திங்கள், 9 டிசம்பர், 2019

டிசம்பர் 9,
வரலாற்றில் இன்று.


 புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் பிறந்த தினம் இன்று (1608).

இவருக்கு சிறு குழந்தையில் இருந்தே கண்கள் தெரியாது. இரண்டு கண்கள் உள்ள நாமே சில வார்த்தைகளை சரியாக எழுத முடியாமல் திக்குமுக்காடும் நிலையில் ஒரு பார்வை இல்லாத மனிதர் உலகத்தின் மிகப் பெரிய இதிகாசங்களை மொழிபெயர்த்து எழுதி இருக்கிறார்.


ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்த படியான எழுத்தாளார் யார் என்று கேள்வி வந்தால் அதற்கு பதில் ஜான் மில்டன்  என்பார்கள். நாடகத்தை நீக்கிவிட்டு பார்த்தால் ஆங்கிலத்தில் சிறந்த கவிஞர் ஜான் மில்டன் தான் என்று ஆணித்தரமாக சொல்லும் அளவிற்கு ஒரு சிறந்த எழுத்தாளர்.தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்குத் துணை புரிந்தவர். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது. மில்டனின் இலக்கிய சுவை மட்டுமல்ல; அவரது எழுத்து நடையும் உலக மக்களிடம் பிரசித்தி பெற்றது. 'மில்டனைப் போல் எழுதுகிறாயே!'என்று பிற எழுத்தாளர்களைப் பாராட்டும் அளவிற்கு அவரது எழுத்தாற்றல் புலமை வாய்ந்தது.