செவ்வாய், 3 டிசம்பர், 2019

டிசம்பர் 3,
வரலாற்றில் இன்று.


போபால் விஷ வாயு சம்பவம் நிகழ்ந்த தினம் இன்று (1984).


ஆபத்தின் உருவம், திசை, தன்மை எதுவும் தெரியாமல் நள்ளிரவில் என்ன செய்வது? எங்கு செல்வது? என தெரியாமல் திண்டாடி பல்லாயிரம் உயிர்கள் இறந்த கொடுமை.


டிசம்பர் 2, 1984.

 நள்ளிரவு. கடுங்குளிர்.
நாய்கள் ஓலமிடுகின்றன. ஊர் பாதி
தூக்கத்தில் எழுகிறது.

 மூச்சுத் திணறுகிறது.


காற்றுக்காகக் கதவைத்
திறந்து வெளியே வருபவர்கள்
காற்றில் எரிச்சலை உணர்கிறார்கள்.


இன்னதென்று யோசிக்கும் முன்
‘யூனியன் கார்பைடு’
தொழிற்சாலையிலிருந்து அபாயச்
சங்கு ஒலிக்கிறது.

 ஓடுகிறார்கள்.
சரிகிறார்கள். சாகிறார்கள்.


விடிந்தபோது வீதியெங்கும் மனிதப்
பிணங்களின் எண்ணிக்கைக்கு இணையாக
கால்நடைகள், பறவைகளின் உடல்கள்.


அன்று தொடங்கி போபால்
மக்கள் போராடுகிறார்கள்.

 கிட்டத்தட்ட 20
ஆயிரம் பேர் செத்திருக்கிறார்கள்.

10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள்
பாதிக்கப்
பட்டிருக்கிறார்கள்.

 பிறக்கும்
ஒவ்வொரு 25ஆவது குழந்தையும்
குறைபாடுடைய குழந்தையாகப் பிறக்கிறது.


ஆலையைச் சுற்றியுள்ள 3 கி.மீ.பரப்பளவுக்கு நிலத்தடி நீர்
நஞ்சாகியிருக்கிறது.

 இன்னமும் ‘யூனியன்
கார்பைடு’ விட்டுச்சென்ற 350 டன்
நச்சுக் கழிவு அகற்றப்படவில்லை.


*இந்தியாவில் தொழில்
தொடங்க உரிமம் கோரி,
யூனியன் கார்பைடு நிறுவனம் 1.1.1970இல் விண்ணப்பித்தது. நீண்ட
நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த
அந்த விண்ணப்பத்தின்
மீது 31.10.1975இல் திடீரென
முடிவெடுக்கப்பட்டு ஒப்புதல்
தரப்பட்டது.


நெருக்கடி நிலை அறிவிப்பு அமலில்
இருந்த காலம் அது.


*போபால் ‘யூனியன் கார்பைடு’ ஆலை மிக
அபாயகரமான ரசாயனங்களைக்
கையாள்வது அன்றைக்குப்
பெரும்பான்மை மக்களுக்குத்
தெரிந்திருக்கவில்லை.


கொள்கலன்
வெடித்து விஷ வாயு கசிந்தால்,
எப்படி எதிர்கொள்வது என்பது
மருத்துவர்களுக்குக்
கூடச்சொல்லப்
பட்டிருக்கவில்லை.


*சம்பவம்
முடிந்து நான்காவது நாள்
‘யூனியன் கார்பைடு’ நிறுவனத் தலைவர்
வாரன் ஆண்டர்சன் போபால்
வந்தார்.

மத்தியப் பிரதேச
அரசு அவரையும் அவருடைய இந்திய
சகாக்களையும் கைதுசெய்தது.


அவருடைய ஆலையின் விருந்தினர்
மாளிகையிலேயே அவர்
தங்கவைக்கப்பட்டார்.

 அடுத்த சில
மணிநேரங்களில்
ஆண்டர்சனை விடுவித்தார் அன்றைய முதல்வர்
அர்ஜுன் சிங்.


அரசு விமானத்திலேயே டெல்லிக்கு
அங்கிருந்து அமெரிக்கா செல்ல
வழிவகுத்தார்.

 அன்றைய தினம்
மத்தியப் பிரதேசத்தில்தான் சாகர்
என்ற ஊரில் இருந்தார்
வெளியுறவுத் துறையைத் தன்வசம்
வைத்திருந்த பிரதமர் ராஜீவ் காந்தி.

ஆனால், ஆண்டர்சன்
விவகாரம் அவருக்குத்
தெரியாது எனச் சாதித்தனர்
காங்கிரஸ் தலைவர்கள்.


இது தொடர்பான
பதிவுகளே வெளியுறவுத் துறையிடம்
இல்லை என்று பின்னாளில்
அறிவித்தது அரசு.


அமெரிக்க
நீதிமன்றங்களை நாட
ஆரம்பித்தார்கள் போபால் மக்கள்.


அமெரிக்காவில் இந்த
வழக்கை நடத்தினால், பெரும்
தொகையை இழப்பீடாகத்
தர வேண்டியிருக்கும்;


இந்தியாவிலேயே வைத்து முடித்துவிடலாம்
என்று ‘யூனியன் கார்பைடு’
நிறுவனத்துக்கு ஆலோசனை சொன்னது
இந்தியாவின் புகழ்பெற்ற
வழக்கறிஞர்கள்.

பல ஊடகங்களும்
விலைபோயின. ஆலை நிர்வாகத்தின்
அலட்சியத்தால் நடந்த இந்தச்
சம்பவத்தை,
தொழிலாளர்களின்
சதியால்
நடந்தது என்றெல்லாம்கூட
எழுதின.


இந்தியாவில்
வழக்கு விசாரணை நடக்க ஆரம்பித்த
பின், முதலில் இழப்பீடாக 300
கோடி டாலர்களைக் கேட்ட இந்திய அரசு,
ஒருகட்டத்தில் அமெரிக்க
நெருக்கடிக்கு உடன்பட்டு, 47
கோடி டாலர்களுக்குச் சம்மதித்தது.


இதையும் பெற மக்கள் 20 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.
உச்ச நீதிமன்றம் இறுதிக்
கெடு விதிக்க வேண்டியிருந்தது.


இடைப்பட்ட காலத்திலேயே ‘யூனியன்
கார்பைடு’ நிறுவனத்தைக்
கையகப்படுத்தியது ‘டௌ’ நிறுவனம்.

உலகின் மோசமான
தொழிற்சாலைப் பேரழிவான
இந்த வழக்கில் 26 ஆண்டுகளுக்குப்
பின் தீர்ப்பளித்தது நம்முடைய
நீதிமன்றம்.


குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட
தண்டனை: 2 ஆண்டு சிறை, ரூ. 1.01 லட்சம்
அபராதம்.


இத்தனை அனுபவங்களுக்குப் பின்னரும்,
சர்வதேச நிர்ப்பந்தங்களால் மக்கள்
பாதிப்படையும் வகையில்
அணுசக்தி இழப்பீட்டு மசோதாவை நிறை
சிங் அரசு.


*‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தின்
சார்பிலும் ‘டௌ’ நிறுவனம் சார்பிலும்
செயல்பட இங்கு பலருக்கும் எந்தத்
தயக்கமும் இருக்கவில்லை.
 நியூயார்க்
மாவட்ட நீதிமன்றத்தில் ‘யூனியன்
கார்பைடு’ சார்பில் ஆஜரானவர்
நானி பால்கிவாலா. ‘டைம்’
இதழுக்கு 1984இல் அளித்த பேட்டியின்போது,
“இந்தியாவில், ‘யூனியன் கார்பைடு’
நிறுவனத்துக்கு எதிராக
வழக்கு தொடரப்பட்டால்,
அடுத்த நூற்றாண்டில்தான்
தீர்ப்பு வரும்”
என்று சொன்னார்.


காங்கிரஸ் செய்தித்
தொடர்பாளரான அபிஷேக்
மனு சிங்வி, பாஜகவின் அருண் ஜேட்லி இருவருமே ‘டௌ’
நிறுவனத்துக்குச் சட்ட
ஆலோசனை வழங்கியவர்கள்.

2008இல்
பாஜக ‘டௌ’
நிறுவனத்திடமிருந்து நன்கொடை
பெற