திங்கள், 17 ஆகஸ்ட், 2020

🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15)அன்று சேந்தமங்கலம் ஒன்றியக் கிளையின் சார்பில் இயக்கக்கொடி ஏற்றி வைத்து,கல்வெட்டு திறப்பு செய்த விழா நிகழ்வு.

🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15)அன்று சேந்தமங்கலம்  ஒன்றியக் கிளையின் சார்பில் இயக்கக்கொடி ஏற்றி வைத்து,கல்வெட்டு திறப்பு செய்த விழா நிகழ்வு.



விழாவிற்கு ஒன்றியத் தலைவர் திரு.கா.செல்வம் அவர்கள் தலைமை வகித்தார்.ஒன்றியச் செயலாளர் வரவேற்புரையாற்றினார்.மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் திரு.ராஜேந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.இவ்விழாவில் சேந்தமங்கலம் ஒன்றிய,மாவட்ட,மாநில பொறுப்பாளர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதிப்புமிகு. பொன்னுசாமி, சேந்தமங்கலம் ஒன்றிய தி.மு.க.,செயலாளர் மதிப்புமிகு.அசோக்குமார், 
தி.மு.க.,வின் நாமக்கல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதிப்புமிகு.கதிர்வேல் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு இயக்கக்கொடியினை ஏற்றிவைத்து,கல்வெட்டினை திறந்து வைத்தனர்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் திரு.முருக.செல்வராசன் அவர்கள் கலந்து கொண்டு இயக்கவுரையாற்றினார்.மன்றத்தின் மூத்தோர் அணி அமைப்பாளர் திரு.சுப்ரமணியன் அவர்கள் கொடிக்கம்ப கல்வெட்டினை அமைக்கத் தேவையான நிதியினை அன்பளிப்பாக வழங்கினார்.

பாவலர்.திரு.க.மீ., அவர்களை போற்றுவோம்!
*********************
கொல்லிமலை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதிப்புமிகு. பொன்னுசாமி, சேந்தமங்கலம் ஒன்றிய தி.மு.க.,செயலாளர் மதிப்புமிகு.அசோக்குமார், 
தி.மு.க.,வின் நாமக்கல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதிப்புமிகு.கதிர்வேல் ஆகியோர் கலந்துக்கொண்ட சேந்தமங்கலம் ஒன்றிய நிகழ்வில் 
பங்கேற்று பாவலர் திரு.க.மீ.,அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தினேன்.
-முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக