புதன், 18 செப்டம்பர், 2019

பாவேந்தர் பாரதிதாசன் அழைப்பு

பாவேந்தரின் அழைப்பு
******************
வீட்டைப் பூட்டிக் குடும்பத் தோடு
நாட்டை மீட்க இன்றே ஓடு!
காட்டியதாம் கைவரிசை தில்லி! - அதன்
சீட்டுக் கிழிந்து போனதென்று சொல்லி!

ஆட்டுவாராம்! அடக்குவாராம்!
அழிப்பாராம்! ஒழிப்பாராம்!
ஓட்டுவாராம்; நம்மைஅவ் வடக்கர் - மேலும்
தீட்டுவாராம் கத்தியைஅவ் விடக்கர்!

வெற்றி பெற்றால்
மீள்வதென்று
வீழ்ச்சி யுற்றால்
சாவதென்று
நற்றமிழன்னைக்குறுதி கூறு - அட
நாம்தமிழர்! நாம்தமிழர்! ஏறு!

செந்தமிழைக் கொல்லச் சொல்லி,
சீரகத்தை அழிக்கச் சொல்லி,
இந்தியினைக் கற்கச் சொல்லிச் சொல்லி - ஒரு
மந்தியாட்டம் ஆடியதாம் தில்லி!

தாய்க்கரிசி இல்லை என்பார்;
தமிழர்க்கெல்லாம் தொல்லை என்பார்;
வாய்க்கரிசி போட்டுக்கொண்டு
முந்து - நல்ல
போர்பரிசு நீபெற நினைந்து!

- பாவேந்தர்பாரதிதாசன்.