புதன், 10 ஜூன், 2020

🌐ஜூன் 10,வரலாற்றில் இன்று:எழுத்தாளர் எட்வின் அர்னால்டு பிறந்த தினம் இன்று.

ஜூன் 10,
வரலாற்றில் இன்று.


எழுத்தாளர்
எட்வின் அர்னால்டு பிறந்த தினம் இன்று.


சர் எட்வின் அர்னால்டு (Sir Edwin Arnold) (10 சூன் 1832 – 24 மார்ச் 1904) ஆங்கிலக் கவிஞர், ஊடகவியலாளர் மற்றும் இதழாசியர் எனும் பன்முகங்கொண்ட இங்கிலாந்து நாட்டவர் ஆவார்.

கௌதம புத்தரின் வரலாற்றை ஆசியாவின் ஜோதி எனும் பெயரில் நூல் எழுதியமைக்காக உலக முழுவதும் அறியப்பட்டவர்.

இங்கிலாந்து நாட்டு ஆங்கிலேயரான எட்வின் அர்னால்டு, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகக் கல்லூரியில் படித்தவர். பின்னர் 1856இல் இந்தியாவில் உள்ள புனே சமசுகிருத மொழிக் கல்லூரியின் முதல்வராக ஏழு ஆண்டுகள் பணி புரிந்தார்.

பின்னர் இங்கிலாந்து திரும்பிய எட்வின் அர்னால்டு, 1861இல்
த டெயிலி டெலிகிராப் நாளிதழில் ஊடகவியலாளராகச் சேர்ந்து, அந்நாளிதழின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார்.


கௌதம புத்தரின் வாழ்க்கை குறித்து இவர் எழுதிய உலகப் பெற்ற படைப்பான ஆசியாவின் ஜோதி அல்லது பெருந்துறவு எனும் கவிதை நூல், இந்தி மற்றும் பிற உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.


 இவரது ஆசியாவின் ஜோதி நூல் மூலம், மேற்கு உலக மக்கள் புத்தரின் தத்துவங்களை முதன் முதலாக அறிந்து கொள்ள முடிந்தது.

இந்நூலை தேசிக விநாயகம் பிள்ளை, தமிழில் ஆசிய ஜோதி எனும் பெயரில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக