திங்கள், 29 ஜூன், 2020

*🌐ஜூன் 29, வரலாற்றில் இன்று:இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணித மற்றும் புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மகலனோபிஸ் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 29, வரலாற்றில் இன்று.

இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணித மற்றும் புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மகலனோபிஸ் பிறந்த தினம் இன்று.

இவர் 1893ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

இவர் பிறந்த நாள் தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்படுகிறது. கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் நண்பர் ஆவார். புள்ளியியல் மீதான ஆர்வமும் இவருக்கு அதிகம்.

கொல்கத்தாவில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை 1931-ல் நிறுவினார். மகலனோபிஸ் தொலைவு, ரேண்டம் சாம்ப்ளிங் முறை ஆகியவற்றை வரையறுத்துள்ளார்.

அமெரிக்க எகனாமிக் சொசைட்டியின் ஃபெலோஷிப், பத்மவிபூஷண், சீனிவாச ராமானுஜன் தங்கப்பதக்கம் என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் புள்ளி விவர வளர்ச்சி துறைகளில் மிக உன்னதமான பங்களிப்பை வழங்கிய மகலனோபிஸ் 79வது வயதில் (1972) மறைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக