வியாழன், 31 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 31, வரலாற்றில் இன்று.*
---------------------------------------------------
*முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் வெளியான தினம் இன்று(1931).*


*இது தமிழின் முதல் பேசும்படம் என்று சொல்லப்பட்டாலும் தமிழில் வெளியான தனித்தமிழ் பேசும் படமல்ல; தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பேசிய பாடிய படமும்கூட.*


      *இப்படத்தை இம்பீரியல் மூவிடோன் நிறுவனம் சார்பாக தயாரித்தவர் இந்தியாவின் முதல் பேசும்படமான 'ஆலம் ஆரா'வைத் தயாரித்திருந்த பூனாவைச் சேர்ந்த அர்தேஷிர் இரானி என்பவராவார்.*
     *'காளிதாஸ்' திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் அன்றைக்கு தென்னிந்திய நாடக மேடைகளில் புகழ் பெற்றிருந்த டி.பி.ராஜலட்சுமி ஆவார். கதையின் நாயகனாக நடித்திருந்தவர் வெங்கடேசன். இப்படத்தில் துணை நடிகர்களுள் ஒருவராக நடித்திருந்தவர் பின்னாளில் திரையுலக ஜாம்பவனாகக் கருதப்பட்ட L.V.பிரசாத் அவர்கள்.*
       *1931 அக்டோபர் 31 அன்று சென்னை கினிமா செண்ட்ரல் ( பின்னாளில் ஸ்ரீமுருகன்) திரையரங்கில் வெளியான 'காளிதாஸ்' திரைப்படம், எட்டாயிரம் ரூபாய் செலவில், எட்டு நாளில் தயாரிக்கப்பட்டு, 75000 ரூபாய் வசூலித்ததாக தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் பிரபல எழுத்தாளர் அறந்தை நாராயணன்.*


       *H.M.ரெட்டி இயக்கியிருந்த இவ்வெற்றிப் படத்தின் மூலம் தமிழ்த்திரையின் முதல் நாயகியாக அறிமுகமான T.P.ராஜலெட்சுமி அவர்கள் 'சினிமாராணி', 'டாக்கி ராணி' என்கிற பட்டங்களையெல்லாம் பின்னாளில் பெற்றார் என்பது வரலாறு.*