ஞாயிறு, 5 ஜூலை, 2020

இரண்டு வருட படிப்பாக MCA மாற்றம் - AICTE அறிவிப்பு


*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,பரமத்தி ஒன்றியம் 03.07.2020 செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் காலைக்கதிர் (05.07.2020)நாளிதழ் செய்தி.நன்றி-காலைக்திர்.*👆

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,பரமத்தி ஒன்றியம்  03.07.2020 செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் காலைக்கதிர் (05.07.2020)நாளிதழ் செய்தி.நன்றி-காலைக்திர்.*👆

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட இணையவழி ஒன்றியச்செயலாளர்கள் கூட்ட நிகழ்வுகள் நாள்:05.07.2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் ஒன்றியச்செயலாளர்கள் கூட்டம் இணையவழியில் இன்று(05.07.2020)பிற்பகல் 06.00மணிக்கு தொடங்கி 08.25 மணிக்கு நிறைவுபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் திரு.க.ஆசைத்தம்பி அவர்கள் தலைமை தாங்கினார்.மாவட்டப்பொருளாளர் திரு.சு.பிரபு முன்னிலை வகித்தார்.
மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் இயக்க உரை ஆற்றினார்.

நாமக்கல் மாவட்டத்தின் 13  ஒன்றியங்களில் இருந்தும் பங்கேற்ற பொறுப்பாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட முடிவுகள்   தீரமிகு போராட்டக்களத்தில் இருக்கும் பரமத்தி ஒன்றிய அமைப்பிற்கு தெரியப்படுத்துவது -வழிகாட்டுவது  என்று இக்கூட்டம்
முடிவாற்றி உள்ளது.

பரமத்தி ஒன்றிய அமைப்பின் அனைத்துவகை போராட்ட நடவடிக்கைகளுக்கும் அனைத்து ஒன்றிய அமைப்புகளும் உறுதிமிக்க  ஆதரவினை நல்குவது என்று இக்கூட்டம் முடிவாற்றி 
உள்ளது.

*(மெ.சங்கர்),*
*மாவட்டச்செயலாளர்.*



























அடுத்த ஒரு வருடத்திற்கான கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது கேரள அரசு

அடுத்த ஒரு வருடத்திற்கான கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது கேரள அரசு

*பொதுமக்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் கட்டாயம் முகக் கவசம் அணி வேண்டும்.

*பொது இடங்களில் 6 அடி சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்



*☀மார்ச்/ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் நடத்தப்படாமல் விடுபட்ட மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இரத்து செய்யப்பட்டது...காலாண்டு/அரையாண்டு விடைத்தாள்களை பள்ளியிலிருந்து பெறுதல் -மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவு செய்தல் சார்பான அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.125746/பி1/2019 நாள்:04.07.2020*👆

*☀மார்ச்/ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் நடத்தப்படாமல்  விடுபட்ட மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இரத்து செய்யப்பட்டது...காலாண்டு/அரையாண்டு விடைத்தாள்களை பள்ளியிலிருந்து பெறுதல் -மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவு செய்தல் சார்பான   அரசுத் தேர்வுகள் இயக்குநர்  அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.125746/பி1/2019 நாள்:04.07.2020*


*🌐ஜூலை 5, வரலாற்றில் இன்று:எழுத்தாளர் பாலகுமாரன் பிறந்த தினம் இன்று.*

ஜூலை 5,
வரலாற்றில் இன்று.


எழுத்தாளர் பாலகுமாரன் பிறந்த தினம் இன்று.



பாலகுமாரன் (ஜூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின் புகழ்பெற்ற  எழுத்தாளர் ஆவார். இவர் இருநூறுக்கும் மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.


பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை(டிராக்டர்) இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இயக்குநர் பாலச்சந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

*📱ANDROID PHONE வைத்துள்ளீர்களா? இந்த 7 ரகசியங்களை தெரிஞ்சுக்கோங்க..*

*📱ANDROID PHONE வைத்துள்ளீர்களா? இந்த 7 ரகசியங்களை தெரிஞ்சுக்கோங்க..*


*பெரும்பாலான பயனர்களுக்கு ஸ்மார்ட்போனுக்குள் ஒளிந்துள்ள பல அம்சங்கள் தெரிந்துகொள்ளவே இல்லை. அதனால் அவற்றை பயன்படுத்தவும் முடிவதில்லை. இந்த வசதிகளை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் மேலும் சிறப்பான அனுபவத்தை பெறமுடியும். இதோ உங்கள் ஆண்ட்ராய்டு போனில் மறைந்துள்ள 7 சிறப்பம்சங்கள்..*


 *தேர்ந்தெடுத்த நபர்களின் அழைப்புகளை மட்டும் எடுங்கள்.*

*நமக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என எண்ணும் போது ' டோன்ட் டிஸ்டர்ப்' என்னும் வசதியை பயன்படுத்துவோம். இதில் ' பிரியாரிட்டி ஒன்லி' என்ற வசதி இருப்பதை வெகு சிலரே அறிவர். இதன் மூலம் முக்கிய நபர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், முக்கிய நேரங்களில் யார் உங்கள் தொந்தரவு செய்யலாம், செய்யக்கூடாது என முடிவு செய்யலாம்.*

 
*வீட்டிற்குள் சென்றவுடன் போன் தானாக அன்லாக் செய்யும் வசதி.*

*இந்த ஸ்மார்ட் லாக் வசதி ஒரு சில காரணங்களால் உண்மையிலேயே ஸ்மார்ட் தான். நம்பத்தகுந்த இடங்கள் பட்டியலில் உங்கள் வீட்டை இணைத்துவிட்டால், நீங்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் போன் தானாகவே அன்லாக் ஆகிவிடும். இந்த வசதியை பயன்படுத்த, ஜி.பி.எஸ்-ஐ ஸ்விட்ச் ஆன் செய்திருக்க வேண்டும்.*

*இதயத்தை கண்காணித்தல்*


*உங்கள் இதய துடிப்பை கண்காணிக்க வேண்டுமென்றால், கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள 'Instant Heart Rate' என்ற செயலியை இன்ஸ்டால் செய்யுங்கள். பின்னர் அந்த செயலியை இயக்கி கேமரா மீது உங்கள் சுட்டு விரலை வைப்பதன் மூலம் இதய துடிப்பை கணக்கிடலாம்.*

*திரை உருப்பெருக்கியை பயன்படுத்துங்கள்.*

*உங்களுக்கு கண்பார்வை குறைவாக இருந்தால், திரை உருப்பெருக்கி (screen magnifier)மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Settings-> Accessibility-> Magnification மூலம் இந்த வசதியை பயன்படுத்தலாம். ஒரு விரலை வைத்து திரையில் தட்டுவதன் மூலம் எளிதாக திரையை பெரிதாக்கலாம்.*

*கெஸ்ட் மோடை பயன்படுத்துங்கள்.*

*உங்கள் போனை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் போது, கண்டிப்பாக 'கெஸ்ட் மோட்' ல் தான் தரவேண்டும். இந்த மோடில் உங்கள் போனில் உள்ள அனைத்தும் போனை பயன்படுத்துபவருக்கு மறைக்கப்படும். இதை பயன்படுத்த முதலில் நோட்டிவிக்கேசன் பாரை கீழே இழுத்து, உங்கள் ப்ரோபைலை கிளிக் செய்து 'Add Guest' ஐ தேர்வு செய்ய வேண்டும்.*

*உங்கள் குரோம் டேப்களை போனை தவிர மற்ற கருவிகளில் பயன்படுத்துங்கள்.*

*இதை பயன்படுத்த உங்கள் அனைத்து கருவிகளிலும் ஜிமெயில் ஐடி மூலம் உள்நுழைய வேண்டும். பின்னர் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யும் போது திறக்கும் பட்டியலில் 'ரிசன்ட் டேப்ஸ்'ஐ தேர்வு செய்யவும். இதன் மூலம் வேறு கருவிகளில் சமீபத்தில் பயன்படுத்திய டேப்களை கூட திறக்க முடியும்.*

*இரவில் கலர் இன்வெர்சன் வசதியை பயன்படுத்துங்கள்.*

*இரவு நேரங்களில் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது கண்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என நினைத்தால், Settings ல் ' Colour inversion' என்ற வசதியை இயக்குங்கள்.*

சனி, 4 ஜூலை, 2020

*05.07.2020, 12.07.2020, 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய 4 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்துதல் சார்பான நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்தி வெளியீடு.நாள்:04.07.2020*

*05.07.2020, 12.07.2020, 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய 4 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்துதல் சார்பான நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்தி வெளியீடு.நாள்:04.07.2020*

*🌐ஜூலை 4, வரலாற்றில் இன்று:மேரி கியூரி நினைவு தினம் இன்று.*

ஜூலை 4, வரலாற்றில் இன்று.

மேரி கியூரி நினைவு தினம் இன்று

உலகின் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி.
(இரண்டு வெல்வேறு துறையில் நோபல் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது )
இவர் தனது கணவருடன் சேர்ந்து கண்டு பிடித்த ஒரு தனிமம் யூரேனியத்தை விட 300 மடங்கு கதிர் வீச்சு கொண்டது.
அதற்கு தனது  நாட்டின் நினைவாக பொலேனியம் என்ற பெயர் வைத்தார்.
இவர் கதிர் வீச்சு பொருட்களுடன் ஆய்வு செய்யும் போது கதிர் வீச்சு தன்னை ஊடுறுவது அறிந்தே இருந்தார். ஆனால் பின்னாளில் உலகுக்கே பயன்படப் போகும் கண்டு பிடிப்பு என்பதால் தன்னை பற்றி கண்டு கொள்ள வில்லை. அந்த கதிர் வீச்சு தாக்கத்தால் தான் இறந்தும் போனார்.
ஆனால் அவர் கண்டு பிடித்த ரேடியம் பல லட்ச கணக்கான மக்களில் புற்றுநோயை குணப்படுத்தி பல உயிரை காப்பாற்றியது.
போரில் காயம் பட்டவர்கள் புண்ணை ஆற்றியது.

அறிவியலை காசாக்கி கார்ப்பரேட்டுக்கு நல்ல ரேட்டுக்கு விற்கும் விஞ்ஞானி அல்ல மேரி கியூரி.

தனது அற்புத கண்டுபிடிப்புக்கு கடைசிவரை அவர் உரிமத்தை பெறவே இல்லை  (ஆனால் இவர் கண்டுபிடிப்பை வைத்து பலர் கோடீஸ்வரர் ஆனது வேறு விஷயம் )

அறிவியலை உயிர் போல நேசித்து அறிவியலையே வாழ்க்கை ஆக்கி கொண்டு அறிவியலை மனித குல நன்மைக்கு பயன்படுத்திய மிக சொற்ப விஞ்ஞானிகளில் ஒருவர் தான் மதிப்பிற்குரிய மேரி கியூரி அம்மையார்
இன்று அவர் நினைவு தினம்.
அவர் நினைவைப் போற்றுவோம்.

*🌐ஜூலை 4, வரலாற்றில் இன்று:சர்வேயர் மற்றும் புவியியல் வல்லுநர் சர்.ஜார்ஜ் எவரெஸ்ட் பிறந்த தினம் இன்று!*

ஜூலை 4, வரலாற்றில் இன்று.

சர்வேயர் மற்றும் புவியியல் வல்லுநர் சர்.ஜார்ஜ் எவரெஸ்ட் பிறந்த தினம் இன்று!

ஒரு நான்கு அடி நிலம் அளப்பதற்கே எவ்வளவு அக்கப்போர்களை பார்க்கிறோம் நாம்.

 இந்திய துணைக்கண்டத்தை சர்வே செய்வது எப்படிப்பட்ட பணியாக இருந்திருக்கும்?
ரென்னேல் எனும் அதிகாரி துல்லியமில்லாத ஒரு வரைபடத்தை உருவாக்கி தந்திருந்தார்; அதை வைத்தே பலகாலம் நகர்த்தினார்கள் ஆங்கிலேயர்கள். ஒழுங்காக நிலஅளவை செய்ய வேண்டும் என்று மைசூர் போருக்கு பின்னர் உணர்ந்தார்கள் அவர்கள். லாம்ப்டன் எனும் ஆங்கிலேய அதிகாரி சென்னை பரங்கிமலையில் அந்த நில அளவையியல் பணியை தொடங்கினார். அவரின் வாழ்க்கையே சுவாரசியமானது. ஆனால், நாம் பேசப்போவது அவருக்கு உதவ நியமிக்கப்பட்ட எவரெஸ்ட் பற்றி. லாம்ப்டன் பரங்கிமலையில் தொடங்கி விந்திய மலை வரை அளந்து முடித்திருந்தார்.

இங்கிலாந்தில் இருந்து லாம்ப்டனுக்கு உதவ வந்த எவரெஸ்ட் அவருக்கு பிறகு இந்தியாவை அளக்கும் பணியை தொடர நினைத்தால் நிலைமை படுமோசம். அந்த அளக்கும் கருவியான தியோடலைட் சேதமாகி இருந்தது. ஸ்க்ரூ கழன்று, இரும்பு சங்கிலி தேய்ந்து போய் பல் இளித்தது. இங்கிலாந்து வரைக்கும் போய் கருவியை மீண்டும் கொண்டுவந்தார் இவர். கூடவே கருவி பழுதுபட்டால் சரி செய்ய ஒரு ஆளையும் கூட்டிக்கொண்டு வந்தார்.

டைபாய்டு காய்ச்சல், மலேரியா என்று உடம்பை புரட்டிப்போட்டன வியாதிகள். மனம் தளராமல் இயங்கினார் எவரெஸ்ட். “இந்த தேசத்தை அளந்துவிட வேண்டும் என்கிற கனவு மட்டுமில்லை என்றால் இங்கே ஒரு கணம் கூட இருக்க மாட்டேன்!” என்று படுக்கையில் இருந்தபடியே முனகினார் அவர். இந்தியாவில் மக்கள் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்தார்கள். தியோடலைட் கருவிக்கு பொட்டு வைத்து டீ சாப்பிடப்போன நேரத்தில் கடவுளாக்கி இருந்தார்கள். கொள்ளைக்காரர்கள் புதையல் தேட உதவும் என்று நம்பி கருவியைக் கொண்டு போய் பார்த்துவிட்டு கடுப்பாகி அலுவலர்களின் கை கால்களை உடைத்துப்போட்டார்கள். ஜலீம் சிங் எனும் நிலச்சுவான்தார் பெண்கள் வீட்டுக்குள் குளிப்பதை பார்க்க இந்தக்கருவி உதவும் என்று நம்பி வாங்கிப்போய் பார்த்து அலுத்துப்போனான். உருவங்கள் தலைகீழாக தெரிந்ததில் இதில் மாய மந்திர சக்திகள் இருப்பதாக வேறு கிளப்பிவிட்டார்கள்.

இத்தனை இடர்பாடுகளுக்கு நடுவே எல்லையில்லாத ஆர்வம் செலுத்த அவர் இயங்கினார். குமரியில் துவங்கி முசூரி வரை அளவையை வெற்றிகரமாக நடத்தினார் அவர். கச்சிதமான வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு தவறு இருந்தாலும் திருப்பி வேலையை செய்ய வைத்தார். சிரோஞ் எனும் ஊரில் இருந்து அளக்கப்பட்ட அளவும், டெஹ்ராடூனில் அளந்த அளவும் ஒரு மீட்டர் அளவுக்கு மாறுபட்டது. மீண்டும் அளந்தார் இவர்; இரண்டு பகுதிகளுக்கும் அதிக தூரமில்லை நானூறு மைல்கள் தான். மொத்தமாக இந்தியாவில் இருந்த காலத்தில் இரண்டரை லட்சம் சதுர மைல்களை அளந்து சாதித்திருந்தார் எவரெஸ்ட்
தென் ஆப்பிரிக்காவில் படுத்துக்கொண்டு உடல் நலமின்மையால் அவதிப்பட்ட பொழுது அவர் எழுதியிருக்கும்குறிப்பு என்ன தெரியுமா?
“லாம்ப்டன் 18º 3′ 15, 24º 7′ 11, 20º 30’48′
என்று அளந்திருக்கும் வளைவில் இரண்டு பகுதிகளுக்கு இடையே தவறாக உள்ளது. மீண்டும் சோதித்து சரி செய்ய வேண்டும் !” அவருக்கு அடுத்து வந்த ஆண்ட்ரூ வாக் இவரின் எதிர்ப்பையும் மீறி உலகின் உயரமான சிகரத்துக்கு எவரெஸ்ட் என்று பெயர் வைத்தார். அதை எவரெஸ்ட் பார்த்ததே இல்லை. தான் அளந்து கண்டறிந்த பல்வேறு நிலப்பகுதிகளுக்கு அப்பகுதி மக்களின் மொழியிலேயே பெயர் வைக்கிற பண்பு அவரிடம் இருந்தது.