வியாழன், 31 ஜனவரி, 2019

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது...

மாணவர்கள் நலன்கருதியும், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்கவும், மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் , அனைத்துக்கட்சித் தலைவர்கள் வேண்டுகோளுக்கிணங்கவும், நீதிமன்ற அறிவுறுத்தலின் படியும் ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான துறைரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்துசெய்து, ஜனவரி 21 அன்று இருந்த நிலையே தொடர தமிழகஅரசுக்கு வேண்டுகோள்விடுக்கிறோம். 

மேலும் 9 நாட்கள் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அரசூழியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

~பாவலர் க.மீனாட்சி சுந்தரம் Ex.MLC,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக