் எண்களை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்திய அஞ்சல்துறை, இதற்கான பணியை தீவிரப்படுத்தி உள்ளது. எனவே, இந்திய அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் ஆதார் அட்டை நகலுடன், மொபைல் போன் எண், அஞ்சல கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அஞ்சலகத்திலோ, தபால்காரர்களிடமோ சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டலுக்கு மாறும் கேரளப் பள்ளிகள்!

கேரள அரசாங்கத்தின் ஹைடெக் பள்ளி திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 20,000 அரசுப் பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன.

கேரள கட்டமைப்பு மற்றும் தொழில் கல்வி என்ற இந்தத் திட்டத்தின்படி, 4,775 பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படும்.

மடிக்கணினிகள், மல்டிமீடியா ப்ரொஜெக்டர்கள் வசதிகள் கொண்ட டிஜிட்டல் பள்ளிகளாக இவை மாற்றப்படவுள்ளன. இதற்காக 60,250 மடிக்கணினிகள், 43,750 மல்டிமீடியா ப்ரொஜெக்டர்கள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் 4775 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயனடையும். இதில், 2685 உயர்நிலைப் பள்ளிகள், 1701 மேல்நிலைப் பள்ளிகள், 389 தொழிற்துறை மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும்.

இத்திட்டத்தைச் செயல்படுத்தும் துறையின் துணைத் தலைவரான அன்வர் சதாத் இது குறித்துக் கூறுகையில், "இத்திட்டம் படிப்படியாக முன்னேறும். முதல் கட்டமாக, ஜனவரி மாதத்துக்குள் 20 ஆயிரம் வகுப்பறைகள் நவீனமயமாக்கப்படும். இதற்காக, 43 ஆயிரத்து, 750 மடிக்கணினிகள் வாங்க, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.