புதன், 17 ஜனவரி, 2018

படைப்பாற்றல் கல்வி முறை~ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி.…


தமிழகத்தில், ஐந்தாம் வகுப்புக்கு, எளிய படைப்பாற்றல் கல்வி முறை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, படைப்பாற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதில், பாடங்கள் வரைபடம் வாயிலாக, கற்பிக்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், படைப்பாற்றல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, ஒரு நாள் பயிற்சி வழங்க, அனைவருக்கும் கல்வித்திட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, ஒரே கட்டமாகவும், ஆறு முதல் எட்டு வரையிலான ஆசிரியர்களுக்கு, இரு கட்டங்களாகவும் பயிற்சி நடத்தப்படுகிறது. 

இதை, ஜன., 25க்குள் நடத்தி முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய
உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக