செவ்வாய், 31 அக்டோபர், 2017

சீர்திருத்த திருநாள் - அக்டோபர் 31, 1517(இதே நாளில் முன்பு)

உலக கிறிஸ்தவத்தை உலுக்கிய மிக முக்கிய நாள். மார்டின் லூத்தர் என்ற புரட்சி மாமேதை வெகுண்டு எழுந்த நாள் புரட்சி திருநாள் .



மார்ட்டின் லூதர் (Martin Luther, நவம்பர் 10, 1483 – பெப்ரவரி 18, 1546) ஒரு ஜெர்மனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்த சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேல்நாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது.

பழமைகளிலும், தவறுகளில் மூழ்கி கிடந்த கிறிஸ்தவ சபைகளில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மார்ட்டின் லூதர்.ஆனால் இப்படி ஒரு பிரிவையோ பிளவையோ ஏற்படுத்த அவர்கு அவா துளியும் இருக்கவில்லை.ஆனாலும் அவருக்கு வேறு வழியும் தெரியவில்லைலூதருடைய இறையியல், மதம்சார்ந்த அதிகாரம் பைபிள் மட்டுமே என்னும் அடிப்படையில், பாப்பாண்டவரின் அதிகாரத்துக்கு சவால் விடுத்தார்.திருச்சபையின் இரண்டாவது பெரிய பிரிவினை சமய சீர்த்திருத்தவாதத்தால் ஏற்பட்டது.

இப்படிபட்ட மாவீரன் எடுத்த அந்த புரட்சி சீர்திருத்தம் 95 திட்ட விளக்கங்களை எழதி ஜெர்மனி, விட்டன்பர்க் நகர காச்த்லே தேவாலய கதவுகளில் அடித்து கதோலிக்க திருசபையிலிருந்து வெளியேறினார். இதை படித்து அக்டோபர் 31, 1517 ல் உருவாகியதுதான் இம்மாபெரும் ப்ரோடேசன்ட் இயக்கம்.