சனி, 2 மே, 2020

பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் இயங்கிடும் அனைத்து
ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் விடுபடுதல் இன்றி  தூய்மைப்பணியாளர்கள்  நியமிக்கப்பட வேண்டும்!அனைத்துப்பள்ளிகளிலும் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கும் மாதாந்திர ஊதியம் மற்றும் மாதாந்திர தூய்மைப்பொருள்களுக்கான தொகை இ்டையீடின்றி வழங்கப்படவேண்டும்!
பரமத்தி ஒன்றியத்தில்  12  சத்துணவு எடுப்புப்பள்ளிகளுக்கு தூய்மைப்பணியாளர் ஊதியம் கிடையாது என்பதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்  ஆட்சேபிக்கிறது. மேற்கண்ட 12 சத்துணவு எடுப்புப்பள்ளிகளின் தூய்மைப்பணிகளை மேற்கொள் வது யார்!? என்று வினா எழுவதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சுட்டிக்காட்டுகிறது.
நாமக்கல் மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை உதவி இயக்குநரிடம்  தமிழ்நாடு தொடக கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் ,பரமத்தி ஒன்றிய அமைப்பு வலியுறுத்திக் கோருகிறது!