ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

முத்தமிழ் அறிஞர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிறுவனர், முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்களின் 90வது பிறந்தநாள் வெண்ணந்தூர் ஒன்றியக் கிளையின் சார்பில் மரங்கன்றுகள்,முகக்கவசம் அளிக்கப்பட்டு நலத்திட்ட வழங்கிய நிகழ்வு.

முத்தமிழ் அறிஞர்,  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிறுவனர், முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பாவலர் 
க.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்களின் 90வது பிறந்தநாள் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் பொன்பரப்பிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் இன்று (15-08-20 ) காலை  10:30 மணி அளவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஐயா அவர்களின் பிறந்த நாள் விழாவினை நலத்திட்ட உதவிகளாக செய்யவேண்டும் என்கிற மாநில அமைப்பின் முடிவினை ஏற்று நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றிய கிளையின் சார்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் வெண்ணந்தூர் ஒன்றிய கிளையின் சார்பாக பயன் தரும் கருவேப்பிலை , கொய்யா , எலுமிச்சை , பெரு நெல்லி போன்ற பழமரக்கன்றுகள் மற்றும்  முக கவசம் உறை ஆகியவைகள்,நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டது.

அது சமயம்  வெண்ணந்தூர் ஒன்றிய, மன்றத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள்,    ஊராட்சி மன்ற தலைவர்  உள்ளிட்ட  ஊர் பிரமுகர்கள் பங்கேற்று  விழாவை இனிதே சிறப்பித்தார்கள்.

இவ்விழாவில் பாவலர் ஐயா அவர்கள் ஆசிரியர்களுக்கு செய்த தொண்டினையும், அளப்பரிய பணியையும் பற்றி நினைவு கூறப்பட்டு விழா இனிதே  நிறைவுற்றது.


இங்ஙனம் 
இர.ஜெகந்நாதன் வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக