திங்கள், 31 ஜனவரி, 2022

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பரமத்தி ஒன்றிய செயற்குழுக் கூட்டம் 29/01/2022

 *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பரமத்தி ஒன்றிய செயற்குழுக் கூட்டம் 29/01/2022 சனி பிற்பகல் 5 மணியளவில் ஊ.ஒ.தொ.பள்ளி,பரமத்தியில் நடைபெற்றது.* *இக்கூட்டம் ஒன்றியத் தலைவர் திரு.நா.ரங்கசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.ப.சதீஷ்,ஒன்றியப் பொருளாளர் திருமதி.கு.பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.* *ஒன்றிய கொள்கை விளக்கச் செயலாளர் திருமதி.மா.மலர்விழி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.* *மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.* *மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி,மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.* *ஒன்றியச் செயலாளர் திரு.க.சேகர் அவர்கள் தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.* *மாநிலப் பொருளாளர் திரு.முருக.செல்வராசன் அவர்கள் இயக்கவுரை ஆற்றினார்.* *இக்கூட்டத்தில்* *துணைச்செயலாளர் திரு.ச.காமராசு,ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் திருமதி.வி.மாலதி,மகளிரணி துணை அமைப்பாளர் திருமதி.பொ.அன்பரசி,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.லூ.சூசை அந்தோணி,ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் திரு.ப.கந்தசாமி,துணை அமைப்பாளர் திருமதி.ஜெ.கலைவாணி,உறுப்பினர் திருமதி.பெ.குப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.* *நிறைவாக ஒன்றியப் பொருளாளர் திருமதி.கு.பத்மாவதி அவர்கள் நன்றியுரையாற்றினார்.*










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக