வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

2019~2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகள்...

2019-2020 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பொறுப்பு நிதியமைச்சரான பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.

2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகள்...

* 2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு.

* இதுவரை எந்த ஆட்சிக்காலத்திலும் இல்லாத வகையில் 5 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி.

* பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

* உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளில் 6-வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்.

* நிதிப்பற்றாக்குறை 3.4 சதவீதமாக குறைப்பு.

* ஜி.எஸ்.டி. அறிமுகத்தால் வரி விதிப்பு எளிதாக்கப்பட்டு உள்ளது.

* உற்பத்தி மதிப்பில் 5.6% ஆக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 % ஆக குறைப்பு.

* வங்கித்துறையில் சீர்திருத்த நடவடிக்கையால் வாராக்கடன் குறைந்துள்ளது.

* ரியல் எஸ்டேட்டில் சீர்திருத்த சட்டம் நிறைவேற்றியதால் வெளிப்படை தன்மை.

* 5 லட்சம் கிராமங்களில் கழிவறைகள் அமைத்து சுகாதாரத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* வங்கிகளின் வாராக்கடன் ரூ.3 லட்சம் கோடி மீட்பு.

* உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு.

* 23,900 கோடி டாலர் அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது இந்தியா.

* ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு.

* கிராம சாலைகள் அமைக்கும் திட்டம் 3 மடங்காக உயர்வு.

* கிரமபுற சாலைகள் அமைக்க ரூ.19,000 கோடி ஒதுக்கீடு.

* 50 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி அறிமுகம்.

* கடந்த 4 ஆண்டுகளில் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1.53 லட்சம் விடுகள் கட்டுப்பட்டுள்ளன.

* 22-வது எய்ம்ஸ் மருத்துவமனை அரியானாவில் அமைய உள்ளது.

* சிறிய விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கும் சிறப்பு திட்டம்.

* ரூ.6,000 உதவி திட்டம் மூலம் ரூ.12 கோடி விவசாய குடும்பங்கள் பயன் பெறும்.

* சிறிய விவசாயிகளுக்கு உதவ ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

* நேரடி வருமான உதவி திட்டம் செயல்ப்படுத்தப்படும்.

* கால்நடை வளர்ப்பு மற்றும் மீனவர் நலனுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.

* 22 விளைபொருட்களின் ஆதார விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

* இயற்கை பேரழிவால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு 2 சதவீத வட்டி மானியம்.

* பொருளாதார வளர்ச்சியால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

* அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 பென்சன் வழங்க நடவடிக்கை.

வருமான வரி சலுகைகள் அறிவிப்பு...

*வருமான வரி உச்ச வரம்பு சலுகை 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்வு.

*நிரந்தர கழிவு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்வு.

*ஒட்டுமொத்த வருமா வரிசலுகையால் 6.25 லட்சம் வரையில் இனி வருமான வரி கட்ட வேண்டிய தேவையில்லை.

*இரண்டு வீடுகளுக்கு இனி வீட்டுக்கடன் சலுகை வழங்கப்படும்.

*வங்கி வட்டியில் இருந்து  வருமானத்துக்கு தனியாக 50 ஆயிரம் ரூபாய் விலக்கு அளிக்கப்படும்.

*2வது வீடு வாங்குபவர்களுக்கும் வருமான வரியில் சலுகை.

*வீட்டு வாடகை கழிவுக்கான உச்ச வரம்பு ரூ. 1.80 லட்சத்தில் இருந்து ரூ. 2.40 லட்சமாக உயர்வு.

*5 லட்சம் ரூபாய் வரை அனைவருக்கும் வருமான வரி விலக்கு. வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சேமிப்புகளில் முதலீடு செய்பவர்களுக்கு ரூ. 6.5 லட்சம் ரூபாய் வரை விலக்கு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட,ஒன்றியப்பொறுப்பாளர்கள், மன்றமுன்னோடிகள் என 38 மறவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். வேலைநிறுத்தப்போராட்டத்தில் 30.01.19 முடிய பங்கேற்று நாளதுவரை( 31.01.19) பணியமர்வு ஆணைக்கு 13 மறவர்கள் காத்திருக்கின்றனர்...

அன்பானவர்களே!வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில தலைமைநிலையச்செயலாளர்திரு.பெ.பழனிசாமி உள்ளிட்டு மாநில,மாவட்ட,
ஒன்றியப்பொறுப்பாளர்கள்,மன்றமுன்னோடிகள் 
என  38  மறவர்கள் 
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

வேலைநிறுத்தப்போராட்டத்தில் 30.01.19 முடிய பங்கேற்று நாளதுவரை
( 31.01.19)பணியமர்வு ஆணைக்கு 13 மறவர்கள்  காத்திருக்கின்றனர். 

மேற்கண்ட  பெருமைக்கும்,
தியாகத்திற்கும் சொந்தம் கொண்டாடும் உரிமை உடைய அமைப்பு ஆசிரியர் மன்றம் ஆகும்.

தொண்டால் ,
கடமையால்,
நல்பணியால்
சேவையால் வணக்கத்துக்குரிய,போற்றுதலுக்குரிய,பாராட்டுக்குரிய ஆசிரியர்மன்றத்தின்  உறுப்பினர்,பொறுப்பாளர் என்ற முறையில் கர்வம் பிறக்கிறது;சங்க கடமை முன்னை விடவும் மேலும் வலுவாய் மனதில் நிறைகிறது.

இத்தகு பெருமைமிகு தியாகசீலர்கள் நிறைந்த ஆசிரியர்மன்றத்தை மேன்மேலும் பலப்படுத்துவோம்;
வலுப்படுத்துவோம்.
உயர்த்துவோம்.

கன்னித்தமிழ் வளர...
கல்வித் தரமுயர...
கணக்காயர் நிலை மேம்பாடு பெற்றிட...
ஆசிரியர் மன்றம் காப்பீர்!வளர்ப்பீர்!!உயர்வீர்!!!
               
                   நன்றி.
           ~முருகசெல்வராசன்.

பள்ளி நாட்காட்டி~பிப்ரவரி 2019…

வியாழன், 31 ஜனவரி, 2019

சென்னையை தொடர்ந்து சேலத்தில் போக்குவரத்தை சரிசெய்ய ரோபோட் ~ பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு…

தொடக்கக் கல்வி - அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் செயல்படும் இடம் - அரசாங்க நிலங்களை "Tamil Nilam" தரவு தளத்தில் பதிவு செய்வது குறித்து கல்வித்துறைக்கு சொந்தமான நிலங்களின் விவரங்கள் கோருதல் -தொடர்பாக...

வாக்காளர் பட்டியல் - நாமக்கல் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் - 31.01.2019 (வியாழக்கிழமை) வெளியிடுதல்-வாக்குச்சாவடி மையங்களாக உள்ள மேல்நிலை , உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளை திறந்தது வைத்தல் - தொடர்பாக ...

மாணவர்கள், மக்கள் நலன் கருதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்~மு.க.ஸ்டாலின்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கவனத்திற்கு...

ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக்குழு கூடி வேலைநிறுத்தப்போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்போர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டோர், தற்காலிக பணிநீக்கத்தில் இருப்போர்,ஜாமீனில் விடுவிக்கப்பட்டு பணியில் சேராதோர் மேலும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டோரின் சம்பந்தமான விபரங்கள், பணிநீக்க ஆணை முதலியவற்றை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட (எதுவும் விடுபடாமல்)அனைத்து விபரங்களையும் சேகரித்து  உடனே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளாருக்கும் விரைவு தபாலில் உடன் அனுப்பி வைக்கவும்...

 காலை 11மணிக்குள்
 ஜாக்டோ ஜியோ போராட்ட வழக்கு தொடர்பான பணிநீக்கம் தொடர்பான  ஆணை நகல் மற்றம்  நடவடிக்கை தொடர்பான  நகல்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் தலைவர் அவர்களின் Whatsapp எண்ணிற்கு உடன் அனுப்பவும்...

இவண்
க.மீனாட்சிசுந்தரம்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
மாநில ஒருங்கிணைப்பாளர், ஜாக்டோ ஜியோ.

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது...

மாணவர்கள் நலன்கருதியும், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்கவும், மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் , அனைத்துக்கட்சித் தலைவர்கள் வேண்டுகோளுக்கிணங்கவும், நீதிமன்ற அறிவுறுத்தலின் படியும் ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான துறைரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்துசெய்து, ஜனவரி 21 அன்று இருந்த நிலையே தொடர தமிழகஅரசுக்கு வேண்டுகோள்விடுக்கிறோம். 

மேலும் 9 நாட்கள் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அரசூழியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

~பாவலர் க.மீனாட்சி சுந்தரம் Ex.MLC,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.