சனி, 18 ஜனவரி, 2020

ஜனவரி 18, வரலாற்றில் இன்று.

எக்ஸ்ரே இயந்திரம் முதல்தடவையாக காட்சிப்படுத்தப்பட்ட தினம் இன்று (1896).

எக்ஸ் கதிர்கள் மிக அதிக ஆற்றல் வாய்ந்த கதிர்கள் ஆகும். இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இவற்றின் அலைநீளம் 10 நானோமீட்டர் முதல் 0.01 நானோமீட்டர் வரை இருக்கும்.

 வில்ஹம் கான்ரட் ராண்ட்ஜென்
 விர்ஸ்பொர் பல்கலைக்
கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப்
பணிபுரிந்து வந்தார்.
தனது ஆய்வுக்கூடத்தில் சில
வாயுக்களை வைத்து சோதனை செய்தார்.
வாயுக்களிலிருந்து வெளிப்படும்
மின்சாரம்பற்றிய ஆராய்ச்சியைச்
செய்து பார்த்தார். இந்த ஆய்வை,
ஒரு கேத்தோடு குழாயை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அந்த அறை முழுவதும்
இருட்டாக இருந்தது. கருப்புக்
காகிதத்தால் கேத்தோடு குழாயையும்
மூடி வைத்திருந்தார். அந்தக்
குழாய்க்கு அருகிலிருந்த
பிளாட்டிளா சையனைட் படிகம்
வெளிச்சம்பட்டு மின்னியுள்ளது.
ஆச்சரியத்தில் மூழ்கினார்.
குழாயிலிருந்து ஏதோ கதிர்
ஒன்று வெளிப்பட்டு குழாயை மீறி,
மூடி வைத்திருந்த கருப்புக்
காகிதத்தையும் தாண்டி வந்திருக்க
வேண்டும் எனக் கணித்தார்.
கண்களுக்குப் புலப்படாதவையாக
இருந்த இந்தக் கதிர்கள்
அதுவரையிலும் புதிதாகக்
கண்டுபிடிக்கப்படாததால் எக்ஸ்
ரே எனப் பெயர் வைத்தார்.
எல்லா ஒளிக்கதிர்களும்
போட்டோ தகடுகளில் படியும்
தன்மை கொண்டுள்ளதால் இவர்
கண்டுபிடித்த கதிர்களையும்
தகடுகளில் பதியவைக்க
ஆசைப்பட்டார். எனவே,
இக்கதிர்களை போட்டோ தகட்டில்
வைத்திருந்த
மனைவி கை மீது செலுத்திப்
பார்த்தார். செலுத்தியபின் அந்தத்
தகட்டிலுள்ள கருவியைப் பார்த்தார்.
அதில், அவரது மனைவியின்
கை எலும்புகளும் அவர்
அணிந்திருந்த மோதிரமும் தெரிந்தன.
1895 இல் - தனது 50 ஆவது வயதில்
இந்த அற்புதத்தை நிகழ்த்தினார்.
இவரது இந்தக் கண்டுபிடிப்புக்காக
1901 இல் உலகின் இயற்பியலுக்கான
முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இக்கதிர் அடிக்கடி ஊடுருவினால்
உடலுக்குப் பெரும்
பாதிப்பு உண்டாகும். ராண்ட்ஜென்
மற்றும் அவருடன்
ஆராய்ச்சி செய்தவர்கள் எக்ஸ்
ரே கதிர்களின்
பாதிப்பினாலேயே உயிரிழந்துள்ளனர்.