புதன், 12 ஜனவரி, 2022

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வெண்ணந்தூர் சரக (கிளை) பொருப்பாளர்கள் நேற்று (10.O1.2022) திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் வெண்ணந்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி.கா.வளர்மதி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வெண்ணந்தூர் சரக (கிளை) பொருப்பாளர்கள் நேற்று (10.O1.2022) திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் வெண்ணந்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி.கா.வளர்மதி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். இச்சந்திப்பில் வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களிடம் வைக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகள்... 1.ஜாக்டோ ஜியோ போராட்டக் காலத்தில் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் போராட்ட நாட்களைப் பணிவரன்முறைப் படுத்தியும்,அந்நாட்களுக்கு உண்டான ஆணையினையும் பணப் பலன்களையும் உடனடியாக வழங்கிட வேண்டும். 2.பொங்கல் பரிசுத்தொகையை பண்டிகை வருமுன்னரே பெற்று வழங்கிட வேண்டும். 3.விழாக் காலமுன்பணத்திற்கு விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் முன்பணம் பெற்று வழங்கிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் அளிக்கப்பட்டது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக