திங்கள், 29 ஜூன், 2020

*ஜூன் 29, வரலாற்றில் இன்று:சர்வதேச புலிகள் தினம் இன்று.*

ஜூன் 29, வரலாற்றில் இன்று.

சர்வதேச புலிகள் தினம் இன்று.

புலிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் ஜுலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் 97 சதவீதம் அழிந்து விட்டன. அதாவது ஒரு லட்சம் புலிகளில், தற்போது வெறும் 3,200 புலிகள் மட்டுமே வாழ்கின்றன. உலகில் புலிகளின் இயற்கை வாழ்விடங்களில், 93 சதவீதம் அழிக்கப்பட்டு, அது விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறி விட்டது. புலிகள் இருந்தால் தான், காடு பாதுகாப்பாக இருக்கும்; நாடும் நன்றாக இருக்கும். புலி இருந்தால், அங்கு புள்ளி மான், யானைகள் அதிகளவில் இருக்கும். உணவுக்கு மான் போன்ற விலங்கினங்கள் இல்லாத போது புலிகள் நாட்டிற்கு உள்ளேயும் ஊடுருவுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக