செவ்வாய், 9 ஜூன், 2020

*🌐ஜூன் 9,* *வரலாற்றில் இன்று:நீரோ மன்னன் நினைவு தினம் இன்று(கி.பி.68).*

ஜூன் 9,
வரலாற்றில் இன்று.

நீரோ மன்னன் நினைவு தினம் இன்று(கி.பி.68).


ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம் என்று சொல்வதுண்டு. ஆனால் உண்மையில் நடந்தது என்ன?



ரோமானிய அரசை ஆண்ட Julio-Claudian வம்சத்தின் கடைசி வாரிசாக கிபி 54 இல் பதவியேற்கிறார் நீரோ.

இயற்கையிலேயே ரோமானிய கலாச்சாரத்திலும்,நுண்கலைகளிலும் ,
விளையாட்டிலும் ஆர்வங்கொண்ட நீரோ
அவற்றை ஊக்குவிற்கும் பொருட்டு அதற்கான பல தியேட்டர்களையும்
விளையாட்டு கூடங்களையும் கட்டினான்.
அவன் காலத்தில் ரோமானிய கலாச்சாரம் அனைத்திலும் சிறந்து விளங்கியது.

கிபி 64 ஆம் வருடம் ஜூலை மாதம் 18 தேதி இரவு ரோம் நகரத்தில் தீடீரென்று தீ பரவியது.
அகோரப் பசிகொண்ட அந்த தீ மொத்த ரோம் நகரையும் தின்று தீர்த்து சாம்பலாக்கியது.
மக்கள் பெரும் துயருக்குள்ளாகினர்.

ரோமப்பேரரசர் நீரோ கட்டாயத் தற்கொலைமூலம் இறந்தார். நீரோவுக்கு அப்போது வயது 30! கட்டாயத் தற்கொலை என்பது அக்காலத்தில் உயர்குடியினருக்கு மரண தண்டனை வழங்கும் முறையாக இருந்தது. 17 வயதில் ரோமப் பேரரசராகி, 13 ஆண்டுகள் ஆட்சி நடத்தியபின், நாட்டின் எதிரி என்று நீரோவை செனட் அறிவித்து, இத்தண்டனையை வழங்கியது.

 ரோம் எரியும்போது ஃபிடில் வாசித்தவருக்கு வேறென்ன கிடைக்கும் என்று தோன்றுகிறதா? உண்மை வேறு!

 தீப்பிடித்த கி.பி.64 ஜூலை 18 அன்று அவர் ரோம் நகரில் இல்லை. 50 கி.மீ. தொலைவிலுள்ள ஆண்ட்டியம் என்ற இடத்திலிருந்த அவரைச் செய்தி சென்றடைந்தவுடனே, ரோம் நகருக்குத் திரும்பிய நீரோ, எரிந்துகொண்டிருந்த தீயிலிருந்து மக்களை மீட்கும் பணியில் தானே நேரடியாக ஈடுபட்டதாக, நீரோ காலத்திய செனட்டரும், வரலாற்றாசிரியருமான டாசிட்டஸ் பதிவு செய்துள்ளார்.

 நிவாரணப் பணிகளுக்குத் தன் சொந்த நிதியை வழங்கியதுடன், பல நாட்கள் மெய்க்காவலர்கள்கூட இன்றி, இடிபாடுகளுக்கிடையே மக்களுடன் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

தீ விபத்தில் வீடிழந்தவர்கள் தங்க தன் அரண்மனைகளைத் திறந்துவிட்டதுடன், அவர்களுக்கு தட்டுப்பாடின்றி உணவுகளையும் வழங்கினார்.

 தீ விபத்திற்குப்பின், நகரை மறுசீரமைப்பதற்கும், அதற்கு முன்பே வணிகம், கலை, விளையாட்டு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கும் நீரோ விதித்த வரிகள் செல்வந்தர்களை கோபத்துக்கு
உள்ளாக்கின.
 அவர்களுக்கு ஆதரவாக கலகம் செய்த கிறித்தவ மதத்தலைவர்கள் உள்ளிட்டவர்களைத் தயங்காமல் நீரோ கொன்றார். இவற்றாலேயே கிறித்தவ வரலாற்றாசிரியர்கள், பிற்காலத்தில், அவரைப் பற்றி மிக மோசமாக எழுதினர். ஒரு பேரரசர் என்ற எல்லைக்குள் நிற்காமல், அனைத்து நிலைகளுக்கும் நீரோ இறங்கிப் பழகியது, அக்காலத்தில் அவரை ஒரு கோமாளியாகப் பார்க்கச் செய்ததும் இவர்களுக்கு வசதியாகிப் போனது. நீரோவின் மறைவிற்குப்பின், ஒரே (கி.பி.69) ஆண்டில் 4 பேரரசர்கள் வருமளவுக்கு ரோமப் பேரரசில் பிரச்சனைகள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக