ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15 )அன்று திருச்செங்கோடு ஒன்றியக் கிளையின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வுகள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் 
மன்றம், திருச்செங்கோடு ஒன்றியம் (கிளை), நாமக்கல்.*    பாவலர்.திரு.க.மீ., அய்யா அவர்களுக்கு புகழ்வணக்கம்! 🙏.
*************************
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், 
தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,
கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15 )அன்று நலத்திட்டங்கள் வழங்கும்  நிகழ்வுகள் கொண்டதாக  அமைத்திடுமாறு மாநில,மாவட்ட  அமைப் புகள் முடிவாற்றியது.
இம்முடிவுகளுக்கு ஏற்ப திருச்செங்கோடு ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் ஏலிம் மனவளர்ச்சி குன்றியோர் இல்லம், ஒடுவம்பாளையம் திருச்செங்கோட்டில் மதிய உணவு மற்றும் முக கவசமும் கொடுக்கப்பட்டது.           இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் திரு. பிரபு,              மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. சதீஷ்குமார், ஒன்றிய தலைவர் திரு. தாமரைச்செல்வன்,   ஒன்றிய பொருளாளர் திரு. சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.           *சி.கார்த்திக், ஒன்றிய செயலாளர், திருச்செங்கோடு ஒன்றியம், நாமக்கல்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக