ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

*🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்-பொதுச்செயலாளர்,பாவலர் திரு.க.மீ.,அய்யா அவர்களின் 90வது பிறந்த நாள் (ஆகச்ட் 15) அன்று அய்யாவிற்கு மாலை அணிவித்து இராசீபுரம் ஒன்றியத்தின் சார்பில் மலர் மரியாதை செய்யப்பட்ட நிகழ்வு.*

*🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்-பொதுச்செயலாளர்,பாவலர் திரு.க.மீ.,அய்யா அவர்களின் 90வது பிறந்த நாள் (ஆகச்ட் 15)  அன்று அய்யாவிற்கு மாலை அணிவித்து இராசீபுரம் ஒன்றியத்தின் சார்பில் மலர் மரியாதை செய்யப்பட்ட நிகழ்வு.*

மருத்துவ காப்பீட்டு அட்டை (NHIS) ~ Printout எடுக்கும் முறை...

மருத்துவ காப்பீட்டு அட்டை

Tamilnadu New Health Insurance
Scheme-2020

கீழ்க்கண்ட இணையதள முகவரியில்
ID Card NO: 
Date of Birth: dd/mm/yyyy என்ற
format- இல் பூர்த்தி செய்து Login செய்து E CARD ஐ Click செய்தால் அடையாள அட்டை தோன்றும்.

இதனை  pdf file ஆக save
செய்து pen drive இல் எடுத்து browsing centre இல் hard copy print எடுத்து Laminate செய்து
கொள்ளலாம்.

அல்லது நேரடியாக Browsing Centre-க்கு சென்று கீழ்க்கண்ட வலைதளத்தில் மூலமாக ID Card NO
& DOB விபரங்களைக் கொடுத்து
printout எடுத்து Laminate செய்து கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி (NHIS) திரு.R. பாக்யராஜ் அவர்களின்
அலைபேசி எண்:7373703116.

முத்தமிழ் அறிஞர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிறுவனர், முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்களின் 90வது பிறந்தநாள் வெண்ணந்தூர் ஒன்றியக் கிளையின் சார்பில் மரங்கன்றுகள்,முகக்கவசம் அளிக்கப்பட்டு நலத்திட்ட வழங்கிய நிகழ்வு.

முத்தமிழ் அறிஞர்,  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிறுவனர், முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பாவலர் 
க.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்களின் 90வது பிறந்தநாள் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் பொன்பரப்பிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் இன்று (15-08-20 ) காலை  10:30 மணி அளவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஐயா அவர்களின் பிறந்த நாள் விழாவினை நலத்திட்ட உதவிகளாக செய்யவேண்டும் என்கிற மாநில அமைப்பின் முடிவினை ஏற்று நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றிய கிளையின் சார்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் வெண்ணந்தூர் ஒன்றிய கிளையின் சார்பாக பயன் தரும் கருவேப்பிலை , கொய்யா , எலுமிச்சை , பெரு நெல்லி போன்ற பழமரக்கன்றுகள் மற்றும்  முக கவசம் உறை ஆகியவைகள்,நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டது.

அது சமயம்  வெண்ணந்தூர் ஒன்றிய, மன்றத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள்,    ஊராட்சி மன்ற தலைவர்  உள்ளிட்ட  ஊர் பிரமுகர்கள் பங்கேற்று  விழாவை இனிதே சிறப்பித்தார்கள்.

இவ்விழாவில் பாவலர் ஐயா அவர்கள் ஆசிரியர்களுக்கு செய்த தொண்டினையும், அளப்பரிய பணியையும் பற்றி நினைவு கூறப்பட்டு விழா இனிதே  நிறைவுற்றது.


இங்ஙனம் 
இர.ஜெகந்நாதன் வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர்.

🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர்,தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள்(ஆகச்ட்டு15 ) சிவபாக்கியம் குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் எலச்சி பாளையம் ஒன்றியக் கிளையின் சார்பில் நலத் திட்டங்கள்வழங்கும் நிகழ்வு...

🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர்,தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள்(ஆகச்ட்டு15 ) சிவபாக்கியம் குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் எலச்சி பாளையம் ஒன்றியக் கிளையின் சார்பில் நலத் திட்டங்கள்வழங்கும் நிகழ்வு...

🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச் செயலாளர்,தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர், திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள்(ஆகச்ட்டு15 )அன்று மல்லசமுத்திரம் ஒன்றியக் கிளையின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வுகள்.

*🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர்,தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர், திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள்(ஆகச்ட்டு15 )
அன்று மல்லசமுத்திரம்  ஒன்றியக் கிளையின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும்  நிகழ்வுகள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15 )அன்று திருச்செங்கோடு ஒன்றியக் கிளையின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வுகள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் 
மன்றம், திருச்செங்கோடு ஒன்றியம் (கிளை), நாமக்கல்.*    பாவலர்.திரு.க.மீ., அய்யா அவர்களுக்கு புகழ்வணக்கம்! 🙏.
*************************
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், 
தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,
கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15 )அன்று நலத்திட்டங்கள் வழங்கும்  நிகழ்வுகள் கொண்டதாக  அமைத்திடுமாறு மாநில,மாவட்ட  அமைப் புகள் முடிவாற்றியது.
இம்முடிவுகளுக்கு ஏற்ப திருச்செங்கோடு ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் ஏலிம் மனவளர்ச்சி குன்றியோர் இல்லம், ஒடுவம்பாளையம் திருச்செங்கோட்டில் மதிய உணவு மற்றும் முக கவசமும் கொடுக்கப்பட்டது.           இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் திரு. பிரபு,              மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. சதீஷ்குமார், ஒன்றிய தலைவர் திரு. தாமரைச்செல்வன்,   ஒன்றிய பொருளாளர் திரு. சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.           *சி.கார்த்திக், ஒன்றிய செயலாளர், திருச்செங்கோடு ஒன்றியம், நாமக்கல்*

🌷பாவலர் ஐயா அவர்களின் 90 ஆவது பிறந்தநாள்-பாவலர் ஐயா அவர்களின் திருவுருவப் படத்திற்கு பள்ளிபாளையம் ஒன்றியக்கிளையின் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்வு.*👇👇👇👇

🌷பாவலர் ஐயா அவர்களின் 90 ஆவது பிறந்தநாள்-பாவலர் ஐயா அவர்களின் திருவுருவப் படத்திற்கு பள்ளிபாளையம் ஒன்றியக்கிளையின் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்வு.*
👇👇👇👇

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் -பொதுச்செயலாளர் திரு.க. மீனாட்சிசுந்தரம் Ex.MLC, அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
பரமத்தி  ஒன்றியம் (கிளை)
நாமக்கல் மாவட்டம்.


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் -
பொதுச்செயலாளர் 
திரு.க. மீனாட்சிசுந்தரம் Ex.MLC,  அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பரமத்தி  ஒன்றிய அமைப்பின் சார்பில் பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு  இன்று (15.08.2020) முற்பகல் 10.45 மணியளவில் ஒன்றியத் தலைவர் இயக்கக் கொடியினை ஏற்றி வைத்து விழாவிற்கு தலைமை வகித்தார்.ஒன்றியச் செயலாளர் திரு.க.சேகர் வரவேற்புரையாற்றினார்.தொடர்ந்து பாவலர் அய்யாவின் திருவுருவப்படத்திற்கு ஒன்றிய/மாவட்ட/மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் பங்கேற்ற அனைவரும் மரியாதை செலுத்தினார்கள்.90 பேருக்கு முகக்கவசம் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 15 மாதங்களாக சம்பளம் இல்லாமல் பணியாற்றி வரும் பள்ளிகளின் தூய்மைப்பணியாளர் உள்ளிட்ட 30 பேருக்கு நலத்திட்டமாக 
தூய்மை பணியாளர்களை கௌரவப்படுப்படுத்தும் வகையில் உணவுப்பைகளை(அரிசி,பருப்பு,புளி,முகக்கவசம்,கபசுர சூரணம்) *பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எச்.மூர்த்தி* அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.12 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கும் துப்புரவு பணியாளர் ஊதியம் பெற்றுத்தர நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பேசி ஆவன செய்வதாக பரமத்தி ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்களிடமும்,நலத்திட்டம் பெற்ற ஊராட்சி ஒன்றிய சுகாதாரப் பணியாளர்களிடம் உறுதியளித்தார். *மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர்* அவர்கள் இயக்கவுரையாற்றினார். *மாநிலச் செயலாளர் திரு.முருக செல்வராசன்* அவர்கள் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு மரியாதை செய்து இயக்கப் பேருரையாற்றினார்.இவ்விழாவில் திமுக பேரூர் கழகச் செயலாளர் திரு.ரமேஸ் பாபு அவர்கள்,வார்டுச் செயலாளர் திரு.நாச்சிமுத்து,திரு.கணேசன்,திரு.காமராஜ், திரு.M.பாலுசாமிஉள்ளிட்ட திமுக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.ப.சதீசு,மாவட்ட தணிக்கைக் குழு உறுப்பினர் திரு.தண்டபாணி ,கபிலர்மலை ஒன்றியத் தலைவர் திரு.ந.மணிவண்ணன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.ரவிக்குமார்,கபிலர்மலை ஒன்றிய துணைச் செயலாளர் திரு.மணிகண்டன்,பரமத்தி ஒன்றியத்தினைச் சேர்ந்த மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்,ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர், இலக்கிய அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்,ஒன்றிய துணைத் தலைவர்கள்,துணைச் செயலாளர்கள்,மற்றும் உறுப்பினர்கள் நலத்திட்ட பயனாளிகள் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

நிறைவாக ஒன்றியப் பொருளாளர் திருமதி.கு.பத்மாவதி நன்றியுரையாற்றினார்.


க.சேகர்.
ஒன்றியச் செயலாளர்.

*🌟தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பதவி உயர்வு -பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்தல் - கூடுதல் விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!*

*🌟தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பதவி உயர்வு -பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்தல் - கூடுதல் விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!*

*🌟1,6,9 ஆம் வகுப்புகளுக்கு புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறுதல் சார்ந்த கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை.*

*🌟1,6,9 ஆம் வகுப்புகளுக்கு புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறுதல் சார்ந்த கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை.*