சனி, 27 பிப்ரவரி, 2021

*💵BeAlert: இந்த மெசேஜ் வந்தால் இதை உடனே செய்யுங்கள் இல்லையென்றால் உங்கள் பணம் சுவாகா- எஸ்பிஐ.!ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.*

*💵BeAlert: இந்த மெசேஜ் வந்தால் இதை உடனே  செய்யுங்கள் இல்லையென்றால் உங்கள் பணம் சுவாகா- எஸ்பிஐ.!*

*ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.*

*யுபிஐ மோசடிக்கு எதிராக எச்சரிக்கை:*

*ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, எஸ்பிஐ வாடிக்கையாளர்களை அவ்வப்போது எச்சரித்து வருகிறது. தற்போது யுபிஐ மோசடிக்கு எதிரான எச்சரிக்கையை விடுத்துள்ளது. உடனடி கடன் செயலியை பயன்படுத்த வேண்டாம் என ஏற்கனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்களை எச்சரித்திருந்தது.*

*எந்தவொரு கடிதமும் இல்லாமல் இரண்டு நிமிடங்களில் உங்களுக்கு கடன் வழங்குவதாகக் கூறும் எந்த உடனடி கடன் செயலியையும் பயன்படுத்தவேண்டும் என கூறியது.*

*பெரும்பாலும் மக்கள் உடனடி கடன் செயலி பயன்படுத்தியதால், உடனடி கடன் செயலி முலம் பெறப்படும் கடனுக்கு அளவுக்கதிகமான வட்டி வசூலிக்கப்பட்டதால் இதனால் வட்டி செலுத்த முடியாமல் சிலர் மன உளைச்சலில் மரணம் வரை சென்றதால் இந்த எச்சரிக்கையை வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வழங்கியது.*

*இந்நிலையில், எஸ்பிஐ தனது ட்விட்டர் மூலம் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. அதில், யுபிஐ பரிவர்த்தனை உங்களால் செய்யப்படாமல் பணத்தை டெபிட் செய்வதற்கான எஸ்எம்எஸ் கிடைத்தால், முதலில் யுபிஐ சேவையை நிறுத்துங்கள், யுபிஐ சேவையை மூடுவது குறித்து வங்கி தகவல்களை அளித்துள்ளது.*

*UPI சேவையை எவ்வாறு முடக்கலாம்:*

*யுபிஐ சேவையை நிறுத்த எஸ்பிஐ வங்கி சில குறிப்புகளை வழங்கியுள்ளது. அதில் கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண் 1800111109 ஐ அழைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் யுபிஐ சேவையை நிறுத்தலாம். அல்லது ஐவிஆர் எண்ணை 1800-425-3800 / 1800-11-2211 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம்.*

*இது தவிர, https://cms.onlinesbi.sbi.com/cms/ என்ற முகவரியில் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். அங்கேயே 9223008333 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக