புதன், 30 மார்ச், 2022

.ஆர். ரஹ்மான் இசையில் தாமரையின் வரிகளில் உருவாகியிருக்கம் 'மூப்பில்லா தமிழே தாயே' பாடல்

 ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தாமரையின் வரிகளில் உருவாகியிருக்கம் 'மூப்பில்லா தமிழே தாயே' பாடல் அட்டகாசமாக இருக்கிறது. பாருங்களேன்!https://www.youtube.com/watch?v=JDYiJGTOFHU https://www.youtube.com/watch?v=JDYiJGTOFHU "திசை எட்டும் தமிழே எட்டும் தித்தித்தும் முரசும் கொட்டும் மதிநுட்பம் வானை முட்டும் மழை முத்தாய் கடலில் சொட்டும் அகம் என்றால் அன்பாய் கொஞ்சும் புறம் என்றால் போராய் பொங்கும் தடையின்றி காற்றில் எங்கும் தமிழ் என்று சங்கே முழங்கும் உறங்காத பிள்ளைக்கெல்லாம் தாலாட்டாய் தமிழே கரையும் பசியென்று யாரும் வந்தால் பாகாகி அமுதம் பொழியும் கடை வள்ளல் எழுவர் வந்தார் கொடை என்றால் உயிரும் தந்தார் படை கொண்டு பகைவர் வந்தார் பல பாடம் கற்றுச் சென்றார் மூவேந்தர் சபையில் நின்று முத்தமிழின் புலவர் வென்றார் பாவேந்தர் என்றே கண்டால் பாராளும் மன்னர் வந்தார் அன்னைக்கும் அன்னை நீயே அடிவானில் உதயம் நீயே முன்னைக்கும் முன்னை நீயே மூப்பில்லா தமிழே தாயே காலங்கள் போகும்போது மொழி சேர்ந்து முன்னால் போனால் அழிவின்றி தொடரும் என்றும் அமுதாகி பொழியும் எங்கும் உன்னிப்பாய் கவனம் கொண்டோம் உள் வாங்கி மாறிச் செல்வோம் பின் வாங்கும் பேச்சே இல்லை முன்னோக்கி சென்றே வெல்வோம் அன்னைக்கும் அன்னை நீயே அடிவானில் உதயம் நீயே முன்னைக்கும் முன்னை நீயே மூப்பில்லா தமிழே தாயே பழங்காலப் பெருமை பேசி படிதாண்டா வண்ணம் பூசி சிறை வைக்கப் பார்ப்பர் தமிழே நீ சீறி வா வா வெளியே மொழியில்லை என்றால் இங்கே இனமில்லை என்றே அறிவாய் விழித்துக்கொள் தமிழா முன்னே திளைத்துக்கொள் தமிழால் உன்னை தமிழ் எங்கள் உயிரே என்று தினந்தோறும் சொல்வோம் இன்று உனை அன்றி யாரைக் கொன்டு உயர்வோமோ உலகில் இன்று அன்னைக்கும் அன்னை நீயே அடிவானில் உதயம் நீயே முன்னைக்கும் முன்னை நீயே மூப்பில்லா தமிழே தாயே"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக