வெள்ளி, 11 மே, 2018

இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி என்ற தொழில்நுட்பம் வகுப்பறைகளில் அறிமுகம்...


டேப்லெட்', கணினி, கணினி தொடுதிரை போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்காக 'இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி' என்ற தொழில்நுட்பம், வகுப்பறைகளில் அறிமுகம்.

அடுத்த தலைமுறை 'ஸ்மார்ட்' தலைமுறையாக உருவாக தமிழக அரசு பள்ளி பாடத்திட்டத்தை நவீனப்படுத்தி விட்டது. பாட முறைகளிலும், பாட விவரங்களை அறிந்து கொள்வதிலும் இந்த தலைமுறைக்கு பரிச்சியமான பல பாடப்புத்தகத்திலும் வந்துவிட்டது.

தமிழக அரசு வெளியிட்ட 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் தொடர்பான தகவல்கள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளன.

பாடநூல்களில் வழக்கமாக இடம்பெற்றிருக்கும் தகவல்களுடன் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதி பெட்டிச் செய்தி போன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட பாடத்தில் உள்ள விஷயங்கள் நமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு க்யூ.ஆர்.குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. அதை ஆண்ட்ராய்டு வசதி கொண்ட செல்லிடப்பேசியில் ஸ்கேன் செய்வதன் மூலம் பாடம் குறித்து இணையதளத்தில் ஏற்கெனவே உள்ள கருத்துகள், காணொலிக் காட்சிகள் (யு-டியூப்), படங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.

மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் 'டேப்லெட்', கணினி, கணினி தொடுதிரை போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்காக 'இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி' என்ற தொழில்நுட்பம், வகுப்பறைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பாடநூல்களில் ஒவ்வொரு பாடங்கள் தொடர்பாகவும் கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக இணையதள முகவரிகள் இடம்பெற்றுள்ளன.

பாடநூலின் பின்பகுதியில் முக்கிய கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் சொற்களஞ்சியம் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பகுதியில் அந்தப் பாடம் இடம் பெற்றதற்கான காரணம் – பாடத்தில் குறிப்பிட்டுள்ள விஷயம் தொடர்பாக உயர் கல்வியில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்ற தகவல் இடம்பெற்றுள்ளன.

'அனிமேஷன் விலங்குகள் வழிகாட்டுதல்,சாலையின் தத்ரூபக் காட்சிகள்!’ - கூகுள் மேப்ஸின் அசத்தல் அப்டேட்


அருகில் இருக்கும் உணவகங்கள் மற்றும் இடங்களை எளிதில் அறிந்துகொள்ளும் விதமாக கூகுள் மேப்ஸ் தற்போது முற்றிலும் புதிய அம்சங்களுடன் விரைவில் வெளிவரவிருக்கிறது.

கலிஃபோர்னியாவில் நடைபெற்ற கூகுள் I/O 2018 டெவலப்பர்ஸ் நிகழ்ச்சியில் முற்றிலும் புதிய அம்சங்களுடன் கூகுள் மேப் செயலி வரவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய அம்சத்தை கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் அபர்ணா சென்னப்பிரகாடா மேடையில் விளக்கினார். இந்தக் கோடை முடிந்தவுடன் அனைத்து ஆண்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களிலும் இந்தச் சேவை கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புதிய அப்டேட்டில் உள்ள அம்சங்கள் இதுவரை கூகுள் மேப்பில் இல்லாதவையாக இருக்கும். இதற்காக கூகுள் மேப்ஸின் எக்ஸ்ப்ளோர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களின் இலக்கை அடைய மிக யதார்த்தமான சாலை போன்ற காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அனிமேஷனில் உருவாக்கப்பட்ட விலங்குகளே இனி நமக்கு வழிகாட்டும். இதனால் இந்தச் செயலையைப் பயன்படுத்துவதற்கு ஆர்வமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இனி கூகுள் மேப்ஸை பயன்படுத்தி நீங்கள் ஓர் இடத்தைத் தேடும் போது அதற்கு அருகில் உள்ள சிறந்த உணவகங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை தானாகவே உங்களுக்குக் காட்டும். நீங்கள் உணவுப் பிரியர் என்றால் டேஸ்ட்மேக்கர்கள் அதிகம் செல்லும் பகுதிகளை உங்களுக்குக் காண்பிக்கும். கூகுள் அல்காரிதம் மற்றும் உள்ளூர் மக்கள் தரும் நம்பத்தகுந்த தகவல்களைக் கொண்டு புதிய உணவகங்களை அறிந்துகொள்ள முடியும். மேலும், இதில் புதிதாக வழங்கப்பட்டுள்ள யுவர் மேட்ச் (Your Match) வசதியில் நீங்கள் ஒரு உணவகத்துக்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்தால் அங்கு எந்த மாதிரியான உணவுகள் தயாரிக்கப்படுகிறது, அங்கு நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியும் மற்றும் அதற்கான காரணங்களுடன் காண்பிக்கும்.

ஃபார் யூ (For You) என்ற வசதியில், உங்கள் பகுதிக்கு அருகில் நடக்கும் புதிய தகவல்கள், நிகழ்ச்சிகளை எளிதில் தெரிந்துகொள்ள முடியும். இதைக்கொண்டு உங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் மிகவும் தலை சிறந்த இடங்கள் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

வருந்துகிறோம்~ தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கரூர் மாவட்டச்செயலாளரின் தந்தையார் திரு.சுப்ரமணியன் நாமக்கல்-மோகனூரில் மரணமடைந்துள்ளார்…


வருந்துகிறோம்
-----------------------------
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கரூர் மாவட்டச்செயலாளரின் தந்தையார் திரு.சுப்ரமணியன்  நாமக்கல்-மோகனூரில் மரணமடைந்துள்ளார்.
மறைந்த அன்னார் பணிநிறைவு தலைமையாசிரியர் ஆவார்.நாமக்கல் அருகில் உள்ள தாதம்பட்டியை பூர்விகமாகக்கொண்டவர்.பணிநிறைவுக்குப் பின் மோகனூரை வாழ்விடமாகக்கொண்டவர்.
திரு.சுப்ரமணியனின் அஞ்சலி மோகனூர்,கலைவாணி நகரில்  11.05.18முற்பகல் 11.30மணியளவில் நடைபெறுகிறது.
அன்னாரின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது;
வருத்தமளிக்கிறது.
அன்னாரின் மறைவிற்கு
மாநில  அமைப்பு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலைத்தெரிவித்துக்கொள்கிறது.
  ~பொதுச்செயலாளர்,                   தமிழ்நாடு                 தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.

அஞ்சலி~தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கரூர் மாவட்டச்செயலாளரின் தந்தையார் நாமக்கல்-மோகனூரில் மரணமடைந்துள்ளார்…

அஞ்சலி
----------------
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கரூர் மாவட்டச்செயலாளரின் தந்தையார் நாமக்கல்-மோகனூரில் மரணமடைந்துள்ளார்.
மறைந்த அன்னார் பணிநிறைவு ஆசிரியர்.நாமக்கல் அருகில் உள்ள தாதம்பட்டியை பூர்விகமாகக்கொண்டவர்.பணிநிறைவு பெற்று மோகனூரை வாழ்விடமாகக்கொண்டவர்.
அன்னாரின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது;
வருத்தமளிக்கிறது.
அன்னாரின் மறைவிற்கு நாமக்கல் மாவட்ட அமைப்பு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலைத்தெரிவித்துக்கொள்கிறது.

        ~முருகசெல்வராசன்,
          மாவட்டச்செயலாளர்.

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு வாய்ப்பு இல்லை-நிதித்துறை அதிகாரி...

துவக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்க உத்தரவு...


:ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்க பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தேர்வுகள் நிறைவு பெற்று, கடந்த மாதம், 20ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. 
ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வருகைப்பதிவை அதிகரிக்க மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வருகைப்பதிவு துவங்கப்பட்டது.வழக்கமாக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான வகுப்புக்கு மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே துவங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, பள்ளிகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும், 'பிளக்ஸ்' பேனர் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'முன்கூட்டியே துவங்கினாலும், பள்ளி திறப்புக்கு பத்து நாட்களுக்கு முன்பே பெற்றோர் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவர். அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவி, உயர்ந்துள்ள கல்வித்தரம் குறித்து, பெற்றோரிடம் விரிவாக எடுத்து கூறி, மாணவர் சேர்க்கையை நடப்பாண்டில் அதிகரிக்க முயற்சித்து வருகிறோம்,' என்றார்.

வியாழன், 10 மே, 2018

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது - இயக்குநர் செயல்முறைகள்...

மின் வாரிய உதவி பொறியாளர் பணி...


மின் வாரியம், 25 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை, ஆகஸ்ட் மாதம் நடத்த உள்ளது.

 தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவி பொறியாளர் உட்பட, 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன.
இதனால், ஒருவரே, பல வேலைகளை செய்ய வேண்டியுள்ளது.இதையடுத்து, எலக்ட்ரிகல் பிரிவில், 300; சிவில் பிரிவில், 25 என, மொத்தம், 325 உதவி பொறியாளர் பணியிடங்களை, முதன்முறையாக, எழுத்து தேர்வு வாயிலாக நிரப்புவதற்கான அறிவிப்பை, பிப்., 14ல் வாரியம் வெளியிட்டது. இதற்கு, 81 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

அண்ணா பல்கலை வாயிலாக, எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளது. அண்ணா பல்கலையில், இன்ஜி., படிப்புக்கான கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது. இதனால், உதவி பொறியாளர் எழுத்து தேர்வை, ஆகஸ்டில் நடத்தித் தருவதாக, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. தேர்விற்கான பாடத்திட்டம், மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே, வேலைக்காக, யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறாமல், 2 மாதங்கள் கஷ்டப்பட்டு படித்தால், தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்து, உதவி பொறியாளர் பணிக்கு தேர்வாகலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

20ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்~ஜாக்டோ - ஜியோ நிர்வாகி தகவல்…


ஜாக்டோ - ஜியோ சார்பில் சென்னையில்  நடந்த கோட்டை முற்றுகை போராட்டம், 20ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள உயர்நிலை குழு கூட்டம் தொடர்பாக ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான அன்பரசு நிருபர்களிடம் கூறியதாவது:

கோட்டை முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மே 6ம் தேதியே எங்கள் அமைப்பின் நிர்வாகிகளை வீடு புகுந்து கைது செய்தனர். ஒவ்வொரு தாலுக்காவிலும் உள்ள உறுப்பினர்களை தேடித் தேடி 3,000 பேரை கைது செய்து எங்களின் போராட்டத்தை முடக்க முயன்றனர். ஆனால், போலீசாரிடம் சிக்காத நிர்வாகிகள் 250 தனியார் பஸ்களிலும், 400க்கும் அதிகமான வேன்களிலும் ஏறி சென்னை  புறப்பட்டனர். அவர்களை நடுவழியில், டோல்கேட்களில் இறக்கிவிட்டனர். எங்கள் உறுப்பினர்கள் வந்த பஸ்களின் பெர்மிட்டை ரத்து செய்வோம் என்றும் மிரட்டியதோடு, வேன் டிரைவர்களின் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களையும் பறித்து வைத்துக்கொண்டனர்.

நடுவழியில் இறக்கிவிட்டாலும் பரவாயில்லை என்று கூறி, அதிகாலை 2 மணிக்கு சென்னையை நோக்கி பல உறுப்பினர்கள் நடக்கத் தொடங்கினர். பின்னர், அவ்வழியாக வந்த பஸ்களில் ஏறி சென்னை வந்துள்ளனர். எங்கள் அமைப்பை சேர்ந்த 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்னை வந்தனர். கைது செய்யப்பட்டு விடுதலையானதும்  அனைவரும், மீண்டும் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டோம். அதைத்தொடர்ந்து போலீசார் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். சென்னையில் கைது செய்யப்பட்டிருந்த முக்கிய நிர்வாகிகளை போலீஸ் வாகனத்தில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அழைத்து வந்தனர். வேன் டிரைவர்களின் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப அளித்ததோடு, எங்கள் உறுப்பினர்கள் வந்த வேன்களிலேயே சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்தனர். அதேபோல், வெளியூர்களில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ததோடு, அதுதொடர்பாக வயர்லெஸ் மூலம் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்தே தற்காலிகமாக பேராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தோம்.

ஆனால், கடைசி வரை தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராதது பெரும் தவறு. நாங்கள் என்ன தீவிரவாதிகளா, நாங்களும் அரசின் அங்கம் தான். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. அந்த வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்று கவர்னர் உரையில் அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாகவும் நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளோம். வரும் 20ம் தேதி திருச்சியில் 114 சங்கங்களின் நிர்வாகிள் 250 பேர் ஒன்று கூடி அடுத்தகட்ட பேராட்டம் தொடர்பாக முடிவெடுப்போம். அதற்குள் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் பெரிய அளவில் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும். இவ்வாறு  கூறினார்.

CBSE மாணவர்களுக்கு தமிழ் பாடம் கட்டாயமில்லை...


சி.பி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில் இருந்து, தமிழக பாடத்திட்டத்துக்கு மாறும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பில் தமிழ் கட்டாயம் இல்லை என, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

உத்தரவு :

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 2015 - 16ம் கல்வி ஆண்டு முதல், ஒன்றாம் வகுப்பில் இருந்து, படிப்படியாக, ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயமாக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வரும் கல்வி ஆண்டில், நான்காம் வகுப்பு வரை, தமிழ் கட்டாயமாகிறது.

பிறமொழியை தாய்மொழியாக உடைய, மொழி சிறுபான்மை மாணவர்கள், தமிழகத்தில், எட்டாம் வகுப்பு வரை படித்தால், அவர்களுக்கு, 10ம் வகுப்பில், தமிழ் பாடம் கட்டாயம் படிக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பு மற்றும், 10ம் வகுப்பில் சேர்ந்தால், தமிழ் கட்டாயமில்லை என, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக பாடத்திட்டம் இல்லாமல், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில், தமிழகத்திலேயே படித்த மாணவர்கள், தமிழக பாடத்திட்டத்தில், ஒன்பது அல்லது, 10ம் வகுப்பில் சேர்ந்தால், அவர்களுக்கும் தமிழ் கட்டாயம் இல்லை என, சலுகை வழங்கப்பட்டுள்ளது.

3ம் வகுப்பு வரை :

பிற பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, 2017 - 18 கல்வியாண்டு வரை, 3ம் வகுப்பு வரை மட்டுமே, தமிழ் கட்டாயம் ஆகியுள்ளது. எனவே, நான்காம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையுள்ளவர்கள், தமிழை
படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால், அவர்களுக்கு தமிழக பாடத்திட்டத்தில், திடீரென தமிழை கட்டாயமாக்க முடியாது என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இது குறித்து, உயர் நீதிமன்றமும் பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை பின்பற்றி, தமிழுக்கு விலக்கு அளிக்கும் அரசாணையை, அரசு பிறப்பித்துள்ளது. தமிழ் படிக்க விலக்கு அளிக்கும் சட்டம், 2024 - 25 வரை அமலில் இருக்கும். பின், பிறமொழி பாடத்திட்ட மாணவர்களுக்கும், 10ம் வகுப்பில், தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.