செவ்வாய், 15 ஜனவரி, 2019

21.1.2019 தமிழகம் முழுவதும் 2381அங்கன்வாடி மையங்களுக்கு,இடைநிலை ஆசிரியர்களை மாற்றுப் பணியில் பணி நியமனம் செய்யயுள்ள ஆணையினை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அங்கம் வகிக்கும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் ஒருமித்த முடிவு செய்து அறித்துள்ளது...


அங்கன் வாடியில் இடைநிலை ஆசிரியர்களை மாறுதல் செல்வதை கண்டித்து, வரும் 18/I/19 அன்று ஜாக்டோ ஜியோ  ஆர்ப்பாட்டம் நடத்திடவுள்ளது.

மாறுதல் ஆணைகளை ஆசிரியர்கள் பெற வேண்டாம் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்  கேட்டுக் கொள்கிறது.

பொங்கல் விடுமுறைக்கு பின் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் நீதிமன்றத்தை நாட இருக்கிறது,  அதற்கான நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

நீதிமன்றத்தில் உடனே தடையாணை பெறுவதற்கு விரைந்து செயல்படுதல் உள்ளிட்ட அனைத்து முயற்சியும்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் ஈடுபட்டுக் கொண்டு வருகிறது.

மாற்று இயக்கத்தினர், சில மன்ற உறுப்பினர்களை அணுகி நீதிமன்ற செல்ல தங்களுடன் வருமாறு அழைப்பு விடுத்தால், அதனை மன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கவும்,

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில அமைப்பு மூலம் நீதிமன்றத்தை 
நாட உள்ளது என்பதை ஆசிரிய பெருமக்களுக்கு ம் மன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்  
தெரிவித்துக் கொள்கிறது.

பாவலர்
க.மீனாட்சிசுந்தம் Ex.mlc,
பொது செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக