திங்கள், 2 நவம்பர், 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் நாள்:02.11.2020 நிகழ்வுகள்.

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்*   
*நாமக்கல் மாவட்ட  ஒன்றியச் செயலாளர்கள்* *கூட்டம் ப.வேலூர் ஆசிரியர் மன்ற அலுவலகத்தில் 02.11.2020 ( திங்கட்கிழமை) பிற்பகல் 05.30 மணியளவில் நடைபெற்றது.* 

*இக்கூட்டம் திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர் திரு.சி.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. பரமத்தி ஒன்றியச்செயலாளர் திரு.க.சேகர் பொறுப்பாளர்களை இனிதே வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்*

*மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் கூட்டப்பொருள்களை  விளக்கி தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றினார்.*

*மாநிலச் செயலாளர் திரு.முருக செல்வராசன் இயக்கப் பேருரையாற்றினார்.*

*இக்கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.ரவிக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் திரு.வெ.வடிவேல், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.ப.சதீஷ்,      மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.கு.பாரதி, ஒன்றியச் செயலாளர்கள் திரு.அ.ஜெயக்குமார் (நாமக்கல்), திரு.கா.சுந்தரம் (சேந்தமங்கலம்),  சேந்தமங்கலம் ஒன்றியத் தலைவர் திரு.கா.செல்வம், திருச்செங்கோடு ஒன்றியப் பொருளாளர் திரு.சிவக்குமார், புதுச்சத்திரம் ஒன்றிய கொள்கை விளக்கக் செயலாளர் திரு.இரா.தேசிகன், கபிலர்மலை ஒன்றிய பொறுப்பாளர்கள் திரு.இர.மணிகண்டன், திருமதி.த.செந்தாமரை ஆகியோர் கலந்து கொண்டனர்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக