ஞாயிறு, 24 நவம்பர், 2019

நவம்பர் 24,
வரலாற்றில் இன்று.

 நாவலாசியரும், பெண்ணிய
வாதியுமான அருந்ததி ராய் பிறந்த தினம் இன்று (1961).

அருந்ததி ராய்  மேகாலாயாவில் பிறந்தவர் . கேரளத்தில் தன் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு டெல்லியில் கட்டிடக் கலை பயின்றார் .

 திரைக் கதை மற்றும் சிறந்த நாவல்களை எழுதிய இவர் , பெண்ணடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார் .

அரசியல் விமர்சனக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வரும் நிலையில் , அடுத்து நாவல் எழுதும் நோக்கில் உள்ளார் .

அருந்ததி ராய் முதன் முதலில் எழுதிய "த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்" என்ற நாவலுக்கு இந்தியாவின் முதல் ‘புக்கர்’ பரிசை பெற்றுள்ளார் . ஆனால் , தனக்கு வழங்கிய சாகித்ய அகாதமி பரிசை மறுத்து விட்டார்.