செவ்வாய், 2 ஜூன், 2020

*🌐ஜூன் 2, வரலாற்றில் இன்று:கவிஞரும், தமிழ்ப் பேராசியருமான அப்துல் ரகுமான் நினைவு தினம் இன்று (2017).*

ஜூன் 2, வரலாற்றில் இன்று.

 கவிஞரும், தமிழ்ப் பேராசியருமான அப்துல் ரகுமான் நினைவு தினம் இன்று (2017).

இவர் கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். புதுக்கவிதைத் துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் கவிக்கோ அப்துல் ரகுமான் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

இவரது முதல் கவிதை தொகுப்பு ‛பால்வீதி' 1974ம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதினார். இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை சொற்களால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார்.

 ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக