வெள்ளி, 11 மே, 2018

துவக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்க உத்தரவு...


:ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்க பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தேர்வுகள் நிறைவு பெற்று, கடந்த மாதம், 20ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. 
ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வருகைப்பதிவை அதிகரிக்க மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வருகைப்பதிவு துவங்கப்பட்டது.வழக்கமாக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான வகுப்புக்கு மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே துவங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, பள்ளிகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும், 'பிளக்ஸ்' பேனர் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'முன்கூட்டியே துவங்கினாலும், பள்ளி திறப்புக்கு பத்து நாட்களுக்கு முன்பே பெற்றோர் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவர். அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவி, உயர்ந்துள்ள கல்வித்தரம் குறித்து, பெற்றோரிடம் விரிவாக எடுத்து கூறி, மாணவர் சேர்க்கையை நடப்பாண்டில் அதிகரிக்க முயற்சித்து வருகிறோம்,' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக