ஞாயிறு, 26 நவம்பர், 2017

சூரியனில் பெரிய ஓட்டை~நாசா கண்டுபிடிப்பு...

NCERT பாடத்திட்டத்தில் திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு இடம் பெறவுள்ளது...


மதுரையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில், 23வது தேசிய சகோதாயா மாநாடு நேற்று துவங்கியது.நிகழ்ச்சியை துவக்கி வைத்து தருண் விஜய் பேசியதாவது:திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை, மீனாட்சி அம்மன் கோவிலில் தான் முதன் முதலில் இறைவனிடம் சமர்ப்பித்தார் என்று கூறப்படுகிறது. 

நம் வரலாறு, கலாசாரத்துடன் திருக்குறளின் ஆழ்ந்த கருத்துக்களையும் உலக அளவில் நாம் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு ஆங்கிலேயர் வகுத்து தந்த கல்வி முறையில் இருந்து நாம் வெளியேற வேண்டும். நம் நாகரிகம், கலாசாரம், பண்பாடு சார்ந்த பாடத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களை குறிப்பிடாமல், இந்திய வரலாறு முழுமை பெறாது. சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களில், வட மாநிலம் தொடர்பான வரலாறு அதிகம் இடம் பெற்றுள்ளது.குறிப்பாக ராஜராஜசோழன் ஆட்சி, கம்போடியா, வியட்நாம் வரை விரிந்து கிடந்தது என்கின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வு வேண்டும்.ஜெர்மன், பிரெஞ்ச் மொழிகளை நாம் இங்கு விருப்ப மொழியாக படிக்கும்போது, வட மாநிலங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் விருப்ப பாடமாக இடம் பெறச்செய்ய வேண்டும்.

வள்ளுவரின் திருக்குறள் உலகத்திற்கே பொதுவானது. அதில் எந்த சூழலுக்கும் ஏற்ற கருத்துக்கள் உள்ளன. திருக்குறள் மற்றும் வள்ளு வரின் வரலாறு குறித்த, என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டத்தில் இடம்பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினேன். அதற்கு அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் சேர்க்கப்படவுள்ளது.

தமிழ் உச்சரிப்புக்காக தயாராகும் " உலகெலாம் தமிழ்" குறும்படம்...

மதுரை, தமிழ் மொழியை அனைவரும் சரியாக பயன்படுத்தும் வகையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், பல்வேறு தலைப்புகளில் தயாராகி வரும் குறும்படங்கள், விரைவில் வெளியிடப்பட உள்ளன.

தமிழை சரியாக உச்சரிக்க, ஒலிக்க, எழுத அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு ஏற்ப, இயற்கை, பண்பாடு, மதிப்பீடுகள் சார்ந்து, பல்வேறு தலைப்புகளில், குறும்படங்கள் தயார் செய்யப்படுகின்றன. இதில், பள்ளி மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, எளிய முறையில் பாடல்களாக, நாடகங்களாக தயாரிக்கின்றனர்.

இதன் மூலம், தமிழை, 30 நாட்களில் எளிதாக புரிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் வாய்ப்பு அமையும். இவை அனைத்தும், 'உலகெலாம் தமிழ்' எனும் தலைப்பில், 10 - 12 நிமிடங்களுக்கு உட்பட்ட குறும்படங்களாக வெளிவர உள்ளன.

மதுரை திருமலை நாயக்கர் மகாலில், 'ர், ற்' என்ற இரு வார்த்தைகளின் உச்சரிப்பு குறித்து, ஒரு அரசவை காட்சியும், நடனமும் படம் பிடிக்கப்பட்டது.

இந்த குறும்படங்களை, கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாது, தமிழை கற்க விரும்பும், மொழியின் அழகியலை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்க உள்ளது.

சனி, 25 நவம்பர், 2017

தொடக்க வகுப்பு மாணவர்களுக்கான பொது அறிவு தேர்வுத் தாள் 2017

English for slow learners.pdf

https://drive.google.com/file/d/12thN3jC_LrapZq2FemxJ5N5E8KfsJS2q/view?usp=drivesdk

G.O Ms : 335 - New Prayer Timings For Tamil Nadu govt Schools

ஜாக்டோ-ஜியோ இராசிபுரம் வட்ட ஆர்ப்பாட்டத்திற்கு மன்றத்தின் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் வெ.பாலமுரளி தலைமைதாங்கினார்...

24.11.17ஆம்தேதிய
இராசிபுரம் வட்ட ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டத்திற்கு  மன்றத்தின் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் வெ.பாலமுரளி தலைமைதாங்கினார்.மன்றத்தின் தலைமைநிலையச்செயலாளர் பெ.பழனிசாமி,மாவட்டத்துணைச்செயலாளர் கு.பாரதி ,வட்டாரச்செயலாளர்கள்இர.ஜெகநாதன்(வெண்ணந்தூர்),எஸ்.அமல்ராஜ்(இராசிபுரம்),சி.மோகன்குமார்(நாமகிரிப்பேட்டை),மன்றத்தின் மாவட்டநிர்வாகிகள்த.அருள்குமார்,சு.சிதம்பம்,வெ.இராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் மன்றத்தின் ஆசிரியப்பெருமக்கள் பெருந்திரளாய் பங்கேற்று கோரிக்கை முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கினர்.

ஜாக்டோ-ஜியோ பரமத்தி-வேலூர் வட்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாநில ப்பொதுக்குழு உறுப்பினர் கே.இரவிக்குமார் கோரிக்கை விளக்க உரை ஆற்றினர்...

24.11.17ஆம்தேதிய ஜாக்டோ-ஜியோ 
பரமத்தி-வேலூர்
வட்ட 
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாநில ப்பொதுக்குழு உறுப்பினர் கே.இரவிக்குமார்,
கபிலர்மலை ஒன்றியத்தலைவர் மணிவண்ணன்,ஒன்றியச்செயலாளர் மெ.சங்கர் ஆகியோர் கோரிக்கை  விளக்க உரை ஆற்றினர்.
மன்ற ஆசிரியப் பெருமக்கள் கலந்துகொண்டனர்...

ஜாக்டோ-ஜியோ திருச்செங்கோடு வட்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாவட்டப்பொருளாளர் ப.ஹரிஹரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்...


24.11.17ஆம்தேதிய ஜாக்டோ-ஜியோ திருச்செங்கோடு
வட்ட
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாவட்டப்பொருளாளர் ப.ஹரிஹரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
மன்றத்தின் மாவட்ட கொள்கை விளக்க அணிச்செயலாளர் பொன்.முருகையன்
தலைமையில் பள்ளிப்பாளையம்,திருச்செங்கோடு,மல்லசமுத்திரம்,எலச்சிப்பாளையம் ஒன்றிய மன்றப்பொறுப்பாளர்களும்,மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். 

ஜாக்டோ-ஜியோ நாமக்கல் வட்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாவட்டச்செயலாளர் முருகசெல்வராசன் கோரிக்கைவிளக்க உரை ஆற்றினார்...


24.11.17ஆம்தேதிய ஜாக்டோ-ஜியோ
நாமக்கல் வட்ட
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாவட்டச்செயலாளர் முருகசெல்வராசன்
கோரிக்கைவிளக்க உரை ஆற்றினார்.
மாவட்டத்துணைத்தலைவர் பொன்.திலகம்,மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் க.இராசேசுவரி,
மன்றத்தின்
வட்டாரச்செயலாளர்கள்
கொ.கதிரேசன்(புதுச்சத்திரம்),நா.அருள்குமார்(எருமப்பட்டி),அ.செயக்குமார்(நாமக்கல்),ஜாக்டோ-ஜியோ எருமப்பட்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நீ.கனகலிங்கம் ஆகியோர் தலைமையில்
ஆர்ப்பாட்டத்தில்
பங்கேற்று கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.