புதன், 15 ஜூலை, 2020

*📕📰 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு*

*📕📰 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு*

*🖥️ஜூலை 15, வரலாற்றில் இன்று:டுவிட்டர் சமூகவலைத்தளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த தினம் இன்று (2006).*

ஜூலை 15, வரலாற்றில் இன்று.

டுவிட்டர் சமூகவலைத்தளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த தினம் இன்று (2006).

*🌐ஜூலை 15, வரலாற்றில் இன்று:தனித்தமிழ் இயக்கம் தொடங்கி, தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றிய தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் பிறந்த தினம் இன்று.*

ஜூலை 15, வரலாற்றில் இன்று.

 தனித்தமிழ் இயக்கம் தொடங்கி, தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றிய தமிழ் அறிஞர் மறைமலை அடிகள்  பிறந்த தினம் இன்று.

நாகப்பட்டினம் அடுத்த காடம்பாடியில் (ஜூலை 15, 1876) பிறந்தார். நாகப்பட்டினம் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சிறந்த மாணவராக விளங்கினார். அறுவை சிகிச்சை நிபுணராக இருந்த தந்தையின் மறைவால், கல்வி தடைபட்டது. தாயின் வழிகாட்டுதலால் பல நூல்களைக் கற்றார்.

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர் நாராயணசாமி பிள்ளையிடம் இலக்கியங்களையும், சோமசுந்தர நாயக்கரிடம் சைவ சித்தாந்தமும் கற்றார். மாதந்தோறும் ரூ.50-க்கு புதிய நூல்கள் வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

வார இதழ்களில் ‘முருகவேள்’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதினார். 16 வயதில் இந்து மத அபிமான சங்கத்தைத் தோற்றுவித்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1905-ல் சைவ சித்தாந்த மகா சமாஜத்தை ஆரம்பித்தார். 1911-ல் துறவு மேற்கொண்டார்.

தமிழ்ப் பற்றால், ‘வேதாச்சலம்’ என்ற தனது பெயரை ‘மறைமலை’ என்று மாற்றிக்கொண்டார். சென்னை பல்லாவரத்தில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் தொடங்கி, அதன் பெயரை பொதுநிலைக் கழகம் என மாற்றினார்.

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், திருக்குறளாராய்ச்சி, தமிழர்மதம், வேதாந்த மதவிசாரம் என பல நூல்களைப் படைத்தார். இலக்கியம், மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு, புதினம், பாடல், நாடகம், தத்துவம், வரலாறு என பல பிரிவுகளில் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

இவரது பேச்சு பேச்சாளர்களை உருவாக்கியது; எழுத்து படைப்பாளிகளை ஈன்றது. ‘அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்’ என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க. புகழாரம் சூட்டியுள்ளார். 4 ஆயிரம் நூல்களுடன் தன் வீட்டிலேயே ஒரு நூலகம் அமைத்தார்.

தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக் கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். தமிழ், ஆங்கிலம், வடமொழியில் புலமை பெற்றவர். சைவ சித்தாந்த நெறிமுறைகளை வெளிநாட்டவரும் புரிந்துகொள்ள ‘மிஸ்டிக் மைனா’, ‘தி ஓரியன்டல் விஸ்டம்’ ஆகிய ஆங்கில இதழ்களை நடத்தினார். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தோன்றக் காரணமாக இருந்தவர்.

தனித்தமிழிலேயே பேச, எழுத வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்ட பிறகு, தான் ஏற்கெனவே எழுதி வெளியிட்ட நூல்களில் இருந்த பிறமொழிச் சொற்களுக்கு பதிலாக தமிழ்ச் சொற்களை மாற்றி புதிய பதிப்புகளை வெளியிட்டார். உரையாடலில், மேடைப்பேச்சில், எழுத்தில் தூய தமிழ் நடையைக் கடைபிடித்தார்.

கோயில்கள், பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு சம உரிமை வழங்க வேண்டும் என குரல் கொடுத்தார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்.

வடமொழியை எதிர்க்காமல் வடமொழிக் கலப்பை மட்டுமே எதிர்த்து, கடவுளை எதிர்க்காமல் மூடத்தனமான சடங்குகளை மட்டுமே எதிர்த்து நடுநிலை தவறாமல் வாழ்ந்த பண்பாளர். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட மறைமலை அடிகள் 74 வயதில் (1950) மறைந்தார்.

*✈️ஜூலை 15, வரலாற்றில் இன்று:போயிங் விமான நிறுவனம் தொடங்கப்பட்ட தினம் இன்று.*

ஜூலை 15, வரலாற்றில் இன்று.

போயிங் விமான நிறுவனம் தொடங்கப்பட்ட தினம் இன்று.

போயிங் நிறுவனம் ஜூலை 15, 1916-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் வில்லியம் எட்வர்ட் போயிங் என்பவரால் 'பசிபிக் ஏரோ புராடக்ட்ஸ் கோ' என்ற பெயரில் துவங்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையை சார்ந்த ஜார்ஜ் கோனார்ட் என்பவரின் தொழில்நுட்ப உதவியுடன் வளர்ந்த இந்நிறுவனத்தின் தொடக்ககால வானூர்திகள் கடல் வானூர்திகளே. 1917-ம் ஆண்டு மே மாதம் 'போயிங் வானூர்தி நிறுவனம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

யேல் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த வில்லியம் போயிங், மர தச்சு வேலையில் வல்லுனர் ஆனார்.

1927-ம் ஆண்டு போயிங் நிறுவனம் போயிங் வான் போக்குவரத்து கழகம் என்ற கிளை நிறுவனத்தை தொடங்கியது. பின் இக்கிளை பசிபிக் வான் போக்குவரத்து மற்றும் போயிங் வானூர்தி நிறுவனம் ஆகிய நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டது. இந்நிறுவனமே பின் யுனைடட் வானூர்தி நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

போயிங் நிறுவனத்தின் புகழ்பெற்ற பயணிகள் விமானமான 'போயிங் 247' 1933-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விமானம் நவின பயணிகள் வானூர்திகளின் முதல் வடிவாக பார்க்கப்படுகிறது. இரண்டு என்ஜீன பொருத்தப்பட்ட இவ்வானூர்தி அக்காலகட்டத்தில் வேகமான விமானமாகவும், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாகவும், ஒரு இயந்திரத்தில் பறக்கும் வல்லமை பெற்றதாகவும் விளங்கியது.

*🌷ஜூலை 15,* *வரலாற்றில் இன்று:கர்மவீரர் காமராஜர் பிறந்த தினம் இன்று.*

ஜூலை 15,
வரலாற்றில் இன்று.

கர்மவீரர் காமராஜர் பிறந்த தினம் இன்று.

காமராஜர் பிறந்த நாள். இதையொட்டி, விகடன் பொக்கிஷம் பகுதியில் இருந்து ஒரு பகிர்வு இது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் எழுதிய இக்கட்டுரை விகடனில் 11.09.1966 இதழில் வெளியானது.
---------------------------------------------------------------------

காந்தி வழியில் காமராஜ்!

காமராஜரிடம் பெருமதிப்புக் கொண்டவர், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன். விகடனில் காமராஜ் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். குறிப்பாக, காமராஜர் 1966-ல் முதன்முறையாக அந்நிய நாடுகளுக்குப் பயணம் செய்துவிட்டுத் திரும்பியபோது, அது பற்றி, 'சோஷலிச நாடுகளில் மக்கள் தலைவர்' என்னும் தலைப்பில் விகடனில் தொடர் கட்டுரை எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையின் முதல் அத்தியாயத்திலிருந்து ஒரு துளி இங்கே...

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தாறாம் ஆண்டின் சுதந்திர நாள், தமிழ்நாட்டின் வரலாற்றிலே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய திருநாள். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், அதுநாள் வரை கண்டிராத மக்கள் கூட்டத்தை அன்றுதான் கண்டது. சென்னை நகர வீதிகளுக்கு எண்ணிலடங்கா வாகனங்களைச் சுமக்கும் வாய்ப்பு, அன்றுதான் கிட்டியது. கண் ணுக்கெட்டிய தூரம் வரை சைக்கிள்களும், ஸ்கூட்டர்களும், கார் களும், குதிரைகளுமே காட்சி அளித்தன.

இத்தனையும் எதற்காக?

முதன்முறையாக அந்நிய நாடுகளுக்கு விஜயம் செய்துவிட்டுச் சென்னை திரும்பிய, இந்தியாவின் இணையில்லாத் தலைவர் காமராஜ் அவர்களை வரவேற்கத்தான்! சோஷலிச நாடுகளுக்குச் சென்று திரும்பிய மக்கள் தலைவர் காமராஜ் அவர்களுக்குச் சென்னை மாநில மக்கள் மகத்தான வரவேற்பளித்தார்கள். விண் அதிர 'வாழ்க கோஷம்' ஒலிக்க, வானிலிருந்து மலர் மாரி பொழிய, சென்னை நகர வீதிகளிலே பவனி வந்தார் பாரதத் தலைவர்.

தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்திலே நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசும் போது தலைவர் காமராஜ் சொன்னார்: "சோவியத் ரஷ்யாவுக்கும், கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, பல்கேரியா, யூகோஸ்லேவியா போன்ற நாடுகளுக்கும் நான் சென்று வந்தேன். அந்த நாடுகளுக்கெல்லாம் வேடிக்கை பார்க்க, ஊர் சுற்றிப் பார்க்க நான் போகவில்லை. அங்கெல்லாம் மக்கள் எப்படி வாழ்கிறார்கள், என்னென்ன வசதிகளை மக்கள் தேடிக்கொள்கிறார்கள், என்னென்ன வசதிகளை அரசாங்கம் தேடிக் கொடுத்துள்ளது என்று பார்க்கவே போனேன்."

ஆமாம்! காமராஜ் அவர்கள், ஏதோ பொழுதுபோக்குக்காகவோ, உல்லாசப் பிரயாணம் செய்யவேண்டும் என்றோ அந்நிய நாடுகளுக்குப் போகவில்லை. அந்நாடுகளைக் கண்டு, அந்நாட்டு மக்களிடம் பேசி, அதன் மூலம் நம் நாட்டிற்கும், நம் நாட்டு மக்களுக்கும் என்ன நன்மைகள் செய்ய முடியும் என்று அறியவே சென்றார்.

காமராஜ் அவர்களின் அந்நிய நாட்டு விஜயத்தில் எழுந்த முதல் பிரச்னை, அவருடைய உடைப் பிரச்னைதான். காமராஜ் அவர்கள் எந்த உடையில் செல்வது என்பதுதான் எல்லோருக்கும் பெரும் பிரச்னையாக இருந்தது.

"ரஷ்யாவில் குளிர் மிகவும் அதிகம். எனவே கோட்டும் பான்ட்டும் போட்டுக்கொண்டு தான் செல்லவேண்டும்."

"ஓவர் கோட் இல்லாமல் அங்கு போவதா? அது எப்படிச் சாத்தியம்?"

"கம்பளித் துணிகள் நிறைய எடுத்துக்கொள்ளவேண்டும்!"

இப்படி, நண்பர்கள் எல்லோ ரும் பலவித ஆலோசனைகள் தெரிவிக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால், இந்த உடை விஷயம் காமராஜ் அவர்களைப் பொறுத்த வரை ஒரு பிரச்னையாகவே இருக்கவில்லை. தாம் வழக்கமாக அணியும் அதே வேஷ்டி சட்டையுடன்தான் போவது என்று தீர்மானித்துவிட்டார். இது பலருக்குப் பெரிய அதிசயமாக இருந்தது.

ஆனால், என்னைப் பொறுத்தவரை இதில் அதிசயப்பட எதுவும் இல்லை. அவரை நன்கு அறிந்தவர்களுக்கு, இதில் வியப்புக்கு இடமில்லைதான்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர், தமிழக முதல் அமைச்சரானபோது பலர் அவரிடம் மாறுதல்களை எதிர்பார்த்தார்கள்.

'இனி, காமராஜ் சர்க்கார் மாளிகைக்குப் போய்விடுவார்; புதிய கார் வைத்துக்கொள்வார்; உடையில்கூட ஏதாவது மாறுதல் இருக்கும்' என்று அநேகர் நினைத்தார்கள். ஆனால், அவர் எதையும் மாற்றவில்லை. முதலமைச்சரான பிறகும், வழக்கமாகத் தாம் வசிக்கும் திருமலைப் பிள்ளை வீதியில் உள்ள வீட்டிலேயேதான் இருந்தார். அதற்கு முன்பு தாம் வைத்திருந்த அதே வண்டியைத்தான் உபயோகப்படுத்தினார். சட்டை மாறவில்லை; வேஷ்டி மாறவில்லை; துண்டும்கூட மாறவில்லை.

காமராஜ் அவர்கள் தமது தோற்றத்திலே எந்தவிதமான மாற்றத்தையும் விரும்பியதில்லை. அவர் விருப்பமெல்லாம், இந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதுதான்.

வழக்கமாகத் தாம் அணியும் ஆடையிலேயே வட்ட மேஜை மகாநாட்டிற்குக் காந்திஜி சென்றார். அதன் பின்னர், அந்த முறையில் அந்நிய நாட்டுக்குச் சென்ற தலைவர், காமராஜ் அவர்கள்தான்!

நாமக்கல் மாவட்ட பெண்களின் பாதுகாப்பிற்கு Lady's first சிறப்பு திட்டம் - Namakkal SP அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பெண்கள் எந்த நேரத்திலும் காவல்துறையின் உதவியை நாடும் வகையில் Ladies First என்ற திட்டத்தை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.சக்தி கணேசன், இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்தார்.

காவல்துறையின் உதவியை நாடும் பெண்கள் முற்றிலும் பெண்களுக்கான 9894454510 என்ற உதவி என்னை அழைத்து நாமக்கல் மாவட்டக் காவல்துறையின் உதவியை பெறலாம்.

#ladiesfirst #namakkalpolice #wzsocialmedia #tnpolice

செவ்வாய், 14 ஜூலை, 2020

*📘வரும் கல்வியாண்டிற்கான புதிய மாற்றங்களுடன் அறிக்கை தயார் - கல்வித்துறை ஆணையர் இன்று தாக்கல்.*

*📘வரும் கல்வியாண்டிற்கான புதிய மாற்றங்களுடன் அறிக்கை தயார் - கல்வித்துறை ஆணையர் இன்று தாக்கல்.*

*வரும் கல்வியாண்டில், செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, தமிழக அரசின் கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 18 பேர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டது.*

*அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பரிந்துரை அறிக்கையை, கல்வித்துறை ஆணையர், இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.*

*அந்த பரிந்துரையில் இடம்பெற்றுள்ள புதிய மாற்றங்கள் குறித்து ஒரு சில தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க சுழற்சிமுறை வகுப்புகள், பாடத்திட்டங்கள் குறைப்பு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை தவிர்ப்பது உள்ளிட்ட சில அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.*

*முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்த அடுத்த ஒரு சில தினங்களுக்குள் முழுமையான தகவல்கள் வெளியாகும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.*

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், கொரோனாவை இணைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று, மருத்துவ செலவுகளை பெற விண்ணப்பித்தால், அதற்கு அனுமதி அளிக்கவும். மருத்துவ செலவுகளை திரும்ப பெற, உரிய விண்ணப்பத்தில், விண்ணப்பிக்க அறிவுறுத்தவும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்



*கொரோனா சிகிச்சை செலவு: தமிழக அரசு உத்தரவு*


சென்னை: புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு, கொரோனா மருத்துவ செலவை திரும்ப வழங்கும்படி, கருவூல துறை கமிஷனர், அனைத்து கருவூல துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், கொரோனாவை இணைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று, மருத்துவ செலவுகளை பெற விண்ணப்பித்தால், அதற்கு அனுமதி அளிக்கவும். மருத்துவ செலவுகளை திரும்ப பெற, உரிய விண்ணப்பத்தில், விண்ணப்பிக்க அறிவுறுத்தவும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்

*சூலை 13 இல் நல்வாழ்த்து வழங்கிய எல்லோருக்கும் என் மனம் நிறைந்த நன்றி! -முருக செல்வராசன்.*

*சூலை 13 இல் நல்வாழ்த்து   வழங்கிய எல்லோருக்கும் என் மனம் நிறைந்த நன்றி! -முருக செல்வராசன்.*

*🌐ஜூலை 14, வரலாற்றில் இன்று:இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னர் என்று போற்றப்படுபவருமான எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவு தினம் இன்று(2015).*

ஜூலை 14, வரலாற்றில் இன்று.

 இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னர் என்று போற்றப்படுபவருமான எம்.எஸ்.விஸ்வநாதன்  நினைவு தினம் இன்று(2015).

கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில் (ஜூன் 24, 1928) பிறந்தவர். 4 வயதில் தந்தையை இழந்தவர், கண்ணனூரில் தாத்தா வீட்டில் வளர்ந்தார். பள்ளியில் படித்ததில்லை. தியேட்டர்களில் நொறுக்குத் தீனி விற்பார். நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார். 13 வயதில் மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.

நடிகர், பாடகராக வரவேண்டும் என்பது அவரது விருப்பம். அது நிறைவேறவில்லை. சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்தார். பிறகு, இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் குழுவில் இவர் ஆர்மோனியக் கலைஞராகவும், டி.கே.ராமமூர்த்தி வயலின் கலைஞராகவும் சேர்ந்தனர்.

சுப்புராமனின் திடீர் மறைவால் பாதியில் நின்ற அவரது படங்களை இவர்கள் இருவரும் முடித்துக் கொடுத்தனர். ‘தேவதாஸ்’, ‘சண்டிராணி’ படங்களின் இணை இசையமைப்பாளர்களாக அறிமுகமாயினர். ‘பணம்’ திரைப்படத்தில் ஆரம்பித்து, ‘ஆயிரத்தில் ஒருவன்’ வரை 700 திரைப்படங்களுக்கு இணைந்து இசையமைத்தனர்.

எம்எஸ்வி தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து 3 படங்களுக்கு இசையமைத்தார். ‘கண்ணகி’, ‘காதல் மன்னன்’, ‘காதலா காதலா’ உட்பட 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, திருலோகசந்தர், கே.பாலசந்தர் ஆகிய 4 இயக்குநர்களிடம் அதிகம் பணிபுரிந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் 1,200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும், ‘பாகப்பிரிவினை’ படத்தில் வரும் ‘தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு 3 இசைக் கருவிகளையும் பயன்படுத்தியவர். பியானோ, ஆர்மோனியம், கீ போர்டு அற்புதமாக வாசிப்பார். ‘நீராரும் கடலுடுத்த..’ என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தவர்.

கர்னாடக இசை மேதைகள் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களை தன் இசையில் பாடவைத்துள்ளார். இவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் போரின் முடிவில் 1965-ல் போர் முனைக்குத் தன் குழுவினரோடு சென்று ஆர்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, காயமுற்ற படை வீரர்களுக்காகப் பாடினார்.

ஒரே பிறந்த தேதியைக் கொண்ட தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் எம்எஸ்வி-யும், கவியரசு கண்ணதாசனும் சிறந்த நட்புக்கு உதாரணமாகத் திகழ்ந்தனர். இவர் இசையமைத்த ‘அத்தான் என்னத்தான்’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் சென்னையிலேயே தங்கிவிடுவேன்’ என்று லதா மங்கேஷ்கர் ஒருமுறை கூறினார்.

மெல்லிசை மன்னர், கலைமாமணி, திரை இசை சக்கரவர்த்தி உள்ளிட்ட பல பட்டங்களையும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர். அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்களை தன் இசையால் மகிழ்வித்துவருகிறார். இவரது இசைக்கு மயங்கும் ரசிகர்கள் இன்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உள்ளனர்.