வியாழன், 8 நவம்பர், 2018

ஆசிரியர்கள் & அரசு துறை அலுவலர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம் கலந்துகொள்ள நாமக்கல் ஆட்சித்தலைவர் அழைப்பு


நவ. 15-இல் நாமக்கல்லில் ஆட்சிமொழி பயிலரங்கம்

அரசு
அலுவலர்களுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் வரும் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நாமக்கல்லில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழி திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற வழிகாட்டும் வகையில், மாவட்டந்தோறும் உள்ள அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், வரும் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் அரசு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இப்பயிலரங்கு மற்றும் கருத்தரங்கில் ஆட்சிமொழி செயலாக்கம் குறித்து தமிழ் வளர்ச்சித் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்று பயிற்சி அளிக்கவுள்ளனர். இதில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்று பயனடைய வேண்டும்.