சனி, 23 நவம்பர், 2019

நவம்பர் 23,
வரலாற்றில் இன்று.


அரியலூர் ரயில் விபத்து நடந்த தினம் இன்று(1956).



சென்னையிலிருந்து இரவு 9.50 க்கு புறப்பட்ட தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்
விடியற்காலை (tiruchy) அரியலூரை நெருங்கியபோது மழையினால் சேதமடைந்திருந்த மருதையாறு பாலம் மீது செல்லுகையில் நிகழ்ந்தது இந்த விபத்து.

இவ்விபத்தில் 142 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.

110 பேர் பலத்த காயமடைந்தனர்.

பலரது உடல்கள் கிடைக்கவே இல்லை.

கடைசி வரை அடையாளம் காணாத 60 உடல்கள்
ஒரே குழியில் புதைக்கப்பட்டன.

அப்போது ரயில்வே துணை அமைச்சராக இருந்தவர்
தமிழகத்தை சேர்ந்த ஒ.வி.அழகேசன்.


இவ்விபத்துக்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே கேபினட் அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.