செவ்வாய், 3 டிசம்பர், 2019

டிசம்பர் 3,
வரலாற்றில் இன்று.



சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் இன்று.

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்
திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினம் என டிசம்பர் மூன்றை அறிவித்தது.

1981ஆம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது.


 1992ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது.

 அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினம் என கொண்டாடப்
படுகின்றது.