வியாழன், 31 ஜனவரி, 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கவனத்திற்கு...

ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக்குழு கூடி வேலைநிறுத்தப்போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்போர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டோர், தற்காலிக பணிநீக்கத்தில் இருப்போர்,ஜாமீனில் விடுவிக்கப்பட்டு பணியில் சேராதோர் மேலும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டோரின் சம்பந்தமான விபரங்கள், பணிநீக்க ஆணை முதலியவற்றை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட (எதுவும் விடுபடாமல்)அனைத்து விபரங்களையும் சேகரித்து  உடனே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளாருக்கும் விரைவு தபாலில் உடன் அனுப்பி வைக்கவும்...

 காலை 11மணிக்குள்
 ஜாக்டோ ஜியோ போராட்ட வழக்கு தொடர்பான பணிநீக்கம் தொடர்பான  ஆணை நகல் மற்றம்  நடவடிக்கை தொடர்பான  நகல்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் தலைவர் அவர்களின் Whatsapp எண்ணிற்கு உடன் அனுப்பவும்...

இவண்
க.மீனாட்சிசுந்தரம்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
மாநில ஒருங்கிணைப்பாளர், ஜாக்டோ ஜியோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக