ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

தமிழ்நாட்டின் அனைத்தாசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு எதிர்வரும் 04.10.18 (வியாழன்) அன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம்...

அன்பானவர்களே!
வணக்கம்.
தமிழ்நாட்டின் அனைத்தாசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின்  கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி  ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு எதிர்வரும் 04.10.18(வியாழன்) அன்று  ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் மேற்கொள்வதென முடிவாற்றி தற்செயல் விடுப்பு போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு  வேண்டுகோள்
விடுத்துள்ளது.

ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளையும்,தொடர்போராட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசின் மேலான கவனத்திற்கு  முறையாக ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு   கொண்டுச்சென்றுள்ளது.
இதையொட்டி 
தமிழக அரசு ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திடமுன்வரும் எனும் எதிர்பார்ப்பு எழுந்தது. 
ஆனால் தமிழக அரசோ பாராமுகம் காட்டியதோடு நில்லாமல் ,
முறையான விடுப்பை  அனுமதிக்கப்படாத விடுப்பென்று பெயர்சூட்டி
 "நோ ஒர்க்,நோ பே " எனும் மிரட்டல் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

கடந்தகாலப்
போராட்டங்களில்  தமிழ்நாட்டின் சிறைகளை 
எல்லாம் நிரப்பியும்,
பணிநீக்கம்,
தற்காலிகபணிநீக்கம்,
ஒழுங்கு நடவடிக்கைகள், பழிவாங்கும் நடவடிக்கைகள் ,
தொலைதூர 
இடமாறுதல்கள்  போன்ற அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் போன்றனவற்றை  எல்லாம் துச்சமென தூக்கி எறிந்தும்,
உயிர்தியாகம் உள்ளிட்ட சர்வபலி தியாகங்களை ஈந்தும்,
எசுமா மற்றும் டெசுமா போன்ற கறுப்புச்சட்டங்களை நேருக்குநேர் சந்தித்து  முறியடித்தும் ,
குதிரைப்படையின் கொக்கரிப்புகளை,
துப்பாக்கிக்குண்டுகளின் சீற்றங்களை  நேருக்கு நேர் சந்தித்து வீழ்த்தியும்
மத்திய ஊதியம்,
பயன்தரும் ஓய்வூதியம்,
பணிசார்ந்த உரிமைகள் போன்றவற்றை பெற்றும்,காத்தும் இன்று வரை அனுபவித்து வரும் உன்னத நிலையை  அடைந்துள்ளோம் என்பதை நினைவுகூர்ந்தும்,
மனதில் நிலைநிறுத்தியும் ஒரு கம்பீரமான போராட்டவரலாற்றின் சொந்தக்காரர்கள் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு
அலுவலர்கள் என்ற பெருமிதத்தோடு அக்டோபர் 4இல் களமாடுங்கள்
என்றே வேண்டுகிறேன்.

 மத்திய ஊதியத்தை பறித்துக்கொண்டு,
பயன்தரு ஓய்வூதியமுறையை பறித்துக்கொண்டு,
பணிசார் விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு 
பல இலட்சரூபாய்களை ஆண்டு ஒன்றுக்கு  வஞ்சித்துவிட்டு 
ஒருநாள் ஊதியம்பிடிப்பேன்
என்று அறிவித்தால், அடங்கிஒடுங்கிப்
போவேனா!?என்று மனதுக்குள் 
வினா எழுப்பி அடங்கிடமாட்டேன்...என்றுரைத்து...
சூளுரை ஏற்று ... உறக்கம் கலைந்த சிங்கங்களைப்போல 
எழுக!
பெரும்படை நடத்துக!
என்றே வேண்டுகிறேன்.

தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் ,ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்,ஆசிரியர்இனக்காவலர்,
பாவலர் க.மீ .,அய்யா அவர்களின் அறைகூவல் ஏற்று ஆசிரியர் மன்றத்தின்   நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட,
ஒன்றியப்
பொறுப்பாளர்கள் ஒன்றிய அளவில் கூட்டாக ஆசிரியப் பெருமக்களை இல்லந்தோறும் சென்று சந்தித்து பேசுங்கள்!
ஒட்டுமொத்த
தற்செயல்விடுப்புபோராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்கச்செய்யுங்கள்!
சமூக ஊடகங்களை
பயன்படுத்தி பரப்புரை செய்து போராட்டத்திற்கு வலிமையைத்தேடித்தாருங்கள்!
ஜாக்டோ-ஜியோவின் தொடர்போராட்டங்கள் முழுவெற்றிபெற்றிட  முன்னிலையில் செயல்படுங்கள்!
நாம் வெல்வோம் எனும் நம்பிக்கையோடு போராட்டக்களத்தில் செயலாற்றுங்கள்!
நாளை நமதே!!!
நன்றி.
~முருகசெல்வராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக